Sunday, 19 August 2012

நம்மாழ்வார் சொல்லும் நான்கு ரகசியங்களை பின்பற்றினாலே போதும் வாழ்வில் நோயற்ற வாழ்க்கைச் சூழலில் வாழலாம் !!!

இருளும் ஒளியும் சந்திக்கும் அதிகாலையில் விழிப்பு, தாவரங்களோடு உரையாடிக்கொண்டே பண்ணைத் தோட்டத்தில் ஒரு நடைப்பயிற்சி, கொஞ்சம் யோகாசனம்,கொஞ்சம் மூச்சுப்பயிற்சி என்று தன் நாளை ரம்மியமாய் ஆரம்பிக்கிறார் நம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல் உற்சாகமாக உழைத்துவரும் நம்மாழ்வார். 


''எனது ஆரோக்கியத்துக்கான அடிப்படைக் காரணம் என்னுடைய வாழ்க்கைமுறை. இது கிராமத்து வாழ்க்கை கொடுத்த பரிசு. தோட்டத்தில், பண்ணையில், மேடையில் என்று எங்காவது ஓரிடத்தில் உழைத்துக்கொண்டே இருப்பேன். உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.

ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும், இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.

இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால்,பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது.

தினமும் காலையில் கம்பு, தினை மாவு, கொஞ்சம் கருப்பட்டி சேர்த்து கஞ்சிவைத்துக் குடிக்கிறேன். இந்தக் கஞ்சி விஷம் இல்லாதது. அதாவது, ரசாயனம் இல்லாதது. கரும்புக்கு ரசாயனம் இடுவதால் வெல்லத்தில் ரசாயனம் இருக்கிறது. பனை மரத்தில் ஏறி நம் ஆட்கள் இன்னும் பூச்சி மருந்து அடிக்கவில்லை. அதனால்தான் பனை வெல்லம் சுத்தமான இயற்கை உணவாக இருக்கிறது.

பகல் வேளையில் ரசம் அல்லது மோர் மட்டுமே சேர்த்துக் கொஞ்சமாக சாதம் சாப்பிடுகிறேன். இடையில் காய்கறி ரசம். இரவில் இரண்டு அல்லது மூன்று இட்லி மட்டுமே ஆகாரம். பசிக்காவிட்டால் சாப்பிடுவது இல்லை. இதுதான் என்னுடைய சாப்பாட்டு அட்டவணை.

வெளியிடங்களுக்குச் செல்லும்போது உணவு விடுதிகளில் சாப்பிடுவது இல்லை. அதிகபட்சமாக நண்பர்களின் வீடுகளில் சாப்பிடுவேன். இல்லாவிட்டால் பழங்கள், கடலை மிட்டாய், பேரீச்சம்பழம் மட்டுமே என் உணவு. காபி, டீ சாப்பிடுவதைவிட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்டன.

ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் டன் அளவு பூச்சிக்கொல்லி நஞ்சுகள் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களையே இன்றைக்கு மக்கள் சாப்பிடுகிறார்கள். நோயோடு பலரும் வாழ்வதற்கு பூச்சிக்கொல்லி நஞ்சுகள் ஒரு முக்கியமான காரணம்.

உடல் ஆரோக்கியமாக இருந்தால், மனமும் நன்றாக இருக்கும். உடல், மன ஆரோக்கியத்துக்கு இயற்கை ஒரு பெரிய வரப்பிரசாதம். செடி ஒன்றை நட்டுவைத்து, அது வளர்வதையும் மொட்டுவிடுவதையும் காய்ப்பதையும் கவனித்துவந்தால், மனதுக்குள் குதூகலம் பிறக்கும். இதை ஒரு சிகிச்சைமுறையாகக்கூட மருத்துவர்கள் சொல்வார்கள். தாவரங்களிடமும் செல்லப் பிராணிகளிடமும் அன்பு செலுத்திப் பாருங்கள். அதன் மகத்துவம் புரியும்'' இன்றைய இளைஞர்களின் புகை, மதுப் பழக்கம் அதிகமாக இருக்கிறது

''மது, புகை வியாபாரிகள் தங்களது லாபத்துக்காக இளைஞர்கள் மீது இந்தப் பழக்கத்தைத் திணிக்கிறார்கள். வருங்காலத் தூண்களாக விளங்க வேண்டிய இளைஞர்கள், மது - புகைப் பழக்கத்துக்கு அடிமையாகி நுரையீரலையும் குடலையும் கெடுத்துச் சீரழிகிறார்கள். இதன் தொடர்ச்சியாகச் சமூகச் சிக்கல், பொருளாதாரச் சிக்கல், குடும்ப உறவில் சிக்கல் என்று எல்லாத் தரப்பிலும் பிரச்னைகள் குவிகின்றன. இதை அனைவரும் சேர்ந்து ஒருமித்துக் கண்டிக்க வேண்டும். 'உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தச் செயலையும் நாம் செய்யக் கூடாது’ என்ற உறுதியான சுயக் கட்டுப்பாடு ஒன்றே இதுபோன்ற தீய பழக்கங்களின் பிடியில் சிக்காமல் நம் சமூகத்தை காக்கும்.

'இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்

கழிபேர் இரையான்கண் நோய்’

- என்கிறார் வள்ளுவர்.

அளவறிந்து அமைதியாய் சாப்பிட்டால் ஆரோக்கியம் நம் பக்கம் நிற்கும். இல்லாவிட்டால் வள்ளுவர் சொல்வதுபோல் நோய்தான் நம் பக்கம் நிற்கும். இன்றைய இளைய தலைமுறையினருக்குச் சாப்பிடக்கூட நேரம் இல்லை. அவசரம் அவசரமாக அள்ளி விழுங்கிவிட்டு ஓடுவது நிறைய வியாதிகள் வருவதற்குக் காரணமாகிவிடுகிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கெட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காக அதில் கலக்கும் ரசாயனங்கள் நம் வயிற்றுக்குள் சென்றும் அதே வீரியத்தோடுதான் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பசித்தால் மட்டுமே உணவு, அதுவும் இயற்கை உணவு; அதையும் கொஞ்சம் கொஞ்சமாக உமிழ்நீரோடு சேர்த்து ரசித்து மென்று சாப்பிட்டால் எப்படி வரும் வியாதி? எல்லாமே கலைதான்!


நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.

உணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது.

நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும்,உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்றுதான். நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும். ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம். இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம்.

எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு. நான் நாள் தவறாமல் யோகாசனம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றைச் செய்கிறேன். முதுகெலும்பை நேராக வைத்திருக்கும் வஜ்ராசனமும் செய்வேன். இவைதான் என் ஆரோக்கிய ரகசியம்'' என்று குறிப்பிடுகின்றார் 

Friday, 17 August 2012

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால்
உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?

மாலை மணி 6: 30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலைப் பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைக.ள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது..

நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் , உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மைல் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது. இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ?? துரதஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் ! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும வேண்டும்.

ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும்.

இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.
இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ
அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ

ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும். பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்.

இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..

உயிரைக் காக்கும் இது போன்ற விசயங்களை பகிருங்கள் !!!!

ஆண்டொன்று போனால் வயதொன்று குறையும்!

வயது ஏற ஏற அழகாயும் பொலிவாயும் இருக்கணுமா? இதை கொஞ்சம் படிங்க...

வயது ஆக ஆக உடலில் வரும் மாற்றங்கள் உங்களை சோர்வடையச் செய்யும். எப்போதும் இளமையாகவே தோன்ற வழியில்லையா என்று கேட்டால் அதற்கு பதில் "இருக்கிறது' என்பதுதான்!

அன்றாட உணவு பழக்கவழக்கங்களை மாற்றி அமைத்துவிட்டாலே நீங்கள் என்றும் "ஸ்வீட் 16' தான். நவீன உலகத்தில் குளிர்பானங்கள், பீஸô, பர்கர் என்று வாயில் நுழையாத பெயர்களையெல்லாம் தேடித் தேடித் சாப்பிட்டால், சமூகத்தில் எளிதில் உங்களுக்கு "மூத்த குடிமகன்' அந்தஸ்து கிடைத்துவிடும். எனவே உணவில் கவனம் செலுத்துங்கள்.

தோலின் ஈரத்தன்மை குறையாமல் இருந்தால் இளமையாய் காட்சியளிக்கலாம். தினமும் தண்ணீரை நன்றாகக் காய்ச்சி ஆற வைத்து 5 லிட்டர் குடித்தால் போதும். செல்கள் ஆரோக்கியமாகத் திகழ நீர்ச்சத்து அவசியம். எனவே குளிர்பானங்களைத் தவிர்த்து தண்ணீரைப் பருகத் தொடங்குங்கள்.

