Friday 29 May 2015

கர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை!!
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுகளிலும், செயல்களிலும் கவனத்துடன் நடக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் மருத்துவர்களே, இந்த காலங்களில் பெண்களை நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டுமென்றும் பரிந்துரைப்பார்கள். கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த சத்துக்கள் தான் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடியது. அதிலும் புரோட்டீன் கருவின் வளர்ச்சியை சீராக வைக்கவும், கால்சியம் குழந்தையின் எலும்புகள் வலுவோடு இருப்பதற்கும் உதவும். எனவே கர்ப்பிணிகள், இந்த காலங்களில் இந்த சத்துக்கள் நிறைந்த உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். சரி, இப்போது கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் எந்த உணவுகளையெல்லாம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போமா!!!
பசலைக் கீரை
பசலைக் கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாயின் உடலில் இரத்தமானது அதிக அளவில் உற்பத்தியாவதோடு, கருவில் உள்ள சிசுவிற்கும் அதிக அளவில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும்.
பாதாம்
பாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே அதிக அளவில் கர்ப்பிணிகள் சாப்பிட, கருவிற்கு தேவையான புரோட்டீன் சத்தானது கிடைக்கும்.
சிக்கன்
கர்ப்பிணிகளுக்கு சிக்கன் ஒரு பாதுகாப்பான உணவு. ஏனெனில் இதனை முதல் மூன்று மாதங்களில் அதிகம் உணவில் சேர்த்தால், இந்த காலத்தில் ஏற்படும் காலை மயக்கம் மற்றும் சோர்வானது நீங்கும். மேலும் சிக்கனில் இரும்புச்சத்தானது இருப்பதால், உடலில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.
அஸ்பாரகஸ்
கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் மட்டும் உடல் இயங்காது. அந்த சத்து உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி நிறைந்து உணவுகளையும் சாப்பிட வேண்டும். இத்தகைய வைட்டமின் டி சத்து, அஸ்பாரகஸில் அதிகம் உள்ளது. மேலும் இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், காலை மயக்கமானது நீங்கும்.
வெண்டைக்காய் .
பலர் இந்த காலத்தில் வெண்டைக்காயை அதிகம் தேர்ந்தெடுத்து சாப்பிடமாட்டார்கள். ஆனால் இதில் நிறைய சத்துக்கள் உள்ளன. அதிலும் பிரச்சனையில்லாமல் நடப்பதற்கான ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், கர்ப்பிணிகள் இதனை சாப்பிட்டால், நீரிழிவு பிரச்சனை வராமல் தடுக்கலாம்.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அவை தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் தடுப்பதோடு, அதில் உள்ள ஃபோலிக் ஆசிட் குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கும்.
ப்ராக்கோலி
சாதாரணமாகவே ப்ராக்கோலியில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளது. அதிலும் இதனை கர்ப்பிணிகள் அதிகம் உணவில் சேர்த்தால், அதில் உள்ள இரும்புச்சத்து, தாயின் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
முட்டை
முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆகவே கர்ப்பிணிகள் தினமும் 2 முட்டைகளை சாப்பிட்டு வருவது, தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் நல்லது.
சால்மன்
பொதுவாகவே மீனில் ஒமோக-3 ஃபேட்டி ஆசிட், கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது நல்லது. ஆனால் அவற்றில் சால்மன் என்ற மீனில் மற்ற மீன்களை விட, அதிகமான அளவில் இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ளன.
தயிர்
பால் பொருட்களில் ஒன்றான தயிரில் கால்சியம் அதிகம் இருக்கிறது. மேலும் கர்ப்பமாக இருக்கும் போது சில பெண்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய எரிச்சலை தணிக்கும் வகையிலும், உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும், தயிரை அதிகம் சாப்பிடுவது நல்லது
இறைச்சியை தவிர்த்து உடலை வலுவேற்றும் சைவ உணவுகள்..!
சிலர் உடல் வலிமையை அதிகரிப்பதற்கு, ஜிம் சென்று பயிற்சி செய்து, நன்கு இறைச்சி உணவுகளை சாப்பிடுவார்கள். எத்தனை நாட்கள் தான் அசைவ உணவுகளையே சாப்பிட்டு கொண்டிருக்க முடியும். எந்த ஒரு விருப்பமான உணவாக இருந்தாலும், அனைத்திற்கும் அளவு என்ற ஒன்று உள்ளது. இத்தகைய அளவானது மீறினால், அதுவே உடலுக்கு நஞ்சாகிவிடும். எனவே உடல் வலிமையை அதிகரிப்பதற்கு அசைவ உணவுகளை மட்டும் சாப்பிடாமல், சைவ உணவுகளையும் சாப்பிட வேண்டும்.
இப்போது அவ்வாறு உடல் தசைகளை நன்கு வலுவாக்கும் சைவ உணவுகள் எவையென்று ஒருசில உணவுகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அவற்றை உணவுகளில் சேர்த்து உடலை வலிமையோடு வைத்துக் கொள்ளுங்கள்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் நார்ச்சத்துக்கள் மற்றும் இயற்கையான இனிப்புக்கள் உள்ளன. எனவே இத்தகைய வாழைப்பத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் சக்தியானது அதிகரிப்பதோடு, உடலும் வலிமையடையும்.
வேர்க்கடலை வெண்ணெய்
இந்த வெண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் என்னும் நல்ல கொழுப்புக்கள் அதிகமாகவே நிறைந்துள்ளது. எனவே இவற்றை சாப்பிட இதயம் பாதுகாப்புடன் இருப்பதோடு, செரிமானத்தை மெதுவாக நடைபெறச் செய்து, உடலில் சக்தியை நீண்ட நேரம் இருக்கச் செய்யும்.
பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட் ஜூஸை தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு முன் குடித்து வந்தால், நீண்ட நேரம் நன்கு புத்துணர்ச்சியுடன் உடற்பயிற்சியை மேற்கொள்ள முடியும். இதற்கு பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்களே காரணம்.
தண்ணீர்
உடலில் நீர் வறட்சி ஏற்பட்டாலும், உடல் விரைவில் சோர்ந்துவிடும். மேலும் உடலில் நச்சுக்கள் அதிகம் சேர்ந்து, உடல் பொலிவையும் பாதிக்கும். எனவே முடிந்த அளவு அதிகமான அளவில் தண்ணீரை பருக வேண்டும்.
சிவப்பு திராட்சை
சிவப்பு திராட்சையில் உள்ள இயற்கை சர்க்கரையானது, உடலினுள் செல்லும் போது எனர்ஜியாக மாற்றப்பட்டுவிடுவதால், இதனை சாப்பிட்டால், உடல் நீண்ட நரம் வலிமையோடும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
ஓட்ஸ்
காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் அதிகம் இருக்கும் உணவுப் பொருட்களில் ஓட்ஸ் கஞ்சியும் ஒன்று. எனவே இதனை சாப்பிட்டால், இவை நீண்ட நேரம் வயிற்றை நிறைத்து வைத்திருப்பதோடு, பல மணிநேரம் உடலை எனர்ஜியுடனும் வைத்துக் கொள்ளும்.
காபி
மனதைப் புத்துணர்ச்சியாக்கும் உணவுப் பொருட்களில் காபியும் ஒன்று. காபியில் உள்ள காப்ஃபைன், மூளையில் உள்ள செல்களை புத்துணர்ச்சியுடன் வைக்கும். ஆனால் இதை அதிகமாக பருகினால், அது பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அதையே அளவாக குடித்தால், ஒற்றை தலைவலியை குணப்படுத்தும் மற்றும் உடலுக்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.
பீன்ஸ்
பீன்ஸில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் சேர்த்தால், அதில் உள்ள இரும்புச்சத்து ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் செல்களை வலிமைப்படுத்தும். ஆகவே உடலை வலிமையோடு வைத்துக் கொள்ள நினைத்தால், பீன்ஸ் சேர்த்துக் கொள்வது நல்லது.
பச்சை காய்கறிகள்
பச்சை காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதோடு, வைட்டமின் சி-யும் நிறைந்துள்ளது. இதனால் நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிறைத்திருப்பதோடு, வைட்டமின் சி உடலுக்கு வலிமையையும் தரும்.
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அத்தகைய சிட்ரஸ் பழங்களால் ஆன ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால், நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்புடனும், சோர்வின்றியும் இருக்கும்.
கைக்குத்தல் அரிசி
காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள கைக்குத்தல் அரிசியில், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி காம்ப்ளக்ஸ் கூட அதிகம் உள்ளது. மேலும் இதில் குறைந்த அளவில் மாவுப் பொருள் இருப்பதால், செரிமானமடைவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு, நீண்ட நேரம் உடலை புத்துணர்ச்சியுடனும், வலுவோடும் வைத்துக் கொள்ளும்.
ஆப்பிள்
ஆப்பிளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இவை இரத்த அணுக்களின் அளவை அதிகரிப்பதோடு, ஒவ்வொரு செல்களையும் எளிதில் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.
க்ரீன் டீ
காப்ஃபைன் பானங்களைப் போன்றே க்ரீன் டீயிலும், மூளைச் செல்களை புத்துணர்ச்சியடையச் செய்யும் தன்மை நிறைந்துள்ளது. ஆகவே இதனை குடித்தால், உடல் சோர்வின்றி, பொலிவோடு மின்ன ஆரம்பிக்கும்.
தினை
பொதுவாக தினை விளையாட்டு வீரர்களுக்கான ஒரு சக்தி நிறைந்த உணவுகளுள் ஒன்று. இத்தகைய தினையை உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள அமினோ ஆசிட், தசைகளை வலுவோடு வைத்துக் கொள்ளும்.
பாதாம்
பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் அடங்கியுள்ளது. இத்தகைய ஃபேட்டி ஆசிட்டுகள், உடலுக்கு எனர்ஜியைக் கொடுக்கக்கூடியவை. எனவே இதனை சாப்பிட்டால், உடல் வலுவோடு இருக்கும்.
சோயாபீன்
சோயாபீன்ஸிலும் தசைகளை வலுவடையச் செய்யும் சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே இத்தகைய சோயாபீன்ஸை உடற்பயிற்சி செய்வதற்கு முன் சாப்பிட்டு செய்தால், நீண்ட நேரம் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
மக்கா (Maca)
மக்கா என்பது ஒரு மூலிகை. இதனை சாப்பிட்டடால், ஒரு புதுவிதமான எனர்ஜி கிடைப்பதோடு, இல்லற வாழ்வில் ஈடுபடவும் ஒரு நல்ல வலிமை கிடைக்கும்.
உலர் பழங்கள்
உலர் பழங்களில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இத்தகைய பழங்களை ஸ்நாக்ஸாக சாப்பிட்டால், அதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைய எனர்ஜியைக் கொடுக்கும்.
பூசணிக்காய்
பூசணிக்காயில் உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் உள்ளது. இதில் கலோரிகள் மிகவும் குறைவு. இருப்பினும் இவை நீண்ட நேரம் பசியெக்காமல் வைத்திருப்பதோடு, ஹார்மோன்களை நன்கு புத்துணர்ச்சியுடன் வைக்கும்.
சோளம்
சோளத்தில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் அடங்கியுள்ளது. மேலும் இதில் கிளைகோஜன் உள்ளதால், அவை நிமிடத்தில் உடலுக்கு வலுவையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும்
Veera Muni added 2 new photos — with Gold Kumar.
