Friday, 1 April 2016

நீரழிவு என்றால் என்ன?

உலகில் உள்ள மக்களில் பெரியவர் முதல் சிறியவர் வரை அதிகமானவர்களை பாதிக்கும் ஒரு வியாதி என்றால் அது Sugar என்று சொல்லகூடிய நீரழிவு நோய். இந்நோயை சர்க்கரை நோய் மற்றும் மதுமேகம் என்றும் கூறுவார்கள்.

நீரழிவு நோய் நம் உடலில் உருவாக காரணம் என்னவெனில், நமது உடல், இரத்தத்திலுள்ள குளுக்கோஸை ஆற்றலுக்காகப் பயன்படுத்துகின்றன, இரத்த குளுக்கோஸை உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றக்கூடிய வேலையை இன்சுலின் என்னும் சுரப்பி செய்கிறது. இந்த இன்சுலின் சரியாக சுரக்காமல் போகும் பொழுது நமது உடலால் இரத்த குளுக்கோஸை ஆற்றலாக மாற்ற முடியாமல் போகிறது இந்த நிலையை நீரழிவு என்று கூறலாம்.

நீரழிவின் வகைகள்....

டைப் 1 நீரழிவு நோய் [Type 1 Sugar] இது நமது உடலில் இன்சுலின் சுரப்பி மொத்தமாக சுரக்காத நிலை, டைப் 2 நீரழிவு நோய் [Type 2 Sugar] இது இன்சுலின் கம்மியாக சுரக்கும் நிலை.
உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றப்பட்ட இரத்த குளுக்கோஸ் தவிர உடலில் தங்கும் குளுக்கோஸ் கழிவாக வெளி ஏறாமல் உடலில் தங்கினால் ஹை சுகர் [High Sugar] என்றும் தேவைக்கு குறைவாக இரத்த குளுக்கோஸ் கிடைத்தால் அது லோ சுகர் [Low Sugar] என்றும் அழைக்கப்படுகிறது.

இது நீரழிவு நோயை பற்றி நாம் எளிமையாக தெரிந்து கொள்ள கூடிய விஷயம்.

இரத்த குளுக்கோஸ் அளவுகள் அதிகமாக அல்லது குறைவாக இருப்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது?

திடீரென்று மயக்கம் ஏற்பட்டால் அதுவும் உணவு உண்ணும் நேரம் சிறிது தாமதம் ஆகும்போது ஏற்படும் தலைசுற்றுடன் கூடிய மயக்கம்.
ஒரு நாளில் அதிகமாக சிறுநீர் கழித்தல் குறிப்பாக இரவு நேரங்களில்.
வழக்கத்தைவிட அதிகமாக தாகம் எடுத்தல்.
களைப்பாக உணர்தல்.
உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடை குறைதல்.
வெட்டுக் காயங்கள் மற்றும் புண்கள் ஆறுவதற்கு அதிக நாட்களாகும் போது.

நோயை உணர்ந்த பின் என்ன செய்ய வேண்டும்.

நீரிழிவைக் குணப்படுத்த முடியாது, ஆனால் அதை உங்கள் கட்டுப்பாட்டில் வைக்க என்ன செய்ய வேண்டும் அன்று பார்போம்.

உங்கள் உணவில் நீங்கள் மாற்றங்களைச் செய்வதுடன் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