கார்போஹைட்ரேட் செல்களை சோர்வடையச் செய்யும். அதனால் லட்டு, ஜாங்கிரி, அல்வா போன்ற நேரடி இனிப்பு வகையறாக்களைத் தவிர்க்கவும். வயதாவதைத் தடுப்பதில் பழங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.

நெல்லிக்காய் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலுள்ள வைட்டமின் சி, மற்றும் துவர்ப்புச் சுவை வயோதிக மாற்றத்தை தடுக்கும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பன்னீர் திராட்சை, மாதுளை, சிகப்பு கொய்யா, ஆப்பிள், அத்திப்பழம் ஆகியவையும் இளமைக்கு காரண கர்த்தாக்கள்.

காலையில் நவதானியக் கஞ்சி அல்லது ஓட்ஸ், வரகரிசி பொங்கல், ராகி இட்லி என்று தானிய உணவு வகைகள் நிறைந்த உணவு சாப்பிட வேண்டும்.

மதியம் பட்டைத் தீட்டப்படாத அரிசியை சமைத்துச் சாப்பிடுங்கள். தயிர் மதிய வேளையில் சேர்க்க வேண்டாம். ஆனால் மோர் கண்டிப்பாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவில் சிறிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெந்தயம் இருக்க வேண்டியது அவசியம்.

Wednesday, 8 August 2012


கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.

இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.

Sunday, 5 August 2012


கிரஹப்பிரவேசம் எதற்காக?


6JUL
இந்தியாவில் பொதுவாக இரண்டு வகையான கிரஹப்பிரவேசங்கள் கொண்டாடப்படுகின்றன. கணவன் வீட்டிற்குள் ஒரு பெண் நுழைவது என்பது மிக முக்கியம். இது ஒரு வகையான கிரஹப்பிரவேசம். அதனால்தான் அதைச் சுற்றியே பல சடங்குகளை உருவாக்கினர்.
இச்சடங்குகள் சிறுத்துக் கொண்டே சென்று, அவற்றில் பல சடங்குகள் இன்று அர்த்தமற்றவை ஆகிவிட்டன. ஏனெனில் இன்று அவள் திருமணத்திற்கு முன்பே கூட கணவன் வீட்டில் அனுமதிக்கப்படும் நிலையிருக்கிறது.
இன்று திருமணம் என்றால் ஆண், பெண் இருவருக்குள் நடக்கும் கவர்ச்சி அல்லது காதல் என்று நினைக்கின்றனர். ஆனால் அன்றோ திருமண உறவை அவ்விருவர், அவர்களின் குழந்தைகள், குடும்பத்தின் எதிர்காலம் இவற்றை நிர்ணயிக்கும் கருவியாகக் கருதினர்.
ஈஷாவின் தமிழ் மாத இதழ்
“ஈஷா காட்டுப்பூ”