செல்வ வளம் பெருக உதவும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு
ஒரே நேரத்தில் நமது முன் ஜன்ம கர்மாக்கள் கரைய வேண்டும்;அதே நேரத்தில் நமது வருமானமும் அதிகரிக்க வேண்டும் என்று விரும்பினால், நீங்கள் இரண்டே இரண்டு காரியங்களைச் செய்ய வேண்டும்.முதலாவது அசைவம் சாப்பிடுவதைக் கைவிட வேண்டும்.(என் மகன்/ள் அசைவம் சாப்பிடாம இருக்க மாட்டானே/ளே என்று சமாளிக்காதீர்கள்;அந்த குழந்தைச் செல்வங்களுக்கு அசைவம் சாப்பிடும் பழக்கத்தை ஆரம்பித்துவைத்தது யார்?)இரண்டாவதாக ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்யத் துவங்க வேண்டும்.
அதெப்படி , கடவுளிடம் வரம் தான் கேட்க வேண்டும்.நிறைய பணம் கொடுன்னு கேட்பது தப்பில்லையா?
சரி,நமெல்லாம் பரம்பரைப் பணக்காரராகப் பிறக்குறதுக்கு நாம் முற்பிறவிகளில் நற்செயல்கள் மட்டுமா செய்திருக்கிறோம்?திமிர் அல்லது பொறாமை அல்லது அகம்பாவம் இல்லாத மனிதர் நம்மில் யாராவது உண்டா? கடந்த ஐந்து ஜன்மங்களில் உருவான சுபாவம்தான் இந்த ஜன்மத்திலும் நம்மிடம் இயற்கை குணமாக அமைந்திருக்கிறது.ஆதாரம் இதுக்கெல்லாம் எதுக்கு? அதான் நம்மோடு பழகுறவங்களே நம்மைப் பத்தி சொல்வாங்களே! சரி,கவனத்தை திசை திருப்பாம ஆக வேண்டியதைப் பார்ப்போம்.
இதுவரை செய்த தவறுகள்,தப்புகள்(வேணும்னே செஞ்சது) இனி செய்யாமலிருக்கவும்,இனிமேல் யாருக்கும் நேரடியாகவோ,மறைமுகமாகவோ தீங்குகள் தராமலிருக்கவும்,நிம்மதியாகவும் ,செல்வச் செழிப்போடு வாழவுமே இந்த சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டை எனது ஆன்மீக குருஅவர்களின் வழிகாட்டுதலோடும், ஆசியோடும் அறிமுகப்படுத்துகிறோம்.
சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில், செல்வம் தர்மத்தைக் காக்கிறது;தர்மம் செய்ய நிறைய பூர்வ புண்ணியம் வேண்டும்.என்று சொல்லியிருக்கிறார்.
பூர்வ புண்ணியம் இல்லாதவர்கள்,சிவனுடைய முதல் அவதாரத்தை வழிபட்டாலே போதுமானது என நமது ஆன்மீக குரு மிஸ்டிக் செல்வம் ஐயா ஆன்மீகரீதியாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்.
வெள்ளிக்கிழமைகள் தோறும் ,மாலை நேரத்தில் சுமார் 6 மணி முதல் 10 மணிக்குள் நமது வசதியான நேரத்தில்,வீட்டில் இருக்கும் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வில்வ இலைகளால்(வில்வ இலை கிடைக்காதவர்கள் சிகப்பு அரளிப்பூக்கள் அல்லது வேறு எந்த பூக்களாலும்) பைரவ மூர்த்தி சத நாமாவளி கூறி ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை அர்ச்சனை செய்ய வேண்டும்.இப்படி தொடர்ந்து பதினாறு வெள்ளிக்கிழமைகள் வழிபாடு செய்ய வேண்டும்.
ஏதாவது சகுனத் தடை வந்தாலும்,விட்டு விட்டு செய்யலாம்.பதினாறு வெள்ளிக்கிழமைகளுக்குப் பிறகும் தொடர்ந்து செய்யலாம்.(நீண்டகாலக் கடன்கள் தீரவும் இந்த பூஜைமுறையைப் பின்பற்றலாம்)
ஸ்ரீபைரவர் அஷ்டோத்திர சத நாமாவளி
1.ஓம் பைரவாய நமஹ
2.ஓம் பூத நாதாய நமஹ
3.ஓம் பூதாத்மனே நமஹ
4.ஓம் பூதபாவநாய நமஹ
5.ஓம் க் சேத்ர தாய நமஹ
6.ஓம் க் சேத்ரக்ஞாய நமஹ
7.ஓம் க் சேத்ர பாலாய நமஹ
8.ஓம் சத்ரியாய நமஹ
9.ஓம் விராஜே நமஹ
10.ஓம் மாசான வாசினே நமஹ
11.ஓம் மாம்சாசினே நமஹ
12.ஓம் ஸர்ப்பராஜயே நமஹ
13.ஓம் ஸ்மார்ந்தக்ருதே நமஹ
14.ஓம் ரக்தபாய நமஹ
15.ஓம் பானபாய நமஹ
16.ஓம் சித்தாய நமஹ
17.ஓம் சித்திதாய நமஹ
18.ஓம் சித்த சேவிதாய நமஹ
19.ஓம் கங்காளாய நமஹ
20.ஓம் காலசமானாய நமஹ
21.ஓம் கலாய நமஹ
22.ஓம் காஷ்டாய நமஹ
23.ஓம் தநவே நமஹ
24.ஓம் தவயே நமஹ
25.ஓம் த்ரிநேத்ரே நமஹ
26.ஓம் பகுநேத்ரே நமஹ
27.ஓம் பிங்களலோசனாய நமஹ
28.ஓம் சூலபாணயே நமஹ
29.ஓம் கட்க பாணயே நமஹ
30.ஓம் கங்காளிநே நமஹ
31.ஓம் தூம்ரலோசனாய நமஹ
32.ஓம் அபீரவவே நமஹ
33.ஓம் பைரவாய நமஹ
34.ஓம் நாதாய நமஹ
35.ஓம் பூதபாய நமஹ
36.ஓம் யோகினி பதயே நமஹ
37.ஓம் தநதாய நமஹ
38.ஓம் தனஹாரிணே நமஹ
39.ஓம் தனவதே நமஹ
40.ஓம் ப்ரீதி பாவனாய நமஹ
41.ஓம் நாகஹாராய நமஹ
42. ஓம் நாக பாசாய நமஹ
43.ஓம் வ்யோமகேசாய நமஹ
44.ஓம் கபால ப்ருதே நமஹ
45.ஓம் காலாய நமஹ
46.ஓம் கபால மாலிநே நமஹ
47.ஓம் கமநீயாய நமஹ
48.ஓம் கலாநிதியே நமஹ
49.ஓம் த்ரிலோசனாய நமஹ
50.ஓம் ஜ்வாலந் நேத்ராய நமஹ
51.ஓம் த்ரிசிகிநே நமஹ
52.ஓம் த்ரிலோக பாய நமஹ
53.ஓம் த்ரிநேத்ர தனதாய நமஹ
54.ஓம் டிம்பாய நமஹ
55.ஓம் சாந்தாய நமஹ
56.ஓம் சாந்த ஜனப்ரியாய நமஹ
57.ஓம் வடுகாய நமஹ
58.ஓம் வடுவேஸாய நமஹ
59.ஓம் கட்வாங்க வரதாரகாய நமஹ
60.ஓம் பூதாத்யக்ஷ்சாய நமஹ
61.ஓம் பசுபதயே நமஹ
62.ஓம் பிக்ஷுதாய நமஹ
63.ஓம் பரிசாரகாய நமஹ
64.ஓம் தூர்தாய நமஹ
65.ஓம் திகம்பராய நமஹ
66.ஓம் சூராய நமஹ
67.ஓம் ஹரிணாய நமஹ
68.ஓம் பாண்டுலோசனாய நமஹ
69.ஓம் ப்ரசாந்தாய நமஹ
70.ஓம் சாந்திதாய நமஹ
71.ஓம் சித்தாய நமஹ
72.ஓம் சங்கராய நமஹ
73.ஓம் ப்ரியபாந்தவாய நமஹ
74.ஓம் அஷ்டமூர்த்தியே நமஹ
75.ஓம் நிதீசாய நமஹ
76.ஓம் ஞான கடாட்சே நமஹ
77.ஓம் தபோமயாய நமஹ
78.ஓம் அஷ்டாதாராய நமஹ
79.ஓம் சடாதாராய நமஹ
80.ஓம் ஸர்ப்ப யுக்தாய நமஹ
81.ஓம் சிகீஸகாய நமஹ
82.ஓம் பூதராய நமஹ
83.ஓம் பூதராதீசாய நமஹ
84.ஓம் பூபதயே நமஹ
85.ஓம் பூதராத்மஜாய நமஹ
86.ஓம் கங்கால தாரிணே நமஹ
87.ஓம் முண்டிநே நமஹ
88.ஓம் நாக யக்ஞோபவீதவதே நமஹ
89.ஓம் ஜ்ரும்பணோ மோஹன ஸ்தம்பீ மாரண க்ஷோபனாய நமஹ
90.ஓம் சுத்த நீலாஞ்சன ப்ரக்யாய நமஹ
91.ஓம் தைத்யக்நே நமஹ
92.ஓம் முண்டபூஷிதாய நமஹ
93.ஓம் பலிபுஜே நமஹ
94.ஓம் பலிபுங் நாதாய நமஹ
95.ஓம் பாலாய நமஹ
96.ஓம் அபால விக்ரமாய நமஹ
97.ஓம் ஸர்வ ஆபத்தோரணாய நமஹ
98.ஓம் துர்க்காய நமஹ
99.ஓம் துஷ்டபூத நிவேசிதாய நமஹ
100.ஓம் காமிநே நமஹ
101.ஓம் கலாநிதையே நமஹ
102.ஓம் காந்தாய நமஹ
103.ஓம் காமினி வசக்ருதே நமஹ
104.ஓம் வசினே நமஹ
105.ஓம் சர்வசித்தி பிரதாய நமஹ
106.ஓம் வைத்யாய நமஹ
107.ஓம் பிரபவே நமஹ
108.ஓம் விஷ்ணவே நமஹ
நன்றி:பைரவ விஜயம்,பக்கங்கள்108,109,110.

Thursday 28 May 2015

செல்வம் பெருக எளிய வழிகள் :
1.காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை தான் பார்க்கவேண்டும்
2.குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும் பின்புதான், முகத்தை துடைக்கவேண்டும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பால் பின்தான் லட்சுமி வருவாள்.
3.பின் பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் சமயத்தில் கைலிகள் என அழைக்கபடும் லுங்கிகள் அணியக்கூடாது
4.சாப்பிடும்போது இடதுகை எப்போதும் வட்டிலைத்தொட்டுகொண்டுதான் இருக்கவேண்டும். வட்டிலை தட்டு என்று சொல்லகூடாது அது தட்டுபாட்டுக்கு உரிய சொல்.
5.இரவில் தயிர் சேர்த்துகொள்ளக்கூடாது. அது விஷ்ணுவானாலும் சரி அவரை விட்டு லட்சுமி கடாக்சம் காணாமல் போய்விடும்.
