Monday 31 December 2012


அரசமரம்,ஆலமரம்,அத்தி மரம் மர்மங்கள்,சிறப்புகள் என்ன..?

உலகில் மரத்தின் பெயரை நாட்டின் பெயராகவுடைய நாடுகள் மிகச் சிலதான். பாரதம் அந்தப் பெருமையை உடைய நாடு. ..இதன் பழைய பெயர் ‘நாவலந்தீவு’. சம்ஸ்கிருதத்தில் ‘ஜம்புத்வீபம்’. இது சிலம்பு, மணிமேகலை காப்பியங்களிலும், வடமொழி நூல்களிலும் காணப்படுகிறது.உலகிலேயே மரத்தை வழிபடும் மதம் நம் இந்துமதம் தான்.

 பிராமணர்கள் கோவில்களிலும் வீட்டுப் பூஜைகளிலும் இந்தப் பெயரைத் தான் இந்தியாவுக்குப் பயன் படுத்துகின்றனர். அதாவது பாரதம், இந்தியா, இந்துஸ்தானம் ஆகிய பெயர்களுக்கு எல்லாம் முந்தியது ‘ஜம்புத்வீபம்’!
பகவத் கீதையில் ‘மரங்களில் நான் அஸ்வத்தம் என்னும் அரச மரம்’ என்கிறான் கண்ணன். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஆலமரம் (ந்யக்ரோத), அரச மரம் (அஸ்வத்தம்), அத்திமரம் ஆகிய மூன்றும் விஷ்ணுவின் பெயர்களாக வருகின்றன. அதாவது மரமே கடவுள். மௌனத்தின் மூலம் மாபெரும் தத்துவத்தை உபதேசம் செய்யும் தட்சிணாமுர்த்திஆலமரத்தின் கீழே அமர்ந்திருக்கிறார்.

குரு தான் புத்திரகாரகன்...பணத்துக்கும் அவர்தான் அதிபதி..அதாவது தனகாரகன்...அப்படிப்பட்ட குரு தட்சிணாமூர்த்தி ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருக்கிறார் என்றால் அதில் ஒரு செய்தி இருக்கிறது...ஆலமரத்தின் அடியில் வினாயகரை பிரதிஷ்டை செய்த நம் முன்னோர்கள் அதில் ஒரு மர்மத்தை மறைத்திருக்கின்றனர்..ஆலமரம் அரசமரம் இவற்றில் மிக தெய்வீக சக்தி இருக்கிறது..நீ வினாயகரை சுற்று உனக்கு அவர்தருகிராரொ இல்லையோ அரச மரம் வரம் தரும்...என சொல்லியிருப்பார்களோ..ஆனால் இதை ஆராய்ந்து பார்க்கணும்...புத்தருக்கு ஞானம் வந்ததும் அரசமரத்தின் அடியில்தானே..குரு மட்டுமல்ல தெய்வீக சக்திகள் நிரம்பிய ஆலமரம்,அரசமரம்,அத்தி மரம் இவற்றின் குச்சிகளை தான் எல்லா வித ஹோமங்களுக்கும் புரோகிதர்கள் பயன்படுத்துகின்றனர்..காரணம் அதிக சக்தி உண்டாக,அனைத்து கிருமிகளும் அழிய இவை முக்கிய பங்கு வகிக்கின்றன...!!

கிராமங்களில் பஞ்சாயத்துக்கள் இந்த மரத்தின் அடியில்தான் நடத்தப்படுகின்றன..அவை நிழலுக்கு என்று சொன்னாலும் குரு என்றால் நீதிமான் தானே!!
அரசமரம்,ஆலமரம்,அத்தி மரம் மர்மங்கள்,சிறப்புகள் என்ன..?

உலகில் மரத்தின் பெயரை நாட்டின் பெயராகவுடைய நாடுகள் மிகச் சிலதான். பாரதம் அந்தப் பெருமையை உடைய நாடு. ..இதன் பழைய பெயர் ‘நாவலந்தீவு’. சம்ஸ்கிருதத்தில் ‘ஜம்புத்வீபம்’. இது சிலம்பு, மணிமேகலை காப்பியங்களிலும், வடமொழி நூல்களிலும் காணப்படுகிறது.உலகிலேயே மரத்தை வழிபடும் மதம் நம் இந்துமதம் தான்.

பிராமணர்கள் கோவில்களிலும் வீட்டுப் பூஜைகளிலும் இந்தப் பெயரைத் தான் இந்தியாவுக்குப் பயன் படுத்துகின்றனர். அதாவது பாரதம், இந்தியா, இந்துஸ்தானம் ஆகிய பெயர்களுக்கு எல்லாம் முந்தியது ‘ஜம்புத்வீபம்’!
பகவத் கீதையில் ‘மரங்களில் நான் அஸ்வத்தம் என்னும் அரச மரம்’ என்கிறான் கண்ணன். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஆலமரம் (ந்யக்ரோத), அரச மரம் (அஸ்வத்தம்), அத்திமரம் ஆகிய மூன்றும் விஷ்ணுவின் பெயர்களாக வருகின்றன. அதாவது மரமே கடவுள். மௌனத்தின் மூலம் மாபெரும் தத்துவத்தை உபதேசம் செய்யும் தட்சிணாமுர்த்திஆலமரத்தின் கீழே அமர்ந்திருக்கிறார்.

குரு தான் புத்திரகாரகன்...பணத்துக்கும் அவர்தான் அதிபதி..அதாவது தனகாரகன்...அப்படிப்பட்ட குரு தட்சிணாமூர்த்தி ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருக்கிறார் என்றால் அதில் ஒரு செய்தி இருக்கிறது...ஆலமரத்தின் அடியில் வினாயகரை பிரதிஷ்டை செய்த நம் முன்னோர்கள் அதில் ஒரு மர்மத்தை மறைத்திருக்கின்றனர்..ஆலமரம் அரசமரம் இவற்றில் மிக தெய்வீக சக்தி இருக்கிறது..நீ வினாயகரை சுற்று உனக்கு அவர்தருகிராரொ இல்லையோ அரச மரம் வரம் தரும்...என சொல்லியிருப்பார்களோ..ஆனால் இதை ஆராய்ந்து பார்க்கணும்...புத்தருக்கு ஞானம் வந்ததும் அரசமரத்தின் அடியில்தானே..குரு மட்டுமல்ல தெய்வீக சக்திகள் நிரம்பிய ஆலமரம்,அரசமரம்,அத்தி மரம் இவற்றின் குச்சிகளை தான் எல்லா வித ஹோமங்களுக்கும் புரோகிதர்கள் பயன்படுத்துகின்றனர்..காரணம் அதிக சக்தி உண்டாக,அனைத்து கிருமிகளும் அழிய இவை முக்கிய பங்கு வகிக்கின்றன...!!

கிராமங்களில் பஞ்சாயத்துக்கள் இந்த மரத்தின் அடியில்தான் நடத்தப்படுகின்றன..அவை நிழலுக்கு என்று சொன்னாலும் குரு என்றால் நீதிமான் தானே!

No comments:

Post a Comment