ஆன்லைனில் படிக்க
ஆன்லைனில் பதிவு செய்ய
எந்த வகையான பெண் கணவனின் வீட்டிற்குள் நுழைகிறாள் என்பதிலும், கணவனின் வீட்டிற்குள் அவள் முறையாக நுழைவதிலும் அக்கறை செலுத்தினர்.
கிரஹப்பிரவேசத்தில் மற்றொரு வகை நீங்கள் புதிதாக ஒரு வீடு கட்டி அதில் குடியேறும் முன் செய்வது. புது வீட்டில் குடியேறுபவர்கள் அவர்களுடைய புதிய வீடு, குடியிருப்பதற்கு உகந்த சூழலில் இருப்பதற்காக இதைச் செய்தனர்.
அவ்வீட்டின் வடிவம், அழகு, நிறம் இவையனைத்தும் முக்கியம்தான். ஆனால் எவ்வகையான சக்தி அவ்விடத்தில் இருக்கப் போகிறது என்பது மிக, மிக முக்கியம்.
நம் கலாச்சாரத்தில் சக்தியூட்டப்படாத ஒரு இடத்தில் எவரும் உறங்குவதுகூட இல்லை. எனவே கிரஹப்பிரவேசம் என்பது சிறிய அளவிலான பிரதிஷ்டை ஆகும்.
அந்த வீட்டிற்குள் புதிதாக நுழையும் முன் அவ்விடம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் அங்கே சென்று வாழ்வதில்லை. இந்த செயல்முறை மூலம் அந்த வீட்டில் வசிப்போர் இயல்பாகவே நல்வாழ்வை நோக்கிச் செல்வர். ஒரு இடத்தை உயிரோட்டமாகச் செய்யும் ஒரு செயல்முறை அது.
எந்த ஒரு உயிரும் பிரதிஷ்டை செய்யப்படாத ஓர் இடத்தில் வாழக்கூடாது என்பது இக்கலாச்சாரத்தில் ஆழமாய் வேரூன்றிப்போன ஒரு விஷயம். ஒவ்வொரு குடும்பமும் ஒரு புதிய இடத்தில் வசிப்பதற்கு முன் அந்த இடத்தை சக்தியூட்டி பின்னரே வசித்தனர்.
மேலும் குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது அவ்வீட்டின் சூழலை மேம்படுத்தத் தேவையான சடங்குகளையும் செயல்முறைகளையும் செய்து வந்தனர். தனியொரு மனிதன் தன் முழுதிறனை அடையத் தேவையான உகந்த சூழ்நிலையை உருவாக்கினர்.
தற்போது மனிதனுடைய முழுத்திறன், அவன் எவ்வளவு பணம் சேர்க்கிறான் என்பதை வைத்துதான் மதிப்பிடப்படுகிறது. வெற்றியை பற்றிய நவீன கருத்து மிகவும் மேலோட்டமானதாக உள்ளது. பணமும் அந்தஸ்தும்தான் இப்போது வெற்றியை நிர்ணயிக்கிறது.
அன்று வெற்றியை பற்றிய மக்களின் கருத்து இவ்வாறு இருக்கவில்லை. மாறாக அது பரந்து விரிந்த மனப்பான்மையோடு மிகுந்த ஆழமானதாக இருந்தது.
ஒருவர் தன் உணர்தலில் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருந்து, பொருளாதார நிலையிலும் ஓரளவு சிறப்புடனிருந்து, குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகத்தின் அன்பைப் பெற்றிருந்தால் மட்டுமே அவரை வெற்றி பெற்றவர் என்று நினைத்தனர். இது வெறும் தத்துவமல்ல, இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இச்சமூகத்தில் இயல்பாக நடைபெற்ற நிகழ்ச்சி இது.
கடந்த 30, 40 வருடங்களில் கணிசமான அளவு இதனை வேருடன் களைந்துள்ளோம். அதனால் கிரஹப்பிரவேசம் என்றால் அது இந்த செடி (தன்னை சுட்டிக் காட்டுகிறார்) வளர்ந்து, பூத்து, கனி கிடைப்பதற்கான சரியான நிலத்தை உருவாக்குவதே!
ஆனால், துரதிருஷ்டவசமாக இந்த சடங்குகளைச் செய்வோர், தற்போது, எதனால், எப்படி செய்கிறோம் என்கிற சரியான புரிதல் இல்லாமல், ஒரு கடமை போல செய்வதால் மக்களும் இதில் ஆர்வமிழக்க ஆரம்பித்துவிட்டனர்.
இன்று கிரஹப்பிரவேசம் என்றால் அனைவரையும் விருந்துக்கு அழைப்பது, தேவைக்கதிகமாக சாப்பிடுவது, குடிப்பது என்று ஆகிவிட்டது. இன்றைய கிரஹப்பிரவேசம் இப்படித்தான் ஆகிவிட்டது.
நீங்கள் உங்களுடைய நல்வாழ்வை நோக்கிச் செல்லவில்லை. நீங்கள் சிறந்தபடி வாழ, உங்களைச் சுற்றியுள்ள சூழலை சரியான முறையில் உருவாக்குவது மிகவும் முக்கியம். குறிப்பாக குழந்தைகள் வளரும் பொழுது, சூழ்நிலைக்கேற்ப அவர்கள் மாறக்கூடிய நிலை இருக்கும்போது, சரியான சக்திநிலையை அமைத்துக் கொடுப்பது மிகவும் முக்கியம்.