6. பூஜை அறையில் அனைவரும் பழனியாண்டவர் படம் வைத்து இருப்போம்.அதுவும் ராஜ அலங்காரம், அதில் சிலருக்கு ஆண்டியின் கோலமான கையேந்தும் வடிவம் இருக்கும் இதை எடுத்துவிட்டு ராஜா கைவைத்து இருப்பதுபோல் வைக்கவேண்டும்.
7. வீட்டின் வாசலை பார்த்தவாறு ஏழுமலையான் (பெருமாள்)படம் வைக்க வேண்டும்,இதை பல அலுவலகங்களில் வைத்திருப்பதை நாம் இன்றும் காண முடியும்
8. மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும்.
9.படத்திற்க்கும் ,கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும்,மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ
10.பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.
11.திருவள்ளுவர் உருவம் பதித்த டாலர் அல்லது ஐந்து ரூபாய் நாணயம் பர்சில் வைத்திருக்க வேண்டும்.
12.லட்சுமி ,குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “ என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கட்டாயம் கூறவேண்டும் .
13.வீட்டின் முன்பு கண்திருஷ்டி படம் என்று கூறும் பூதம் படத்தை எடுத்துவிட்டு விநாயகர்,முருகர் படங்களை மாட்டவும் அப்போது தான் தெய்வாம்சம் காணப்படும் ,அதை விடுத்து அரக்கர் படம் எல்லாம் மாட்டகூடாது.
14.விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமெல்லாம் மாட்டகூடாது.
இது எதுவுமே செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை ஒரு நாளைக்கு ஓரு முறையாவது மகான் அரங்கமகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம் கூறவும் அப்போதுதான் அருள்செல்வம் முதலில் வரும் அப்புறம்தான் பொருள்செல்வம்.
ஓம் அகத்தீசாய நம!
ஓம் கரூவூர்தேவாய நம!
ஓம் போகதேவாய நம!
ஓம் கோரக்கதேவாய நம!
என்று கூறினால் பாவமாது குறையும்.
# அரங்க மகா தேசிகர்
சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தலாம் !!!
வணக்கம், நான் தமிழ் சித்த மருத்துவர் அருண் சின்னையா. உங்களோடு சிறகு இணைய இதழில் அளவளாவுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. தமிழர்களுடைய உணவுமுறை, மருத்துவம் எப்படி இருக்கிறது? எந்த வகையில் எல்லாம் முன்பு நல்ல நிலையில் இருந்தது, இன்றைய கால கட்டத்தில் தமிழ்ச் சமூகத்தின் உணவுகள் எப்படி எல்லாம் இன்று மாறிப் போய் விட்டது? தமிழர்கள் இன்று எப்படியெல்லாம் நோய்க்கு அடிமையாகிவிட்டார்கள்? நோய்க்கு அடிமையான காரணத்தினால் எப்படி எல்லாம் நம் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு ஒரு நடைப்பிணமாய் நாம் மாற்றப்பட்டிருக்கிறோம்? இதையெல்லாம் சென்ற கட்டுரையில் பார்த்தோம்.
இப்போது நாம் எதைப்பற்றி பேசப் போகிறோம், என்றால் சர்க்கரை வியாதி நோயைப்பற்றியே. சர்க்கரை வியாதியில் உலகத்திலேயே முன்னோடியாக இருக்கக் கூடிய நாடு எது? என்றால் அது இந்தியா. இந்தியாவிலேயே சர்க்கரை வியாதியில் முன்னோடியாக இருக்கக் கூடிய மாநிலம் எது? என்றால் நம்புங்கள் அது நம் தமிழ்நாடு தான்.
தமிழ் நாட்டிலேயே முன்னோடியாக இருக்கக் கூடிய ஒரு நகரம் எது என்றால் சென்னை. சக்கரை வியாதிக்கான மிகப் பெரிய வணிகச் சந்தையை தனக்குள்ளே உள்ளடக்கிக் கொண்டு, நடைப்பிணமாய் திரியக் கூடிய தமிழ் சமூகம் இன்று உருவாகி உள்ளது. அதற்கான காரணங்கள் என்ன? அது எப்படியெல்லாம் வருகிறது? அதை எப்படி தடுக்கலாம்? அதற்கான உணவு முறை கட்டுப்பாடுகள் என்ன? இதையெல்லாம் முழுமையாக அலசி ஆராயப்போகிறோம். முதலில் நீரிழிவு என்பது அன்றே சித்தர்களால் மது மேகம் என்ற பெயரில் சொல்லப்பட்டது. இந்த மது மேகம் எப்படியெல்லாம் வரும் என்பதை விளக்கும் சித்தர் பாடலானது . . . .
“கோதையார் களவின் போதை
கொழுத்த மீனிறைச்சி போதை
பாலுடன் நெய்யும்
பரிவுடன் உண்பீராகில்
வருமே பிணி”
என்று மது மேகத்தைப் பற்றி சொல்கிறார்கள் சித்தர்கள். அதாவது கோதையார் களவின் போதை என்று சித்தர்கள் சொல்லக் கூடிய ஒரு பெரிய காரணி என்ன என்றால் உடலுறவில் ஈடுபடும் பொழுது முழுமையாக செயல்படக் கூடியது நாளமில்லாச் சுரப்பி மண்டலம் ஆகும். ஆதலால் மதுமேக நோய் என்பது ஒரு ஹார்மோனல் கிருமி என்கிறார்கள். உடலில் இன்சுலின் என்கிற ஹார்மோன் குறைவதால் வரக் கூடிய நோய் இதுவாகும்.
சித்தர்கள் அன்றே தெளிவாக கூறியிருக்கிறார்கள் “கோதையார் களவின் போதை, கொழுத்த மீனிறைச்சி போதை” என்றால் நிறைய அசைவ உணவுகள், மந்த உணவுகள் எடுத்துக் கொண்டால் இந்த உணவின் மூலம் பாலியல் சார்ந்த உணர்வுகள் தூண்டப்பட்டு அதன் அடிப்படையில் அடிக்கடி பாலியல் சார்ந்த உறவுகளில் ஈடுபடும் பொழுது மது மேகம் என்ற நோய்க்கு மனிதர்கள் ஆட்படுகிறார்கள் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
அதே போல் “பாலுடன் நெய்யும், பரிவுடன் உண்பீராகில்” என்பது பாலாக இருந்தாலும் சரி, நெய்யாக இருந்தாலும் சரி அதை அரிசியோடு சேர்த்து எடுக்கும் கால கட்டத்தில் நீரிழிவு கண்டிப்பாக வரும் என்பது சித்தர்களின் கூற்று. இந்த மதுமேகந்தான் இன்று உலகையே அச்சுறுத்தக் கூடிய நீரிழிவு என்னும் நோயாகும்.. இந்த நீரிழிவு நோய் என்பது இன்று அனைவருக்கும் பொதுவாகிவிட்டது. நீரிழிவில் மூன்று வகையான நீரிழிவுகளைப் பார்க்கிறோம். குழந்தைகளுக்கு வரக்கூடியது (Juvenile) நீரிழிவு என்று சொல்கிறார்கள் இது முதல் விதம். இரண்டாவது மருந்துகளால் கட்டுப்படக் கூடிய நீரிழிவாகும்.
மருந்தே இல்லாமல் இன்சுலினுக்கு கட்டுப்படக்கூடிய நீரிழிவு. இது மூன்றாவது விதம். என்று மூன்று விதமான நீரிழிவு இருக்கிறது. சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்து விட்டது என்றால் அவருடைய முழுமையான செயல்பாடுகள் சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்து விடும். உடல் மெலிந்து விடும், அடிக்கடி சிறுநீர் கழிக்கக் கூடிய தன்மை இந்த மாதிரி அதன் அறிகுறிகளை கொடுமையாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு கால கட்டம் உண்டு.
இன்று தமிழ் நாட்டில் தமிழ்ச் சமூகம் சந்திக்கக் கூடிய ஒரு பெரிய பிரச்சினை என்ன என்றால் நீரிழிவு நோய், இது ஒரு குறைபாடு தான். இக்குறைபாட்டிலிருந்து நாம் மீள முடியும் என்கிற தன்னம்பிக்கையை இழந்து விட்டு எப்பொழுதும் மருந்துகளையும், மருத்துவர்களையும் தேடி அவர்கள் பின்னாலேயே ஓடக் கூடிய ஒரு நிலையில் தான் தமிழ் மக்கள் இன்று இருக்கிறார்கள். அதற்கான காரணம் என்ன என்று பார்த்தால், எவ்வளவோ உணவுப் பொருட்கள் சொல்லப்பட்டிருந்தாலும் நமக்கு அந்த பாரம்பரியமான உணவுப் பொருட்கள் இந்நோயை கட்டுப்படுத்தக் கூடிய தன்மையில் இருந்தாலும் கூட அந்த உணவுகளை நாம் எடுக்கத் தயாராக இன்று இல்லை.
ஏன் என்றால் நாம் அந்த அளவுக்கு அரிசியை பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம். அரிசியிலிருந்து கிடைக்கக் கூடிய Carbohydrates என்ற மாவுச்சத்து மிகவும் அதிகமாக இருகிறது. இந்த அரிசியையே தொடர்ந்து 2 வேளை அல்லது 3 வேளையாகச் சாப்பிடக் கூடிய மக்களுக்கு என்ன ஆகும்? நீரிழிவு தொடர்ந்து உடலிலேயே இருக்க ஆரம்பிக்கிறது. நீரிழிவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக அது உணவுகளால் தான் சாத்தியமாகும். இந்த அவசர கால யுகத்தில், உணவுப் பொருட்களில் நிறைய உடனடி உணவுகளைப் (Instant food) பயன்படுத்துகிறோம்.
என்னுடைய நீரிழிவுக்கான மருத்துவ சிகிச்சையின் போது நான் பலரையும் பார்த்திருக்கிறேன், காலை வேளையில் 2 பிரட்டையும், ஒரு கோக், பெப்சி, மிராண்டா போன்ற குளிர் பானத்தை குடிப்பவர்களுக்கு, ஒரு மாதமோ, இரண்டு மாதமோ அல்லது ஆறு மாதமோ இதையே பழக்கப்படுத்திவர்களுக்கெல்லாம் நீரிழிவு வந்திருக்கிறது. எனவே உணவில் நிறைய துரித உணவுகள், ரசாயன உணவுகள் எடுக்கக் கூடியவர்களுக்கு கண்டிப்பாக நீரிழிவு வருகிறது.
இதை எப்படி தடுக்கலாம், என்றால் மருந்து ஓரளவிற்கு கட்டுப்படுத்தத்தான் செய்யும், ஆனால் முழுமையாக குணப்படுத்திவிடாது. ஆனால் உணவுகளை அடையாளப்படுத்தி, தேர்ந்தெடுத்து சாப்பிடும் பொழுது சர்க்கரை நோயை முழுமையாக நாம் குணப்படுத்த முடியும். அன்றைய சித்தர்கள் சொன்ன மதுமேகந்தான் இன்று உலகையே ஆட்டிப் படைக்கக் கூடிய சர்க்கரை வியாதி.
இந்த சர்க்கரை நோய்க்கான காரணம் என்ன என்றால் அடித்துச் சொல்லலாம் உணவு முறைகளின் முரண்பாடுதான். இது பாரம்பரிய நோய், இது அம்மா அப்பாவுக்கு இருந்தால் நமக்கும் வரும் என்பது உண்மையாக இருந்தாலும் கூட அதைக் கண்டிப்பாகத் தடுக்க முடியும். எனவே அதற்கான உணவுகள் என்னென்ன? அதை எப்படியெல்லாம் நாம் பயன்படுத்தலாம் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த . . .