உடற்பயிற்சி செய்யுங்கள், அதாவது நடைபயிற்சி, யோகா, சைக்கிள் ஓட்டுவது மற்றும் ஜாக்கிங் இவற்றில் உங்களுக்கு முடிந்த பயிற்சியை செய்யவும், அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்யலாம்.
நீங்கள் வழக்கமாக சாப்பிடும் உணவை ஒரே சமயத்தில் சாப்பிடாமல் 2 மணி நேரம் இடைவெளி விட்டு பிரித்து உண்ணவேண்டும்.
நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கறிகள், பழம், சர்க்கரை சேர்க்காத பழச்சாறு, பருப்பு மற்றும் பயிறு ஆகியவற்றை அதிகமாகச் சாப்பிடுங்கள்.
வாழைத்தண்டு அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சிறு குறிஞ்சாங் கீரையும் சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்தாகும் இதனை வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து கொள்ளலாம்.
இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
கறிவேப்பிலை மற்றும் வேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு காலை வெறும் வயற்றில் சாப்பிட்டு மோர் அருந்த நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் நடுக்கம் தீரும்.
அசைவ பிரியர்கள் மீனை தாராளமாக உண்ணலாம் [எண்ணெயில் பொறித்த மீனை தவிர்க்கவும்] கொழுப்பு நீக்கிய இறைச்சியைக் குறைவாக சாப்பிடவும் (தவிர்ப்பது நல்லது).
தாவர மற்றும் ஆலிவ் எண்ணெயை சமையலுக்கு உபயோகியுங்கள், ஆனால் அதையும் குறைவாகவே பயன்படுத்துங்கள்.
பிஸ்கெட்டு, சாக்லேட், எண்ணெயில் பொறித்த மொறுமொறுப்பான பண்டங்கள் மற்றும் சர்க்கரை அதிகமாக உள்ள சிற்றுண்டிகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
பால் உபயோகிக்கும் போது கொழுப்பு நீக்கிய அல்லது பாதியளவு கொழுப்பு நீக்கிய பாலைப் பயன்படுத்துங்கள்.
செயற்கைப் பானங்கள், மில்க் ஷேக்குகள் மற்றும் சர்க்கரை சேர்த்த பானங்களுக்கு பதிலாக நிறைய தண்ணீர் குடியுங்கள்.
கார்போஹைட்ரேட்டு நிறைந்த உணவை சாப்பிடுவதையோ அல்லது குடிப்பதையும் தவிர்க்கவும்.
வெகு நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்காதிர்கள் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக ஓரே இடத்தில் அமர வேண்டாம். கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும் [முடியாத பட்சத்தில் இறங்கும்போது தவிர்க்கவும்].
சர்க்கரை நோயால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து விடும் இவர்களை எளிதில் பிற நோய் தாக்கும், எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
அதிக உடல் எடை இருந்தால், அதைக் குறைக்க வேண்டும் அதற்கு உடற்பயிற்சி அவசியம்.
உங்களுக்கு புகை, மது மற்றும் போதை பழக்கம் இருந்தால் நிறுத்திவிடுங்கள்.

நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய இயற்கை மருந்துகள்...

மக்களை வாட்டி வதைக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இயற்கை மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

நாவல்பழக் கொட்டை :

நாவல் பழக் கொட்டைகளை காயவைத்து நன்கு இடித்து பொடி செய்து தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

மாந்தளிர் பொடி :

மாமரத்தின் தளிர் இலைகளை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு. அந்த பொடியை ஒரு ஸ்பூன் அளவு ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தினமும் காலையில் அருந்தி வந்தால் நீரழிவு நோய் குறையும்.

வேப்பம்பூ பொடி :

வேப்பம் பூ, நெல்லிக்காய் பொடி, துளசி பொடி, நாவற்கொட்டை பொடி ஆகியவற்றை கலந்து வைத்து கொள்ள வேண்டும் அந்த கலவையை தினமும் அரைக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

இசங்கு வேர் :

இசங்கு வேரை உலர்த்தி பொடியாக்கி தினமும் 5 கிராம் அளவு நீரில் கலந்து அருந்தினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரை :

நீரழிவு நோயாளிகளுக்கு வெந்தயம் மிகவும் நல்லது வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அந்த வெந்தயம் மற்றும் நீரை குடித்து வந்தால் நீரிழிவு குறையும். வெந்தையக்கீரை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோய் கட்டுப்படும் உடலில் அதிக கொழுப்புச் சத்து தங்குவதை தடுக்கும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்கலாம்.

அவரைக்காய் :

பிஞ்சு அவரைக்காயை நறுக்கி பொரியல் செய்து தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.

பாதாம் பருப்பு :

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் நீரிழிவு குணமாகும்.

ஆவாரம்பூ :

ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தலாம் அல்லது காலையில் 5 ஆவாரம்பூவை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடலாம் அல்லது ஆவாரம்பூவை காயவைத்து பொடி பண்ணி சுடு நீரில் கலந்து குடிக்கலாம்.

கொய்யா இலை டீ:

தினம் டீ குடிப்பதற்கு பதில் கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய் சேர்த்து டீ போல் அருந்தலாம் [பால் சேர்க்க கூடாது டீ வாசனை வேண்டும் என்றால் சிறிது டீ தூள் சேர்த்து கொள்ளலாம்].

கோவைக் காய் மற்றும் பழம் :

கோவைக் காயை பொரியல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும், கோவைப் பழமும் நீரிழிவு வியாதி உள்ளவர்களுக்கு நல்லது.

கொய்யா பழம் :

இப்போதைய உணவுப் பொருட்களில் இரசாயனம் அதிகம் கலந்து இருப்பதால் உணவுக்குப் பின் ஒரு கொய்யா சாப்பிட்டால் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல், மண்ணீரல் போன்ற உறுப்புகளைப் பலப்படுத்தும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். நீரிழிவு வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் உகந்த பழம்.