என் வாழ்க்கை மாறும் – 600 ரூபாயில்


3AUG
அரசுப் பள்ளியைச் சேர்ந்த குழந்தைகளைப் பார்த்து, “நீ எதுக்கு ஸ்கூலுக்குப் போறே?,” என்று கேட்டால்… “வீட்டுல சாப்பாடு இல்ல, அங்க சத்துணவுல சோறு போடுவாங்க அதான் ஸ்கூலுக்கு போறேன்,” என்று சொல்லிவிட்டு ஓடுகிறார்கள்…
பள்ளிச் சீருடை இல்லததால் பள்ளிக்குப் போக முடியாமல் தெருவோரம் விளையாடும் குழந்தைகள்! துவைத்துப் போட்ட சீருடை உலரக் காத்திருக்கும், மாற்று உடை இல்லாத குழந்தைகள்! இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டும் அவற்றை பள்ளிக்கு எடுத்துச் செல்ல பைகூட இல்லாத குழந்தைகள்! இந்த குழந்தைகளிடம், “நீ பெரியவன் ஆனா என்ன ஆகப் போறே?” என்று கேட்டால்…
பெண் குழந்தைகள் குடைக்கு ஆசைப்பட்டு, “டீச்சர்” என்றும், பையன்கள் தம்மை ஆக்ஷன் ஹீரோக்களாக பாவித்து “போலீஸ்” என்றும் சொல்லுவார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் என்னவானார்கள்?
பணவசதியற்ற எத்தனை ஏழை மாணவர்களின் கனவு காற்றோடு போனது? எங்கோ குப்பைப்பொறுக்கிக் கொண்டும், வீட்டு வேலைகள் செய்து கொண்டும் வயிற்றைக் கழுவும் அவர்களின் அவல நிலையை, கண்டும் காணாததுப் போல எவ்வித குற்ற உணர்வுமின்றி நாம் கடந்து செல்லப் பழகி விட்டோம்.
இவர்கள் எதிர்காலம் சிறக்க நாம் கல்வி கொடுக்கவில்லை என்றால், நாம் நிச்சயமாக வேதனையுடன் வெட்கப்பட வேண்டியதுதான்.
கிராமப்புறங்களில் இருக்கும் பள்ளிகளில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் சுமார் 50 சதவீத மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு புத்தகத்தைப் படிக்கத் தெரியவில்லை, இது திடுக்கிடும் உண்மை.
ஈஷாவின் தமிழ் மாத இதழ்
“ஈஷா காட்டுப்பூ”


ஆன்லைனில் படிக்க
ஆன்லைனில் பதிவு செய்ய
இக்குழந்தைகளுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாததால் மேல்வகுப்பு கல்வித் திட்டத்தை உள்வாங்கிக் கொள்ள இயலாமல் தடுமாறுவதோடு, படிப்பென்பது தனக்கு வராத வித்தை என்ற மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
எந்தவொரு குறிக்கோளும் இல்லாத, குழம்பிய மனநிலையில் உள்ள ஒரு பெரும் இளைஞர் கூட்டம் இது போல உருவாகிக் கொண்டிருக்கிறது. என்ன செய்வதென்று தெரியாமல் இவர்கள் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகிறார்கள்.
இவர்களின் நல்வாழ்வு கருதி ஈஷா அறக்கட்டளை, தமிழக அரசுடன் கைக்கோர்த்துள்ளது. ஆம்! இந்த ஒப்பந்தப்படி 2011 முதல் 2016 வரை, 32 அரசுப் பள்ளிகளை சேர்ந்த சுமார் 25,000 மாணவர்களின் கல்விப் பொறுப்பை தற்போது ஈஷா கையில் எடுத்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நுண்கலைகள், கைவினை, விளையாட்டு போன்ற மனத்திறன் ஊக்குவிப்புப் பயிற்சிகளை மாணவர்களுக்கு கற்றுத்தரத் தகுந்த ஆசிரியர்கள் உருவாக்கப்படுவார்கள். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் மாணவர்களின் திறமைகளை கண்டறிவதற்கும் சிறப்பு பட்டறைகள் நிகழும்.
சிறப்பான முறையில் ஆங்கில வகுப்புகளுடன் யோகமும் கல்வியின் பாகமாய் அமையும். இத்திட்டத்தை முழு வீச்சுடன் செயல்படுத்த கூடுதலாக 155 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உங்களால் ஒரு குழந்தையின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்க முடியும். ஒரு குழந்தைக்கு ஒரு வருடத்திற்கு ரூ.600/- தான். உங்களால் எத்தனை மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என்று பாருங்கள்!
இது தனியொரு குழந்தையின் வாழ்வை பற்றியது அல்ல, இது நம் தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முயற்சி…
இவர்களின் தேவை… நீங்கள்!
நாம செய்யலன்னா இவங்களுக்கு வேற யாருங்க செய்வாங்க?
ஆன்லைனில் உதவ
அரசுப் பள்ளி தத்தெடுப்புத் திட்டம்
தொடர்புக்கு: +91 94425 90065/ 94425 04737
மின்னஞ்சல்: govtschool@ishaoutreach.org
இணையதளம்: www.ishaoutreach.org