வெந்தயம்:
சர்க்கரை நோயை பிரதானமாக கட்டுப்படுத்தக் கூடிய தன்மை வெந்தயத்திற்கு உண்டு. வெந்தயத்தைப் பிரித்தால் வெந்த + அயம். வெந்த என்றால் பஸ்பமாகி விட்டது என்று அர்த்தம். அயம் என்றால் இரும்பு என்று பொருள். இரும்பை பஸ்பமாக்கக்கூடிய ஒரு பொருள் எது என்றால், அது வெந்தயம் தான். தொடர்ந்து வெந்தயத்தை வறுத்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வந்தால் கூட நீரிழிவு நோய் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.
பாகற்காய்:
அடுத்து பாகற்காய். பாகற்காயை நன்கு காயவைத்துப் பொடி செய்து காலை, இரவு என்று இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிடக் கூடியவர்களுக்கு கண்டிப்பாகச் சர்க்கரை நோய் முழுமையாகக் குறையும். சர்க்கரை நோய் என்பது தனி நோய் கிடையாது. இது பல நோய்களுடைய சார்பு நோய் ஆகும்.
அதாவது முதலில் நீ செல் பின்னாடியே நான் வருகிறேன் என்று சொல்வது மாதிரி ஒருவருக்கு சர்க்கரை நோய் வர ஆரம்பித்தது என்றால் தொடர்ந்து ரத்த அழுத்தம் வரலாம், கொழுப்பு நோய் ,கொழுப்பு சீரற்ற நிலையில் மாறலாம். ரத்தத்தில் Try Glyceride என்கின்ற கொழுப்பு இருக்கிறது.
அதே மாதிரி LDL என்று சொல்லக் கூடிய கெட்ட கொழுப்பும் இருக்கிறது. இந்த இரண்டும் அதிகமாக மாறும் பொழுது இதயம் சார்ந்த நோயும் வரலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இதயம் சார்ந்த நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உண்டு. சர்க்கரை அதிகமாகி கட்டுப்படாத சூழலினால் சிறுநீரகப் பாதிப்பு சார்ந்த நோயும் வரலாம். இதனால் சிறுநீரக செயலிழப்பு கூட உண்டாகலாம்.
நினைவுத்திறன் குறைந்து போவது, மூளைத்திறன் குறைந்து போவது இப்படி பல நோய்களைக் கொண்டுவரக் கூடிய நோயாக சர்க்கரை நோய் உள்ளது. நீரிழிவு என்றால் உடலை நீராய் இழக்கச் செய்யக் கூடிய ஒரு வியாதி நீரிழிவாகும். நம் உடம்பில் இருக்கக் கூடிய அனைத்து ஆதாரங்களையும் சிறிது சிறிதாக வெளியே கொண்டு வந்து விடும். அதாவது எலும்பு நம் உடம்பிற்கு வன்மை தரக்கூடியதாக இருந்தால் கூட, அந்த எலும்பையே கரைக்கக் கூடிய தன்மை இந்த நீரிழிவுக்கு உண்டு.
ஆதலால் நீரிழிவை நாம் உண்ணும் உணவின் மூலம் கட்டுப்படுத்த வேண்டும். நீரிழிவு நம் உடம்பை மென்மையாக்குகிறது. அப்பொழுது நன்றாக உண்ணக்கூடிய உணவுப் பொருட்களைச் சாப்பிட வேண்டும். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், எந்த உணவுப் பொருட்களில் துவர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறதோ அவைகள் நீரிழிவை கட்டுப்படுத்தும்.
வாழைப்பூ:
நீரிழிவு நோயாளி ஒருவர் வாழைப்பூவை கசாயம் செய்து சாப்பிட்டார் என்றால் கண்டிப்பாக நீரிழிவு கட்டுப்படும். ஆனால் வாழைப்பூவில் கடலைப்பருப்பைச் சேர்த்து இன்று நாம் பருப்பு வடையாகத்தான் சாப்பிடுகிறோம். இதே வாழைப்பூவுடன், சிறிது காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து அரைத்து துவையல் மாதிரி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது சர்க்கரை நோய் கட்டுப்படும்.
தென்னைமரப் பூ:
அதே மாதிரி தென்னம்பாலைக்குள் இருக்கும் தென்னை மரத்துப் பூவை நன்றாகக் காயவைத்து, அதைப் பொடி செய்து காலையிலும், இரவிலும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தோம் என்றால் சர்க்கரை நோய் கட்டுப்படுவதுடன் சர்க்கரை நோயால் தளர்ந்து போன நரம்புகள் அனைத்தும் சரியாகிவிடும். இதனால் நம் கண் பார்வையும் தெளிவாக இருக்கும்.
நீரிழிவால் நரம்பு பாதிக்கப்படுவதால் கண்ணில் வரக்கூடிய நோய்கள் நிறைய வரும். அதே போல் நம் பாதங்களிலும் பல நோய் வரும். இவை அனைத்தையும் சரி செய்யக் கூடிய தன்மை தென்னம்பாலைக்குள் உள்ள தென்னைமரத்துப் பூவுக்கு உண்டு.
நெல்லி, கடுக்காய், தான்றிக்காய் :
அது போல் நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் இதையும் சம அளவில் கலந்து வைத்துத் தொடர்ந்து திரிபலா என்கிற சூரணத்தையும் சாப்பிடும் பொழுது நீரிழிவு முழுமையாகக் கட்டுப்படக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு. அதே போல் இந்த சர்க்கரை நோய்க்கு என்ன செய்யலாம் என்றால், சமையலில் சீரகத்திற்குப் பதிலாக அல்லது சீரகத்துடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து சமையலில் ஈடுபடுத்தும் பொழுது சர்க்கரைக்கு அற்புதமான ஒரு மருந்தாக இருக்கும்.
அதே போல் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு ( Try Glyceride) அதாவது இதயத்திற்கு செல்லக் கூடிய ரத்த நாளங்களில் அடிக்கக் கூடிய ஒரு கொழுப்பு ட்ரை க்லீசரைடு. உலகம் முழுக்க அதற்கான மருந்துகள் குறைவு. அந்த மருந்துகளை உபயோகப்படுத்தினால் அதற்கான பக்கவிளைவுகள் அதிகம். இதை முழுமையாக சரி செய்ய நம் நாட்டு கருவேப்பிலை, லவங்கப் பட்டை, வெந்தயம் இந்த மூன்றையும் சம அளவில் கலந்து வைத்துக் கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக அற்புதமான பலன் கிடைக்கும்.
அன்றைய மது மேகத்தில் சித்தர்கள் சொன்ன உணவுகள் எல்லாம் இதுதான். சித்தர்களுடைய விஞ்ஞான பார்வைக்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்லாம். அதாவது அன்றைய காலத்தில் மதுமேகம் வந்த நோயாளிகளுக்கு சித்தர்கள் கொடுத்த மருந்து பருத்தி கொட்டை, எள்ளுப் புண்ணாக்கு, கோரைக் கிழங்கு, ஆவாரம்பூ போன்றவைகளையே மருந்தாகக் கொடுத்தனர். என்ன இது எருமை மாடு சாப்பிடுவதை மருந்து எனச்சொல்கிறாரே என்று நினைத்தால் அது தவறு.
இந்த உலகத்தில் நீரிழிவு என்ற நோய் பரவத்தொடங்கிய போது இன்சுலின் குறைபாடு உள்ளவர்களுக்கு மாத்திரையால் ஒரு சிலருக்கு சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் இன்னும் ஒரு சிலருக்கு மாத்திரை பலன் கொடுக்க வில்லை. அப்போது என்ன செய்தார்கள் என்றால் பன்றிகளுடைய கணையம், எருமை மாட்டுடைய கணையம் இந்த இரண்டு கணையத்திலிருந்து இன்சுலின் நுண்ணுயிர் எடுக்கப்பட்டு அது மனிதருக்கு ஏற்புடைய வகையில் இன்சுலினாக மாற்றப்பட்டு அதன் பிறகு, அதை மனிதர்களுக்கு மருந்தாகச் செலுத்தினார்கள்.
இப்பொழுது DNA கூட்டமைப்பு உள்ள human Insulin இன்று உலகம் முழுக்க வந்துவிட்டது. ஆனால் அதற்கு முன்பு கோரைக் கிழங்கையே பிரதானமாகச் சாப்பிடக் கூடிய பன்றிகளின் கணையத்திலிருந்து இன்சுலின் எடுக்கப்பட்டது, பருத்திக் கொட்டையையும், எள்ளுப் புண்ணாக்கையும் சாப்பிட்ட எருமை மாட்டுக் கணையத்திலிருந்து இன்சுலின் எடுக்கப்பட்டது. இதில் ஒரு ஆச்சர்யம் என்றால் சித்தர்களுக்கு எவ்வாறு இது தெரிந்தது என்று தெரியவில்லை. ஏன் என்றால் பிரதானமாக பருத்திக் கொட்டையிலேயும், கோரைக் கிழங்கிலேயும், எள்ளுப் புண்ணாக்கிலேயும் இன்சுலின் அளவு அப்படியே இருக்கிறது. அதில் உள்ள கந்தகச் சத்து அப்படியே வரும். நம் உடம்பில் இருக்கக் கூடிய கார்போ ஹைட்ரேட்- ஐ முழுமையாகக் கரைக்கக் கூடிய தன்மை இதற்கு உண்டு.
அதனால் தான் இன்றும் எனது கிராமத்தில் சர்க்கரை நோய் என்று கூறினால் யாரும் தொடர்ந்து மாத்திரை சாப்பிடுபவர்களை பார்க்கவே முடியாது. மிக எளிமையாக அரைக் கிலோ எள்ளு புண்ணாக்கு, அரை கிலோ பருத்திக் கொட்டை, அரை கிலோ ஆவாரம்பூ , 100 கிராம் கருஞ்சீரகம் இவற்றை உரலில் இட்டு இடித்து வைத்துக் கொள்கிறார்கள். இதில் ஒரு கையளவு எடுத்து சிறிது கருப்பட்டி, பனைவெல்லம் சேர்த்து இக்கலவையை நன்கு கொதிக்க வைத்து, அதை நன்றாக வடிகட்டி காலையிலேயும், இரவிலேயும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் தானாகவே சரியாகிவிடும்.
சர்க்கரை நோய் வந்தவர்கள் எந்த மருந்தை எடுத்தும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். அதற்குத் தகுந்த மாதிரி உடலில் வியர்வை உண்டாக்க வேண்டும். அதுதான் பிரதானமானது. நாம் சிறிது நடைப்பயிற்சி கூட செய்யாமல் இருப்பதனால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியாது. ஒரு இலகுவான நடைப்பயிற்சி, உடலை வருத்திச் செய்யக் கூடிய சில வேலை இவற்றையெல்லாம் செய்து வியர்வையை உண்டாக்கிக் கொள்ளவேண்டும். குறைந்தது 50 மில்லி அளவாவது சர்க்கரை நோயாளிகளுக்கு வியர்வை வர வேண்டும்.