பாகற்காய் பொடி:

பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அடித்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் 1 தேக்கரண்டி சாப்பிட்டால் குணமாகும்.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய ஒரு சில பொடிகள் சர்க்கரை நோய் குணப்படுத்தும் சக்தி உடையது, இவற்றை சுடு நீரில் கலந்து குடிக்கலாம், அவை

சிறியாநங்கை பொடி

கருஞ்சீரகப்பொடி

வெந்தய பொடி

மருந்தே வேண்டாம்....

உணவு கட்டுப்பாடு மிக அவசியம் அதாவது கண் பார்த்த உணவை எல்லாம் உண்ண ஆசை படக் கூடாது மேலும் உடற்பயிற்சி மிக முக்கியம்.

வெண் சர்க்கரையை (சீனியை) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.

இந்த கட்டுரை மூலம் நீரழிவு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி, நீரழிவு நோய் பற்றிய பயம் மற்றும் நீரழிவு இல்லாத வாழ்க்கையை இதை படித்தவர்கள் பெற வேண்டும் என்பது எனது நோக்கம்.

எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முக்கியமான முதலுதவி சிகிச்சை.
தினமும் அதிகாலையில் துயில் எழுந்தவுடன் பல் துலக்குமுன் ஆறு குவளை (1.26 லிட்டர்) நீர் பருகுவதால், உடலின் உட்புற உறுப்புக்கள் தூய்மையாக்கப்பட்டு, கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. வெப்பம் குறைந்து, குளிர்ச்சி பெற்று, மலச்சிக்கல் மறைகின்றது. (இதை நம் முன்னோர்கள் 'உஷை பானம்'என்றழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது)

தண்ணீரைக் குடித்தபிறகு, ஒரு மணி நேரத்திற்கு காபி, டீ போன்றபானங்களையோ,பிஸ்கட், பழம் போன்ற தின்பண்டங்களையோ சாப்பிடக் கூடாது. இது மிக மிக அவசியமானது, முக்கியமானது. இதைக் கவனத்தில் கொண்டு நடைமுறைப் படுத்த வேண்டும்.

காலையில் தண்ணீர் குடிப்பதற்குத் தயாராகும் வகையில், முதல் நாள் இரவுச் சாப்பாட்டை முடித்த பிறகு, படுக்கைக்குச் செல்லுமுன்பு, நரம்புமண்டலத்தைத் தூண்டக்கூடிய பானங்களையோ, பொருட்களையோ (மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள்) சாப்பிடக்கூடாது. இந்த நிபந்தனையும் முக்கியமானது. இரவே பல் துலக்கிக்கொள்வது நல்லது.

தண்ணீரில் கிருமிகள் கலந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருக்குமானால், அதை முதல் நாள் இரவே கொதிக்க வைத்து, ஆற வைத்து வடிகட்டி, பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.

🏾இம்முறை ஆரம்பத்தில் ஒரு சில நாட்களுக்கு சற்று சிரமமாகத் தோன்றலாம். பின்னர் பழக்கமாகிவிடும்.

மருந்து, மாத்திரை, ஊசி, டாக்டர், பணச் செலவு ஆகிய எதுவுமே இல்லாமல், இம்முறைப்படி நீரைப் பருகுவதால், கீழ்க்கண்ட நோய்கள் குணமாகின்றன:-

தலைவலி
இரத்த அழுத்தம்
சோகை
கீல்வாதம்
பொதுவான பக்கவாதம்
ஊளைச்சதை
மூட்டுவலி
காதில் இரைச்சல்
இருதயப் படபடப்பு
மயக்கம்
இருமல்
ஆஸ்த்மா
சளி
காசநோய்
மூளைக் காய்ச்சல்
கல்லீரல் நோய்கள்
சிறுநீரகக் கோளாறுகள்
பித்தக் கோளாறுகள்
வாயுக் கோளாறுகள்
வயிற்றுப் பொருமல்
இரத்தக் கடுப்பு
மூலம்
மலச்சிக்கல்
உதிரப்போக்கு
நீரழிவு
கண் நோய்கள்
கண் சிவப்பு
ஒழுங்கில்லாத மாதவிடாய்
வெள்ளை படுதல்
கர்ப்பப்பை புற்றுநோய்
மார்புப் புற்றுநோய்
தொண்டை சம்பந்தமான நோய்கள்

நம்பவே முடியவில்லையே! சந்தேகம் கலந்த ஆச்சரியம் மேலிடுகிறது அல்லவா? இந்த முறை ஜப்பானில் பரவலாகக் கடைபிடிக்கப்படுகிறது.