Wednesday, 1 August 2012


ஜெய் பைரவி – இந்த வார்த்தையைக் கேட்டாலே கண்களில் நீர் வழிந்தோடும் பலருக்கு. பிள்ளைப் பேறு ஆகட்டும், பிள்ளைகளுக்கான வித்யாரம்பம் ஆகட்டும், நடக்காத திருமணம் ஆகட்டும், தீராத வியாதி ஆகட்டும், இறுதிக் கடன்களான காலபைரவ கர்மா ஆகட்டும், வாழ்வின் தொடக்கம் முதல் இறுதி வரை அத்தனை அம்சங்களுக்கும் விடை சொல்லும் அற்புத தேவி – லிங்கபைரவி. பலரின் வாழ்வையே புரட்டிப் போட்டு அவர்களின் வாழ்வில் ஒரு பகுதியானவள்.
லிங்கபைரவியை உருவாக்கிய நாள் முதல் இன்று வரை, தேவியை பல ரூபங்களில் மக்களுக்கு அர்பபணித்து வந்திருக்கிறார் சத்குரு. அதில் தற்போதைய படியாய், லிங்கபைரவி புண்ணிய பூஜா…
இந்த செயல்முறையை செய்வதன் மூலம், லிங்கபைரவி மற்றுமொரு வடிவில், உங்கள் இல்லங்களில் குடியிருப்பாள்.
புதுவீட்டில் கிரஹப்பிரவேசம் செய்யும்போதோ, அல்லது ஏற்கனவே குடியிருக்கும் இல்லங்கள் மற்றும் அலுவலங்களிலோ இதை செய்து கொள்ள முடியும்.
பைரவி புண்ணிய பூஜையின் மூலம் லிங்கபைரவி அவ்வீட்டில் ஆக்ருஷிக்கப்படுகிறாள் (வரவழைப்பது). இந்த செயல்முறை முழுவதுமே லிங்கபைரவி கோவிலை பராமரிக்கும் பைராகினி மா ஒருவர் நேரடியாக வ
ந்து செய்வார்.
இதைத் தொடர்ந்து சக்தி வாய்ந்த லிங்கபைரவி மந்திர உச்சாடனங்கள் செய்யப்படுகின்றன. இதன் மூலம் தேவியின் இருப்பும் (Presence) அருளும் அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும்.
அதன் பிறகு தேவிக்கு விசேஷ அபிஷேகங்கள் செய்யப்படும். சக்தியூட்டப்பட்ட பைரவியின் வடிவங்களை வீட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் வைக்கப்பட்டு தேவி ஆலயத்தில் இருக்கக்கூடிய திரிசூலத்தில் மட்டுமே கட்டப்படும் சூத்திரம் இந்த வீட்டிலும் கட்டப்படும்.
இது தங்கள் வீட்டை தீய சக்திகளிலிருந்து பாதுகாக்கும், வீட்டில் மங்களம் நிறைந்திருக்கச் செய்யும்.
இந்த சடங்கை செய்து வரும் பைராகினி மா சித்ரா, “பைரவியின் விளக்கை நான் ஏற்றியவுடன் அவளது தரிசனத்தை என்னால் உணர முடிகிறது. இப்பூஜையின் விளைவால் ஏற்பட்ட தீவிரமான சக்தியால் இரண்டு மணி நேரத்திற்குள் வீட்டிலுள்ள அனைவரும் தேவியோடு தொடர்பு கொள்வதைக் காண முடிகிறது,” என்கிறார்.
மேலும், “வீட்டில், இந்த பூஜைக்குப் பிறகு, தேவியின் அரவணைப்பிலும் அவளது அருளிலும் மிகவும் பாதுகாப்புடன் இருப்பதை தீவிரமாக உணர முடிவதாக, பல நாட்களுக்குப் பிறகும், அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்,” என்கிறார்.
இந்த பைரவி புண்ணிய பூஜா ஒரு மதம் சார்ந்த சடங்கு அல்ல. இது ஒரு தொன்மையான அறிவியல், ஒவ்வொருவரும் உணரக்கூடிய உயிரோட்டமுள்ள சக்திப் பரிமாற்றம்.
சத்குருவிடமிருந்து வரும் எந்தவொரு விஷயமும் நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் அதிஆழமானது.
________________________________________
உங்கள் இல்லங்களிலும் இந்த பூஜை நடைபெற…
யோகினி டிரஸ்ட்,
லிங்கபைரவி திருக்கோவில்,
தொலைபேசி எண்: 94890 00333/ 94433 65631
temple@lingabhairavi.org
சென்னையில் பதிவு செய்துக் கொள்ள: திருமதி.சீதா 99623 24466