இதில் இன்னும் பெரிய விசயம் என்னவென்றால் நீரிழிவால் வரக்கூடிய கால் புண்ணானது குழிப் புண்ணாக மாறிவிடும். அந்தப் புண்ணுக்கு ஆங்கில மருத்துவத்தில் டின்ஜர், டெட்டால், மற்றும் சில மருந்துகளையும் சேர்த்து குணப்படுத்துகிறோம் பேர்வழி என்று சொல்லி, பிறகு காலையே வெட்டக் கூடிய ஒரு நிலை வருகிறது. கிராமங்களில் வெறும் ஆவார இலையை அவித்து அந்த புண்ணில் வைத்து கட்டுகிறார்கள். அதன் பின் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் அப்புண் குணமாகி விடுகிறது அவ்வளவு அதிசயமான விசயம் எல்லாம் சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்.
சர்க்கரை நோயில் ஆவாரம்பூவிற்கு ஒரு பிரதானமான இடம் இருக்கிறது. அதில் தங்கத்தின் சத்து இருப்பதாக சித்தர்கள் கூறுகிறார்கள். ஆனால் இன்றைய விஞ்ஞானம் இப்பூவை ஆராய்ச்சி செய்து பார்க்கும் பொழுது அதில் தங்கத்தின் கூறுகள் இருப்பதை ஒத்துக் கொள்கிறது. ஆவாரம்பூ இந்நோய்க்கு அவ்வளவு அற்புதமானது. அதனால் சித்தர்கள் கூறுவார்கள் “ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ” என்று. இந்த ஆவாரையைத் தொடர்ந்து சாப்பிடக் கூடியவர்களுக்கு சாவே இல்லை என்று கூறுகிறார்கள். சர்க்கரை நோயில் அது முழுக்க முழுக்க உண்மை.
இன்று சர்க்கரை நோய்க்கு இனிப்புத் துளசி சாப்பிடுபவர்கள் நிறைய நபர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் ஆவாரம் பூவை தேநீராகச் சாப்பிடும் பொழுது சர்க்கரை நோய் கட்டுப்படுவதை நாங்கள் கண் கூடாக காண்கிறோம். சத்தாகச் சாப்பிடுங்கள் சர்க்கரையைக் கட்டுபடுத்துங்கள் என்று நாங்கள் கூறுகிறோம். உணவை கட்டுப்படுத்தும் பொழுது அந்த உணவின் ஊட்டமேல்லாம் குறைய ஆரம்பிக்கிறது. ஆக தேர்ந்தெடுத்த உணவை நாம் எடுக்கும் பொழுது நல்ல முழுமையான பலன் கண்டிப்பாக கிடைக்கும்.
'ஆவாரம்பூ, சுக்கு, ஏலக்காய் இவற்றை தொடர்ந்து கொதிக்கவைத்து கசாயமாகச் சாப்பிடும்பொழுது சர்க்கரை நோய் முழுமையாக கட்டுப்படும்.இது மிக எளிமையான வழிமுறைஆகும். தேநீர் சாப்பிடக் கூடிய அதே சுவை இதிலேயும் இருக்கும். ஆவாரம்பூ தேநீர் சாப்பிட்டுப் பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும். இன்னும் சர்க்கரை நோய்க்கு சிறுகுருஞ்சான், நாவல் கொட்டை, மருதம்பட்டை, வேப்பம்பட்டை, கடலலஞ்சில் இவை ஐந்தையும் சம அளவு கலந்து, பொடி செய்து வைத்துகொண்டு காலை, இரவு நேரம் தொடர்ந்து சாப்ப்பிட்டுக் கொண்டு வந்தால் சர்க்கரை நோய்க்கு நல்ல பலன் இருக்கும்.
நீரிழிவு என்றால் உடம்பை மென்மைப் படுத்தக் கூடிய ஒரு வியாதி ஆகும், அந்த நீரிழிவைக் கட்டுப்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் உடம்பு நல்ல சக்தி பெரும். நீரிழிவு நோயாளிகள் உடம்பில் அதிகம் நீர்ச்சத்து இழக்காமல், தண்ணீர் தாகம் அதிகம் இல்லாமல், நாவு வறட்சி இல்லாமல் இருக்க கவனம் செலுத்த வேண்டும். நாம் மேலே கூறிய உணவுகளை எல்லாம் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.
நாம் உணவில் நிறைய பிஞ்சுக் காய்கறிகளான முருங்கைப் பிஞ்சு, பீர்க்காய்ப் பிஞ்சு , புடலங்காய்ப் பிஞ்சு, பீன்ஸ், அவரை இவை அனைத்தையும் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வாருங்கள். இன்று இருக்கும் அலோபதி மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளிடம் கேரட் சாப்பிடாதீர்கள், அது சர்க்கரை நோய்க்கு நல்லதில்லை என்று கூறி வருகிறார்கள். அவர்கள் அப்படிச் சொன்னதனால் 10 வருடமோ அல்லது 15 வருடமோ கேரட்டையே சாப்பிடாத சக்கரை நோயாளிகள் எனக்கு தெரிந்து நிறைய பேர் இருக்கிறார்கள். கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது.
இதில் பீட்டா கரோடினாய்ஸ் எனும் ஊட்டச் சத்து இருப்பதனால் நம் தோல் பகுதிக்கு கீழ் இருக்கக் கூடிய தசை பகுதியில் சக்தியை சேர்த்து வைக்கக் கூடிய தன்மை கேரட்டிற்கு உண்டு. அதனால் தாராளமாக நீரிழிவு நோயாளிகள் கேரட்டைச் சாப்பிடலாம் தவறில்லை.
அது போல் தமிழ் நாட்டில் இருக்கக் கூடிய ஆங்கில மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை பார்த்து இளநீர் சாப்பிடாதீர்கள் என்று கூறி திசை திருப்புகிறார்கள். இளநீர் சாப்பிட்டால் கண்டிப்பாக நீரிழிவு அதிகமாகிவிடும் என்று கூறி நோயாளிகளைப் பயமுறுத்துகிறார்கள். இது தவறான செயலாகும். நான் அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன், கரும்புச் சாற்றிலிருந்து சர்க்கரை தயார் செய்யலாம், இளநீரிலிருந்து சர்க்கரை தயார் பண்ண முடியுமா? இதை யோசித்து பாருங்கள். இளநீரில் அத்தனை கால்சியமும் இருக்கிறது. அச்சத்தில் புண்களை ஆற்றக் கூடிய தன்மை இருக்கிறது. ஒரு தட்டுச் சாப்பாட்டில் இருக்கக் கூடிய கார்போ ஹைட்ரேட்ஸ் இளநீரில்கிடையாது.
அதனால் என்னைப் பார்க்க வரும் நோயாளிகளுக்கு நான் கூறுவது, இளநீரில் வெந்தயத்தை ஊற வைத்து, அந்த வெந்தயத்தையும் இளநீரையும் நன்கு கலந்து சாப்பிடுங்கள் என்கிறேன். அப்படிச் சாப்பிட்டால் சர்க்கரை முழுமையாகக் கட்டுப்படக் கூடிய வாய்ப்பு உள்ளது. அதே மாதிரி மருதம்பட்டையைக் கசாயம் செய்து தொடர்ந்து சாப்பிடும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.
நாம் உண்ணும் உணவில் பல்வேறு உணவுகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் திணிக்கத் தயாராகி கிட்டத்தட்ட 17 வகையான நூடுல்ஸ்சில் அதிக பொட்டாசியம் சத்து , அதிக சோடியம் சத்து ஆகியவை அதிகமாக இருக்கிறது கூவிக் கூவி விற்பனை செய்து நம்மை வாங்க வைக்கிறது. இதை இந்திய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து, இந்த பன்னாட்டு உணவுகள் உண்பதற்கு ஏற்ற உணவுகள் அல்ல, இவைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் ஆதாலால் இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொன்னால் கூட, இவைகளை நிறுத்துவதற்கு எந்த அரசும் தயாராக இல்லை. ஏன் என்றால் பன்னாட்டு நிறுவனங்கள் கொடுக்கக் கூடிய மிகைமிஞ்சிய வரியே இதற்குக் காரணம் ஆகும்.
இந்தத் தொகை பெரிய தொகையாக ஆளுகின்றவர்களுக்கு தெரிவதால் மக்களுடைய அடிப்படை ஆரோக்கியத்தைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாத ஒரு சூழல் இருக்கிறது. ஆக ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கான விழிப்புணர்வை அவன்தான் தேடி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான வாழ்விற்கு உணவுக் கட்டுப்பாடு என்பது கண்டிப்பாக வேண்டும். உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டிய விசயமும் நம் கையில் தான் இருக்கிறது.
சித்தர்கள் சொன்ன சிறு தானியங்கள் வரகரிசி, திணை அரிசி, குதுரவாலி, சாமை எல்லாமே நார்ச்சத்து உள்ள அற்புதமான உணவுகள். இந்த உணவுகளை ஒரு வேளையோ, இரு வேளையோ சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிடும் பொழுது நோய் கட்டுப்படக் கூடிய ஒரு தன்மை உண்டு. சர்க்கரை நோய் வந்து விட்டாலே உடலில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணச்சத்து இவைகள் குறைந்து விடும். இவற்றை ஈடுகட்ட துவர்ப்பான உணவுகளை எடுத்துக் கொண்டால் சர்க்கரையை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்.
இந்தியாவானது இன்று உலகத் தாயாரிப்புகளை விற்கும் பெரும் வணிகச் சந்தையாக, வளர்ந்த நாடுகளுக்கென மாறிவிட்டது. அதனால் தான் இங்கு நோய் மறைமுகமாக விதைக்கப்படுகிறது. அந்த நோய்களை இங்கு விதைத்து, மறைமுகமாக இங்குள்ள நிதி ஆதாரங்கள் கொள்ளயடிக்கப்படுகிறது. எனவே நாம் தான் நுகர்ர்வுப் பொருட்களை வாங்கும் பொது மிகக்கவனமாக இருக்க வேண்டும்.
2007 கணக்குப்படி இந்தியாவில் சர்க்கரை வியாதிக்கான வணிக மதிப்பு 700 கோடி. அமெரிக்காவின் எலிலில்லி என்ற நிறுவனம் தயாரிக்கின்ற மருந்துகள் இங்கு மட்டும் 700 கோடி ரூபாய்க்கு விற்பனையாகக் கூடிய வணிகச் சந்தையாக நம் நாடு இருக்கிறது.. இது இன்று கிட்டத்தட்ட 1000 கோடியைத் தாண்டி சென்றிருக்கும். அதனால் நம்முடைய நிதி ஆதாரங்கள் கொள்ளயடிக்கப்படாமல், நம்முடைய நாடு வளமையான நாடாக மாற வேண்டும் என்றால்,நாம் நல்ல உடல் நலத்தோடு, உடல் வளத்தோடு இருக்க வேண்டும்.
அவ்வாறு மாறும் பொழுதுதான் ஒரு முழுமையான, ஒரு ஆரோக்கியமான இந்தியாவை, ஒரு ஆரோக்கியமான தமிழ்ச் சமூகத்தை நாம் படைக்க முடியும். எப்பவுமே நோய்வாய்ப்பட்டவனிடம் படைப்பாற்றல் குறைந்து விடும். ஒரு நல்ல ஆற்றல் உள்ள, படைப்புத்திறன் உள்ள தமிழ் சமூகம் மறுபடியும் வரவேண்டும், வளரவேண்டும் என்றால் சர்க்கரையை கட்டுப்படுத்த வேண்டும்.