🔬சோதனைகள் மூலமாகவும், அனுபவபூர்வமாகவும் கீழ்க்கண்ட நோய்கள் குணமாக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

மலச்சிக்கல் - ஒரே நாளில்
வயிற்றில் பித்தம் மற்றும் வாயுப் பொருமல் - இரண்டு நாட்கள்
சர்க்கரை வியாதி - ஏழு நாட்கள்
இரத்த அழுத்தம் - நான்கு வாரங்கள்
புற்று நோய் - ஆறு மாதங்கள்
காசநோய் - மூன்று மாதங்கள்
நமது வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் வாரக்கணக்கில் சும்மா இருக்கும் ஐஸ் கட்டியை எடுத்து, நமது தலையும், கழுத்தும் இணையும் அந்த இடத்தில் ஒரு 20 நிமிடங்கள் வைத்துக் கொள்ளுங்கள்...
*
இது "பெங்க் ப்பூ" என்ற சீன வழக்கம். தமிழிலில் இதனை "காற்று மண்டலம்" என்பார்கள்..
*
*
முதலில் ஓரிரு நிமிடங்கள் ரொம்பவும் "ஜில்"லென்று இருக்கும். சிறிது நேரத்திற்கு பிறகு அதுவே கதகதப்பாக மாறிவிடும்.
*
இந்த ஐஸ் கட்டி என்ன செய்யும்...???
*
*
இந்த ஐஸ் கட்டி நமது உடலுக்கு "எண்டார்பின்" என்ற ரசாயனத்தை தரும்.
*
இதனால் நமக்கு உற்சாகம், சந்தோசம், அமைதி கிடைக்கும்.
*
தூக்கமின்மை போய்விடும், ஜீரணம் சீராகும், அடிக்கடி சளித்தொல்லை இருக்காது, உடல் ரீதியான வலி, மூட்டு வலி, இதய நோய்கள் போய்விடும்.
*
முதுகுத்தண்டு பிரச்சனைகள் தீரும். தைராய்டு சுரப்பி குறைபாடு தீரும். ஆஸ்துமா நோய் தீரும்.
*
அதிக எடை குறையும், குறைந்த எடை கூடும்.
*
மன உளைச்சல், ஆழ் மனக்கவலை, அயர்ச்சி எல்லாம் பறந்துவிடும்.
*
*
இது நோய் தீர்க்கும் மருந்தல்ல...
*
உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து, நோய்களை விரட்டும் அற்புத சக்தியை கொடுக்கும் எளிமையான பயிற்சி.
தலைவலி :-
ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
தொண்டை கரகரப்பு :-
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.
நெஞ்சு சளி :-
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும்.
தொடர் விக்கல் :-
நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
வாய் நாற்றம் :-
சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
உதட்டு வெடிப்பு :-
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வந்தால் உதட்டு வெடிப்பு குணமாகும்.
அஜீரணம் :-
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.
குடல்புண் :-
மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும்.
வாயுத் தொல்லை :-
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.
வயிற்று வலி :-
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்தால் வயிற்று வலி நீங்கும்.
மலச்சிக்கல் :-
செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.
சீதபேதி :-
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
பித்த வெடிப்பு :-
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
மூச்சுப்பிடிப்பு :-
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
சரும நோய் :-
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.
தேமல் :-
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.
மூலம் :-
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.
தீப்புண் :-
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வந்தால் தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
மூக்கடைப்பு :-
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
வறட்டு இருமல் :-
எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்
பித்தப்பை கற்களை நாமாகவே அகற்றலாம்..!

புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம். மேலும் இந்த வழிமுறை, வலுவிழந்த நமது கல்லீரலை, புத்துணர்வு பெறவும் உதவுகிறது.

ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும். பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும்.

ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக்னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும்.

எப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும்.
இரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாறுடன் நன்கு கலக்கி குடிக்கவும். இது பித்தப்பை குழாய் வழியே, கற்கள் வெளியேற வழிவகுக்கும்.

அன்றைய தினத்தில், இரவு நேர உணவை தவிர்க்க வேண்டும்.