அவ்வாறு கட்டுப்படுத்துவதற்கு உணவே மருந்து மருந்தே உணவு என்ற சித்தர்கள் கோட்பாட்டின் படி அனைவரும் முயற்சி செய்யவேண்டும். நான் கூறிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உணவே அடிப்படையாகக் கொண்ட மருந்துப் பொருட்கள் எல்லாவற்றையுமே தொடர்ந்து சாப்பிடுங்கள். அடுத்த முறை சிறகு இணைய இதழில் சர்க்கரை நோயினால் வரக் கூடிய சார்பு நோய்கள் பற்றி விரிவாக எடுத்தியம்ப இருக்கிறேன்.
சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு ஆஸ்துமா, இதய நோய், சிறுநீரக நோய் ஆகிய நோய்களும் துணை நோய்களாக இருக்கிறது. நான் மறுபடியும் உங்களுடன் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் கருத்துக்களை நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். நன்றி,
-படித்ததில் பிடித்தது

Saturday 23 May 2015

சர்க்கரைநோய் தீர்க்கும் சரியான
ஆசனங்கள் (பாகம் 3) !!!
(2-ம்பாகத் தொடர்ச்சி)
பத்மாசன நேரம்:-
பத்மாசனத்தின் நரம்பியல் ரீதியான விளக்கங்களையும், பயன்களையும் படிக்கும் வாசகர்களுக்கு, இவ்வளவு நல்ல ஆசனத்தை நீண்டநேரம் பழகினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் வரலாம். பொதுவான மானுட உடல் நலத்துக்குப் பத்து அல்லது பன்னிரண்டு ஆசனங்கள் போதுமானவை. இப்படி ஆசனங்களைப் பயிலுபவர்கள் பத்மாசனத்தில் ஒரு நிமிடம் இருந்து குருவணக்கத்தை முடித்துக்கொண்டு, அடுத்து எல்லா ஆசனப்பயிற்சிகளையும் முடித்துக்கொண்டு, கடைசியாக தியானம் செய்வதற்காகப் பத்மாசனத்தில் கால்கள் வலிக்காத வகையில் எவ்வளவுநேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
கமலசாதகன்:-
பத்மாசனத்தில் சாதாரணமாக ஒரு நிமிடம் முதல் அரைமணி நேரம்வரை இருக்கலாம். இதனால் மானுடஉடம்பும், மனமும் அற்புதமான இயற்கைப் பயன்களைப் பெற்றுக் கொள்கின்றன. இப்படி அரைமணி நேரம் பத்மாசனம் பழகும் சாதகனைக் கமலசாதகன் என்றும், ஒரு பெண் இப்படிப்பழகினால் அவளைக் கமலசாதகி என்றும் யோகாசாத்திரம் குறிப்பிடுகிறது. இவனது உடம்பும்இ நரம்பு மண்டலமும் உன்னதமாக இயங்கும். அதுமட்டுமல்லாமல் இவனைச்சுற்றி ஒரு காந்தசக்தி வளையம் உருவாகி இவனுக்குத் தெய்வீக சக்திகளைத் தரும். இவனுக்கு வாழ்க்கiயில் துன்பங்கள் வரமாட்டா. வந்தாலும் இவை எளிதாக நசிந்து போய்விடும் என்றும் யோகசாத்திரம் வாக்களிக்கிறது.
கமலபீபத்சு:-

ஒரு கமலசாதகன் அரைமணி நேர பத்மாசன சாதகத்தில் தெய்வீக சக்திகளைப் பெற்றுக் கொள்ளுகிறான். இந்தப்பயிற்சிளை ஒரு ஆணோ அல்லது பெண்ணோ ஒன்றரை மணிநேரம் பத்மாசனம் பழகி அதைக் காலை, மாலை தினசரிப் பழக்கமாக்கிக் கொண்டுவிட்டால் இவனைக் கமலபீபதச்சு என்று யோகசாத்திரம் போற்றுகிறது. இந்தக் கமலபீபத்சன் தெய்வத்துக்குச் சமமானவன். இவன் கைபட்டால் துயரங்கள் அகலும. இவன் பாதங்கள் பட்ட இடம் தோஷங்கள் அகன்று சுபம் பெறும்.
பெண்கள் இந்தப் பத்மாசனத்தைக் காலை, மாலை இரண்டு வேளையும் அப்பியாசம் செய்துவந்தால் அவள் எல்லாவிதப் பயன்களையும் அடைவதோடு, தெய்வீகசக்திகள் மிகுந்த தேவதைக்கு ஈடானவள் ஆவாள். இவளே ஒரு கன்னிப் பெண்ணாக இருந்தால் நல்ல கணவனும், நவநிதியங்களும், சற்புத்திரப் பேறும் உண்டாகும். இப்படிக் கமலசாதகம் செய்கின்ற பெண் எவளும் அமங்கலி ஆகமாட்டாள். இருக்கும் காலம்வரை மஞ்சள், குங்குமம், புஷ்ப பூஷணாதிகளோடு தீர்க்க சுமங்கலியாகவே இருப்பாள். கல்வியும், ஞானமும், ஒழுக்கமும், தேகசுகமும், நிறைஆயுளும் கொண்ட நல்ல சந்ததிகள் அவள் வயிற்றில் பிறப்பார்கள். இவர்களின் காந்த சக்தியானது கோள்களின் தீய சக்திகளை வென்றுவிடுவதால், ஜாதகரீதியான கிரகங்களின் தீய பலன்களும் மாறி விடுகின்றன என்று யோகசாத்திரம் கூறுகிறது.
ஒரு வேண்டுகோள்:-
ஏதோ பத்மாசனத்தை மேன்மைப்படுத்த வேண்டும் என்று கருதி நான் இவற்றையெல்லாம் ஜோடனை செய்து எழுதியிருப்பதாக யாரும் கருதவேண்டாம். இதைச் சோதனைக்காக எடுத்துக்கொண்டு பழகி எவரும் சோதித்துப் பார்க்கலாம். சில நாட்களிலேயே இதன் நிஜத்தை உணர்வீர்கள். மனித காந்தசக்தி என்பது அளப்பெரிய வல்லமையுடையது. பத்து அல்லது இருபதுபேர் சேர்ந்து இதை அப்பியாசம் செய்து, சொந்த அனுபவங்களையும் சுற்றுப்புற விளைவுகளையும் ஆய்வு செய்து பார்த்தால் அதன் உண்மைகள் வியப்பளிப்பனவாக இருக்கும்.
இந்த யோகாசன விளக்கத்தின் மூலமாச் சர்க்கரைநோயை அடியோடு தீர்த்துப் பூரண நலத்தைத் தரக்கூடிய ஆசனங்களை மட்டும் எடுத்துக்கொண்டு பயில இருக்கிறோம். ஆதலால் வாசகர்களின் ஆர்வத்தையும் வேகமான எதிர்பார்ப்பையும் கருத்தில் கொண்டு இப்போது அடுத்த ஆசனப்பயிற்சிக்கு வருகிறோம். இந்த ஆசனத்தைப் பற்றியும் கொஞ்சம் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். ஒரு ஆசனத்தைப்பற்றிய நம்பிக்கை வரவேண்டுமானால், அது உடம்பில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளங்கிக் கொள்ளவேண்டியது அவசியமானதாகும். அவ்வாசனம் உடம்பில் செயற்படும் சிறப்பை விபரிக்கும்போது நமது உடம்பின் உள்ளுறுப்புக்களின் இயக்கத்தையும், அந்த இயக்கங்களில் யோகாசனத்தின் செயற்பாடுகள் என்ன என்பதையும் ஒப்பிட்டு விளங்கிக் கொள்ளுகின்ற போது பயிற்சியாளருக்குப் பூரணமான நம்பிக்கையும் உற்சாகமும் பிறந்துவிடுகிறது. இந்த நம்பிக்கைதான் அவர் பயிற்சியைக் கைவிடாமல் தொடர வழிவகுக்கும். இனி அடுத்த ஆசனம்பற்றிய விளக்கத்துக்கு வருவோம்.
வஜ்ராசனம்:-
செய்முறை:-
தரையில் ஒரு நல்ல விரிப்பை மெத்தென்று மடித்துப் போட்டுக்கொள்ள வேண்டும். படத்தில் காட்டியுள்ளபடி முழங்கால்களை மடித்து இரண்டு பாதங்களையும் மலர்த்தி பிருஷ்டங்களைப் பாதங்களுக்கு இடையில் வசமாகப் பொருத்தி அமர்ந்துகொள்ள வேண்டும். நன்கு நிமிர்ந்து உட்கார்ந்து இரண்டு உள்ளங்கைகளையும் இரண்டு முழங்கால் முட்டிகளின்மேல் கவிழ்த்துப் பொருத்திக் கொள்ள வேண்டும். இயல்பாகச் சுவாசித்துக்கொண்டு இருக்கலாம். இவ்வாறு இரண்டு நிமிடம் முதல் பத்து நிமிடம்வரை இருக்கலாம். சிரமம் இல்லாத பட்சத்திலோ அல்லது தேவைப்படுகின்ற பட்சத்திலோ அரைமணி நேரம்கூட வஜ்ராசனத்தில் இருக்கலாம்.

ஒரு வாய்ப்பு:-
யோகாசனங்களைச் செய்யத் தொடங்குவதற்கு முன்னால் பத்மாசனம் போட்டுக் குருவணக்கம் அல்லது இறைவணக்கம் செய்ய வேண்டுமென்று எழுதியிருந்தேன். அப்படிப் பத்மாசனம் போடமுடியாதவர்கள் ஒருகாலை மட்டும் தூக்கிப்போட்டு வணங்கலாம். இப்படி ஒருகாலை மட்டும், அதாவது வலது பாதத்தை மட்டும் இடது தொடையின்மேல் போட்டுச்செய்வதற்கு அர்த்த பத்மாசனம் என்று பெயர் என்றும் குறிப்பிட்டிருந்தேன். அதைக்கூடச் செய்ய முடியாதவர்கள், பத்மாசனத்தைச் செய்யாமலே நேராக வஜ்ராசனத்துக்கு வந்துவிடலாம். வஜ்ராசனத்தில் இருந்தபடியே குருவணக்கமோ, இறைவணக்கமோ செய்துவிட்டு அதற்குமேல் ஆசனங்களைத் தொடர்ந்து செய்யலாம். இதில் ஒரு பிழையும் இல்லை. சிலபயிற்சிகளைச் செய்து உடம்பு இணக்கத்துக்கு வருகின்றபோது பத்மாசனம் எளிதாக வந்துவிடும்.
நமது ஜீரணமண்டலம்:-
இப்போ வஜ்ராசன விளக்கத்துக்கு வருகிறோம். வஜ்ராசனம் செய்வதால் கிட்டும் பலன்களைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், நமது உடம்பில் ஜீரணம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் உபயோகமாக இருக்கும்.

நமது வாயில் எப்பொழுதும் உமிழ்நீர் சுரந்துகொண்டே இருக்கும். இதை எச்சில் என்று கூறுவோம். சாதாரணமாக வெறும் வாயில் சுரக்கின்ற எச்சிலுக்கும், ஏதாவது சாப்பிடுகின்றபொழுது வாயில் சுரக்கின்ற உமிழ்நீருக்கும் விசேஷமான சில வேறுபாடுகள் உண்டு. நாம் வாயில் உணவைப் போட்டு மெல்லுகின்ற போது வாயிலுள்ள உமிழ்நீர்ச் சுரப்பிகள் உமிழ்நீரைச் சுரந்து வாயிலுள்ள உணவோடு கலக்கச்செய்கின்றன. உணவு விழுங்கப்பட்டு தொண்டையிலே செல்லுகின்றபோது அங்கே காஸ்ட்ரிக் அமிலம் சுரந்து உணவோடு கலந்து இரைப்பையை அடைகிறது. இரைப்பையில் ஐதரக்குளோரிக் அமிலம், பெப்சின் என்ற ஒருவகை ஜீரணநீர் ஆகியவை சுரந்துஇ உணவை இரைப்பை பிசைகின்றபோது உணவோடு கலந்து விடுகின்றன. இவ்வாறு அமிலங்கள் உணவோடு கலப்பதால் உணவானது மென்மைத் தன்மையை அடைகிறது. பின்னர் இரைப்பையின் அசைவுகளினால் அந்த உணவு கூழ் போன்ற நிலைக்கு வருகிறது.
தொண்டையிலும் இரைப்பையிலும் சுரக்கின்ற அமிலங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை ஆகும். இவ்வளவு சக்திவாய்ந்த அமிலங்களால் இரைப்பையை ஒன்றும் செய்யமுடிவதில்லை. காரணம் இரைப்பையலுள்ள உணவு இவ்வமிலங்களின் தாக்கத்தை ஏற்றுக்கொள்கிறது. அதுமட்டுமன்றி இரைப்பையின் சுவர்களில் மெல்லிய வெல்வெற் போன்ற ஒருவகையான பூச்சு இருக்கின்றது. இந்த இயற்கைப் பாதுகாப்பும் அமிலங்களால் இரைப்பை சேதமடைவதைத் தடுக்கிறது
சிலருக்கு இந்த அமிலங்களின் சுரப்பு அதிகமாக இருக்கும். சிலருக்கு வயிற்றில் உணவு இல்லாதபோதும் அமிலம் சுரக்கும். இம்மாதிரியான விளைவுகளால் வயிற்றுப்புண் குடற்புண் ஆகியவை உண்டாகின்றன. இதையே அல்சர் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். வஜ்ராசனப் பயிற்சி இவ்வமிலச் சுரப்புக்களையும், அவற்றின் வீரியங்களையும் அளவுடையதாக்கிக் கட்டுப்படுத்துகிறது. இதனால் சுகஜீரணம் உண்டாகி அல்சர் உபாதைகளிலிருந்து தப்பிக்கொள்ள முடிகிறது.
இரைப்பையில் பிசையப்பட்டுப் பக்குவமாக்பட்ட உணவு இப்போது சிறுகுடலுக்கு தள்ளப்படுகிறது. சிறுகுடலின் நீளம் இருபது அடி என்று சொல்லாப்படுகிறது. சிறுகுடலிலுள்ள குடல் உறிஞ்சிகள் என்ற நுண்ணிய உறிஞ்சிகளால் உணவிலுள்ள சத்துப்பொருட்கள் கிரகிக்கப்பட்டு இரத்தத்தோடு கலக்கின்றன. சிறு குடலில் அமிலங்கள் தேவையில்லை. அப்படியிருந்தால் சிறுகுடல் புண்ணாகிவிடும். ஆகவே பக்குவமான உணவு சிறுகுடலுக்குள் செல்லுகின்றபோதே கல்லீரல்; கணையம் (பாங்கிரியஸ்) போன்ற சுரப்பிகள் சிலவகையான ரசங்களைச் சுரந்து, சிறுகுடலுக்குள்ளே வரவிருக்கும் வீரியமுள்ள அமிலங்களைச் செயலிழக்கச் செய்துவிடுகின்றன. இதனால் சிறுகுடல் அமிலங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதனை மருத்துவர்கள் அல்கலீன் ஜூஸ் என்று சொல்லுவார்கள். நமது வயிற்றின் உறுப்புக்கள் செய்யும் எத்தனையோ வகையான அற்புதமான பணிகளில் இதுவும் ஒன்று

Friday 22 May 2015

தெரிந்து கொள்ள வேண்டிய நில அளவைகள்!
1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்
1 ஹெக்டேர் - 10,000 சதுர மீட்டர்
1 ஏக்கர் - 0.405 ஹெக்டேர்
1 ஏக்கர் - 4046.82 சதுர மீட்டர்
1 ஏக்கர் - 100 சென்ட் (4840 சதுர கெஜம்)
1 சென்ட் - 435.6 சதுர அடிகள்
1 சென்ட் - 40.5 சதுர மீட்டர்
1 கிரவுண்ட் - 222.96 சதுர மீட்டர் (5.5 சென்ட்)
1 கிரவுண்ட் - 2400 சதுர அடிகள்
1 குழி - 44 சென்ட்
1 மா - 100 குழி
1 டிஸ்மிஸ் - 1.5 சென்ட்
1 காணி - 132 சென்ட் (3 குழி)
1 காணி - 1.32 ஏக்கர்
1 காணி - 57,499 சதுர அடிகள்
1 அடி - 12 இஞ்ச் (30.48 செ.மீட்டர்)
1 மைல் - 1.61 கிலோ மீட்டர்
1 மைல் - 5,248 அடிகள்
1 கிலோ மீட்டர் - 1000 மீட்டர் (0.62 மைல்)
1 மிட்டர் - 3.281 அடிகள்
சர்க்கரைநோய் தீர்க்கும் சரியான
ஆசனங்கள் (பாகம் 5)
(4-ம்பாகத் தொடர்ச்சி)
சர்ப்பாசனம்:-
சர்ப்பாசனத்துக்கும் சர்க்கரை நோய்கும் சம்பந்தமில்லை. ஆனால் சர்ப்பாசனத்துக்கும் உடம்புக்கும் தொடர்பு இருக்கின்றது. ஒரு ஆசனத்தைச் செய்கின்றபோது அதன் இயக்கம் உடம்பில் அபாரமாகச் செயற்படகிறது. அந்த வகையில் ஒரேயொரு ஆசனம்கூட எத்தனையோ நல்ல விளைவுகளை உடம்பில் உண்டாக்குகிறது. பொதுவாக முதுகெலும்பில் ஒரு ஆசனம் சிறப்பாக இயங்குகின்றபோதே தண்டுவடமும் மூளையும் சுறுசுறுப்படைகின்றன. அப்போது தண்டுவடத்தோடு தொடர்புடைய பல நரம்பு மையங்கள் விழிப்படைகின்றன. இந்த நரம்பு மையங்களை வர்மமுடிகள் என்று சொல்லுகிறோம். இந்த விழிப்பினால் அந்த நரம்பு மையத்தோடு தொடர்புடைய உடம்பின் பகுதிகளெல்லாம் நலம்பெறுகின்றன.
சர்க்கரைநோய் குணமாவதோடு, உடம்பின் இதரபகுதிகளும் ஆரோக்கியமாக இருக்கவேண்டியது அவசியமென்பதற்காக ஒருசில ஆசனங்களை இடையில் நுழைக்க வேண்டியது தவிர்க்க முடியாமலுள்ளது. கணையம் என்ற ஒரு உறுப்பு மட்டுமே நமது உடம்பல்ல. இதயம், நுரையீரல், கல்லீரல், வயிறு, குடல், தண்டுவடம் இப்படி எல்லாப் பாகங்களும் எப்போதும் வலிமையாக இருந்தாக வேண்டும். அந்த வகையில் அமைக்கப்பட்டுப் பயிலும் ஆசனத்தொகுப்புத்தான் நமக்குப் பூரண நலத்தைத் தரமுடியும். அத்துடன் ஒரு ஆசனம் உடம்பில் உண்டாக்கிய விளைவுகளை, அடுத்துப் பயிலும் ஆசனம் சமன்செய்து புதிய விளைவைத் தருவதாக அமையவேண்டும். இந்த வகையில் சர்ப்பாசனத்துக்கும் நமது உடம்புக்கும் நிறையத் தொடர்புண்டு.
ஒருவருக்குச் சர்க்கரை நோய் மட்டுமல்லாது வாயுத்தொல்லை, கழுத்துவலி, தோள்வலி, இருதயவலி இப்படி வெவ்வேறு துன்பங்களும் இருக்கலாமல்லவா? இங்கே கூறப்பட்டுள்ள முறைகளைக் கொண்டு ஆசனங்களைத் தொடங்கும் ஒரு பயிற்சியாளர் பூரண உடல்நலத்தோடு விளங்க இந்தப்பயிற்சிகள் உபயோகமாக இருக்கும்.
சர்ப்பாசனம்:-
சர்ப்பம் என்றால் பாம்பு என்று பொருள். இவ்வாசனம் பாம்பு நமிர்ந்து படம் எடுப்பது போன்ற தோற்றத்தைத் தருவதால் இதற்கு சர்ப்பாசனம் என்ற பெயர் வந்தது. இதையே புஜங்காசனம் என்றும் சொல்வதுண்டு.
செய்முறை:-
விரிப்பின்மேல் கவிழ்ந்து படுக்க வேண்டும். இரண்டு உள்ளங்கைகளையும் கவிழ்த்து இரண்டு காதுகளுக்கும் பக்கம் பக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். மூச்சை ஒருமுறை ஆழ்ந்து இழுத்து, இழுத்த மூச்சு முழுவதையும் வெளியே விட்டுவிடவேண்டும். இரண்டு உள்ளங்கைகளையும் தரையில் வசமாக ஊன்றிக்கொண்டு மார்பு, கழுத்து, வயிறு இவற்றை மேலே நிமிர்த்த வேண்டும் இடுப்பும் அதன் கீழ்ப்பகுதிகளும் நன்கு தரையில் படிந்திருக்கவேண்டும். பாதங்கள் தரையில் படியும்படியாக கால்கள் இரண்டும் நீட்டிய நிலையில் இருக்கவேண்டும். அதேசமயம் கால்கள், கைகள் இவற்றை விறைத்து நீட்டிக் கொள்ளக்கூடாது. எவ்வளவுக்கு அண்ணாந்து மேலே பார்க்கமுடியுமோ அவ்வளவிற்கு அண்ணாந்து கூரையைப் பார்க்கவேண்டும். மூச்சில்லாத இந்த நிலையில் பத்து நொடிகள் இருந்தால் போதும். இந்தப்பத்து நொடிநேரம் சுவாசம் இல்லாமல் வெற்று நுரையீரலோடு இருக்க முடியாதவர்கள் இலேசாக சுவாசித்துக் கொள்ளலாம். பழகப்பழக இந்தநிலை சரியாக வந்துவிடும்.
பின்னர் கவிழ்ந்து தலையை மட்டும் ஒருக்களித்து வைத்துக்கொண்டு சில நொடிகள் இளைப்பாறிவிட்டு மீண்டும் செய்ய வேண்டும். இப்படிச் சர்ப்பாசனத்தை ஐந்து அல்லது ஆறு தடவைகள் செய்யவேண்டும். சாதாரணமாக உடல் நலத்துக்கு இது போதும். சிலருக்கு நெஞ்சுவலி, மூச்சிரைப்பு இருக்கலாம் இவர்கள் இவ்வானத்தை முதலில் ஐந்து முறை செய்து பழக்கத்தில் வந்தபின்னர் கூடுதலாகப் பத்து தடவைகள் செய்யவேண்டும். இதற்குமேல் வேண்டாம்.