மறுநாள் காலை, இயற்கை உபாதையில், பச்சை நிற பித்தப்பை கற்கள் வெளியேறி இருப்பதை காணலாம்.
உடல் எடையை குறைக்கும் வெள்ளரிக்காய் ஜுஸ்

தேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய் – 1
பச்சைமிளகாய் – பாதி
தயிர் – 1 கப்
பெருங்காயம் – சிறிது
மாங்காய் – 2 துண்டு
இஞ்சி – 1/2 இன்ச்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
செய்முறை

வெள்ளரிக்காய், இஞ்சி, மாங்காய் முதலியவற்றின் தோலை சீவி நறுக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் வெள்ளரிக்காய், இஞ்சி, பச்சைமிளகாய், தயிர், பெருங்காயம், மாங்காய், உப்பு, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும். வெள்ளரிக்காயில் விதைகள் இருந்தால் எடுத்து விடவும். அரைத்ததை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி கொத்தமல்லி தூவி பருகலாம். வெள்ளரிக்காயை சமைக்கும் போது அதிலுள்ள சத்துக்கள் அழிந்து விடுகின்றன. ஆதலால் வெள்ளரிக்காயை கூடுமான வரை பச்சையாக சாப்பிடுவது நல்லது. வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சியை தரக் கூடியது.

Thursday, 11 June 2015

தினமும் ஒரு கப் இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
சமையலில் உணவின் சுவையை அதிகரிக்க உதவும் ஒரு உணவுப் பொருள் தான் இஞ்சி. இத்தகைய இஞ்சியில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. அதிலும் இதனை டீ போட்டு குடிப்பது இன்னும் நல்லது. இதனால் அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருந்து, அதன் மூலம் முதுமைத் தோற்றம் தள்ளிப் போகும். அதிலும் இதனை பாலுடன் சேர்த்து குடிப்பதை விட, கொதிக்கும் நீரில் தட்டிப் போட்டு, கொதிக்க விட்டு தேன், புதினா சேர்த்து கலந்து குடித்தால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். எனவே தினமும் மறக்காமல் ஒரு கப் இஞ்சி டீ குடித்து வாருங்கள்
வயிற்று பிரச்சனைகள் :-
நீங்கும் வயிறு உப்புசமாகவும், உணவு செரிமானமாகாலும் இருந்தால், அப்போது ஒரு கப் இஞ்சி டீ குடித்தால், அதில் உள்ள மருத்துவ குணங்களால் செரிமானம் சீராக நடைபெற்று, உப்புசம், வயிற்று வலி, செரிமான பிரச்சனைகள் எல்லாம் நீங்கும்.
சுவாச பிரச்சனைகள் :-
பருவ காலம் மாறும் போது சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளாகக்கூடும். அப்போது ஒரு கப் இஞ்சி டீ குடித்து வந்தால், சுவாச குழாய்களில் ஏதேனும் கிருமிகள் இருந்தால், அவை வெளியேறி சுவாச பிரச்சனைகள் நீங்கும். அதிலும் ஆஸ்துமா உள்ளவர்கள், இஞ்சி டீ குடிப்பது நல்லது.
மூட்டு பிரச்சனைகள் :-
மூட்டு வலி மற்றும் மூட்டுகளின் உள்ளே காயங்கள் இருப்பவர்கள், இஞ்சி டீ குடித்து வந்தால் அதில் உள்ள மருத்து குணங்களால் அனைத்து மூட்டு பிரச்சனைகளும் நீங்கும்.
மாதவிடாய் பிரச்சனைகள் :-
மாதவிடாய் காலத்தில் வயிற்று வலியால் கஷ்டப்படுபவர்கள், இஞ்சி டீயை குடித்து வந்தால், வயிற்று வலி மற்றும் வயிற்று பிடிப்பு ஏற்படுவது குறையும்.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் :-
இஞ்சி டீயில் வைட்டமின் சி, மக்னீசியம், கனிமச்சத்துக்கள், அமினோ ஆசிட்டுகள் போன்றவை அதிகம் இருப்பதால், அவை இரத்தம் உறைவதைத் தடுத்து, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதய நோய்கள் வரும் வாய்ப்பைத் தடுக்கும்.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் :-
இஞ்சி டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். மேலும் இஞ்சி தமனிகளில் கொழுப்புக்கள் படிவதைத் தடுத்து, பக்கவாதம் வருவதைத் தடுக்கும்.
மன அழுத்தத்தைக் குறைக்கும் :-
மன அழுத்தத்தில் இருக்கும் போது, ஒரு கப் இஞ்சி டீ குடித்து பாருங்கள். இதனால் மன அழுத்தம் குறைந்து, உடனடி புத்துணர்ச்சி கிடைக்கும்