கழுத்து எலும்பு தேய்ந்ததால் கழுத்துவலி இருப்பவர்கள் சர்ப்பாசனத்தை நான்கு தடவை செய்துவிட்டு சர்ப்பாசனத்திலேயே கண்டக்கிரியா என்ற பயிற்சியைச் செய்யவேண்டும். கைகளை ஊன்றி நிமிர்ந்தும் சர்ப்பாசனத்தில் இருந்தபடியே கழுத்தை இடதுபக்கமாகத் திருப்பி, நீட்டியிருக்கும் இடதுகால்பாதத்தை இரண்டு அல்லது மூன்று நொடிகளும்இ பின்னர் அப்படியே வலது பக்கமாகக் கழுத்தைத் திருப்பி, நீடடியிருக்கும் வலதுகால்பாதத்தை இரண்டு அல்லது மூன்று நொடிகளும் பார்த்துவிட்டுக் குப்புறப்படுத்து இளைப்பாற வேண்டும். பின்னர் மீண்டும் எழுந்து இம்மாதிரியே செய்யவேண்டும். இவ்வாறு மூன்றுமுறை சர்ப்பாசனத்தில் கண்டக்கிரியா செய்தால் போதும்.

கண்டக்கிரியா செய்யும்போது இடதுபக்கம் ஒருமுறையும் வலதுபக்கம் ஒருமுறையும் தருpம்பிப் பார்ப்பதற்குப் பதிலாக இடது - வலது, மீண்டும் இடது – வலது என்று இரண்டு சுற்றுக்கள்கூட ஒரு முறை சர்ப்பாசனத்தில் இப்பயிற்சியைச் செய்யலாம். பின்னர் மீண்டும் ஒருமுறை சர்ப்பாசனத்தில் இவ்வாறே கண்டக்கிரியா செய்யலாம். ஒருவாரம் அல்லது பத்து நாட்களில் கழுத்துவலி முற்றும் குணமாகிவிடும். கழுத்துப்பட்டை போடவேண்டிய அவசியம் இருக்காது.

சர்ப்பாசனத்தின் பயன்கள்:-
இப்பயிற்சியால் நுரையீரல் வளம்பெறுகிறது. இதயம் வலிமைப்பட்டு இதயத்துடிப்பு சமப்படுத்தப்; படுகிறது. இதயபலவீனத்தைப் போக்குகிறது. இதயத்தின் வால்வுகளுக்கு நல்ல பயிற்சி கிட்டுகிறது.
இதயத்தைச் சுற்றியுள்ள எண்டோகார்டியம், எபிகார்டியம், மயோகார்டியம், பெரிகார்டியம் என்னும் நான்கு உறைகளும் வலிமை பெறுகின்றன. இதனால் இதயப்பிணிகள் எளிதாக அகலுகின்றன.
இடை, பிங்கலை நரம்புகளின் இயக்கம் செம்மைப்படுகிறது. இடை, பிங்கலை நரம்புகள் முதுகெலும்பிலே சந்திக்கின்ற முதலாவது சந்திப்பு இடுப்புப் பகுதியில் தான் இருக்கின்றது. இந்த முதலாவது சந்திப்பை யோகநூல் மூலாதாரம் என்றும், உடற்கூறறு விஞ்ஞானிகள் இதனை பெல்விக் பிளக்ஸஸ் (Pelvic Plexusள) என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த இடத்தில் இவ்வாசனத்தின் இயக்கம் அபாரமானதாக இருக்கிறது. இதனால் இடுப்பு வலிகள் அகலுகின்றன.
பிடரி எலும்புகளுக்கு சர்ப்பாசனமும், கண்டக்கிரியாவும் அற்புதமான பயனைத் தருகின்றன. தீர்வே இல்லாத கழுத்துவலித் துன்பம் நீங்குவது மட்டுமன்றிக் கழுத்துப்பட்டை போட்டுக்கொள்ளும் அவசியமும் அகலுகின்றது. முதுகெலும்பை மிக இலகுவாக வளைத்துப் பயிற்சி கொடுப்பதில் சீரிய ஆசனம் இது. தோள் எலும்புகள்இ தோள்மூட்டுக்கள், கைஎலும்புகள் ஆகியவை பலம்பெறுகின்றன. சிறுநீரகங்கள், சிறுநீர்பை, சிறுநீர்க்குழாய் போன்ற உறுப்புக்கள் இதனால் வளம்பெறுகின்றன. பெண்களுக்குப் பிரசவத்தின் பின்னால் உண்டாகும் வயிற்றுச் சரிவைத் தடுக்கிறது. கருப்பை, ஓவரி, மார்பகங்கள் ஆகிய பகுதிகளுக்கு நல்ல பயிற்சி கிட்டுகிறது. கர்ப்பிணிகள் இவ்வாசனத்தைச் செயயக்கூடாது.
சலபாசனம்:-
கால்களை நீட்டிக்கொண்டு கவிழ்ந்து படுக்கவேண்டும். நெற்றி அல்லது மோவாயைத் தரையில் பொருத்திக்கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் உடம்பை ஒட்டிப் பக்கத்தில் நீட்டிக்கொண்டு கைகளை இறுக்கமாக முஷ்டிபிடித்துக் கொள்ளவேண்டும். மூச்சை இழுத்து உள்ளே அடக்கிக்கொண்டு முஷ்டிபிடித்த கைகளைத் தேவைப்பட்டால் தரையில் ஊன்றிக்கொண்டு இரண்டு கால்களையும் நீட்டிய நிலையில் பளிச்சென்று மேலே உயர்த்தவேண்டும். இந்த நிலையில் பத்து நொடிகள் இருந்தால் போதும். கால்களைக் கீழே இறக்கி சற்று இளைப்பாறிக்கொண்டு மீண்டும் இம்மாதிரியே செய்யவேண்டும். இப்படி நான்கு முறைகள் செய்தால் போதும்.

ஆசனத்தில் கால்களை உயர்த்தி இருக்கின்றபோது கால்கள் வளையக்கூடாது. சிரமம் இல்லாதபடி கால்களை நன்கு நீட்டிய நிலையில் எவ்வளவு உயர்த்த முடியுமோ அவ்வளவு உயர்த்தினால் போதும். அதேசமயம் முடிந்தவரை கால்களையும் விறைப்பாக நீட்டவேண்டும். சிலருக்கு மூச்சை அடக்கிக்கொண்டு இவ்வாசனத்தைச் செய்வது சிரமமாக இருக்கும். அவர்கள் மூச்சை வெளியேற்றிவிட்டோ அல்லது கொஞ்சமாக மூச்சை உள்ளே அடக்கிக்கொண்டோ செய்தால் போதும். இப்படிச் செய்வதில் பிழையேது, மில்லை. ஆயினும் இவ்வாசனத்தின்போது மூச்சை உள்ளே அடக்கிய நிலைதான் சரியான மூச்சின் நிலையாகும்.
சிலருக்கு இரண்டு கால்களையும் சேர்த்து உயர்த்த முடியாமலிருக்கும். அவர்கள் மூச்சை அடக்கிக்கொண்டு, முஷ்டிபிடித்த கைகளைத் தொடைகளுக்குக்; கீழே தாக்குக் கொடுத்துக்கொண்டு கால்களை உயர்த்தினால் எளிதாக ஆசனம் வந்துவிடும். ஆசனம் நன்கு கைவந்த பின்னர் கைமுஷ்டிகளைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு செய்யலாம். அல்லது எப்போதும் தொடைகளுக்குக் கீழே கைமுஷ்டியை வைத்துக்கொண்டும் செய்யலாம். பிழையில்லை.
இன்னும் சிலருக்குத் தொடைகளுக்குக் கீழே கைமுஷ்டிகளை தாக்குக் கொடுத்துக்கொண்டாலும் இரண்டு கால்களையும் மேலே உயர்த்த முடியாமலிருக்கும். இப்படிப்பட்டவர்கள் மூச்சை அடக்கியபடி ஒவ்வொரு காலாக உயர்த்திச் செய்யலாம். இதனை ஏகபாத சலபாசனம் என்று கூறுவார்கள்.
சிலநாள் பயிற்சிக்குப் பின்னர் முயற்சி செய்தால் இரண்டு கால்களையும் சேர்த்து உயர்த்த வந்துவிடும். இரண்டு கால்களையும் சேர்த்து உயர்த்துவதற்கும் ஒவ்வொரு காலாக உயர்த்திச் செய்வதற்கும் கிடைக்கின்ற பலன்களில் வித்தியாசமில்லை. ஆயினும் இரண்டு கால்களையும் சேர்த்து உயர்த்திச் செய்வது இவ்வாசனத்தின் முழுப்பயனையும் பெறுகின்ற சரியான முறையாகும்.
பயன்கள் (முதற்பயன்)
சலபாசனத்தில் நமது உடம்புக்கு மூன்று வகைகளில் அற்புதமான பயன்கள் கிட்டுகின்றன. முதலாவதாக இவ்வாசனம் உடம்பின் நரம்பு மண்டலத்தில் வலுவாக இயங்கி, ஒரே சமயத்தில் நரம்பு மண்டலம் முழுவதையும் சுறுசுறுப்படையச் செய்கிறது. இடைநரம்பு, பிங்கலைநரம்பு என்று சொல்லப்படும் இடதுகால் நரம்பையும் வலதுகால் நரம்பையும் இயக்கி இவற்றோடு தொடர்புடைய நரம்பு மண்டலத்தின் எல்லாப் பகுதிகளையும் சுறுசுறுப்பும் வலிமையும் பெறச்செய்கிறது. சலபாசனம் என்ற இந்த ஒரே ஆசனத்திலேயே நமது உடம்பில் அமைந்துள்ள சுமார் நாற்பத்தெட்டு வர்மமுடிகள் ஒரேசமயத்தில் சுறுசுறுப்பும், தூண்டுதலும் பெறுகின்றன.
வர்மப்புள்ளிகள்:-
நமது உடம்பில் 72,000 நரம்புகள் இயங்குகின்றன. இவ்வளவு நரம்புகளுக்கும் இடை, பிங்கலை, தணடுவடம் ஆகிய மூன்று நரம்புகள் ஜீவ ஆதாரமாக இருந்து நமது உடலை இயங்கச் செய்கின்றன. இந்த மூன்று நரம்புகளும் முதுகெலும்புத் தொடரில் ஆறு ஆதாரகமலங்களாக இணைந்து மூளைக்குச் செல்வதை பத்மாசனம் பற்றிய விளக்கத்தின்போது எழுதியிருந்தேன்.
இந்த ஆறு ஆதாரகமலங்கள் எனப்படும் ஆறு இணையங்களும் உடம்பெங்கும் பரவியுள்ள நரம்புத் தொகுதிகளோடு தொடர்பு கொண்டவையாகும். இப்படி உடம்பு முழுவதும் பரவி அமைந்துள்ள நரம்புத் தொகுதிகள் மொத்தம் 96 என்று யோகசாஸ்திரம் கூறுகிறது. இந்த 96 நரம்புத் தொகுதிகளையே நாம் 96 வர்மமுடிகள் என்று கூறுகின்றோம். அந்த வகையில் சலபாசனம் நமது உடம்பிலுள்ள நாற்பத்தெட்டு வர்மமுடிகளை ஒரேசமயத்தில் இயக்குகிறது. இதனால் உடம்பு அற்புதமாகச் சுறுசுறுப்படைகிறது. சோம்பல் அடியோடு அகலுகிறது.