Friday 22 May 2015


சர்க்கரை நோய் தீர்க்கும்
சரியான ஆசனங்கள்.!!!!
தம்மை நாடி வருவோருக்கு எவ்வித மருந்து முறையும் இல்லாமல் எல்லா வகையான நோய்களையும் யோகாசனங்கள் மூலமாகவே குணப்படுத்தியுள்ள ஸ்ரீ ஞானஜோதி சம்பங்கி அவர்களின் ”சர்க்கரை நோய் தீர்க்கும் சரியான ஆசனங்கள்” என்ற படைப்பிலிருந்து முக்கியமானவற்றைத் தொகுத்து எமது வாசகர்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
பஞ்ச பூதங்களின் விகிதாசாரம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், மனித உடல்நலம் இரண்டே வழிகளில் கெடுகிறது. ஒன்று வெளிப்புறத்தில் இருந்து வந்து நம்மைத் தாக்கும் கிருமிகளால் உடல்நலம் கெடுகிறது. இரண்டாவது நமது உடம்புக்குள்ளே அமைந்திருக்கும் ஜீவாதாரமான சுரப்பிகள் தமது பணியிலிருந்து குன்றுவதால் உடல்நலம் கெடுகிறது. இந்த இரண்டு காரணங்களும் நம் எல்லோருக்கும் மிக நன்றாகத் தெரிந்த காரணங்களாகும்.
இந்த இரண்டு காரணங்களில் முதல் காரணமான வெளிப்புறக் கிருமிகள் நீர், காற்று, உணவு வழியாக நமது உடம்புக்குள்ளே புகுந்துவிடுமானால் அவற்றை எதிர்த்துத் தாக்கி அழிக்க நமது உடம்பிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தியும், வெள்ளணுக்களும் வலிமையுள்ளனவாக இருக்க வேண்டும். அப்படி இல்லாதபோது கிருமிகள் நம்மை நோய்வாய்ப்படச்செய்து வீழ்த்தி விடுகின்றன.
இதற்கான சில எளிய யோகாசனங்களை தினசரி பழகிவருவதன் மூலம் நாம் நமது இரத்தத்தை இயற்கையான முறையில் தூய்மைப்படுத்திக் கொள்ளலாம். உடம்பின் எல்லாப் பாகங்களுக்கும் சமசீராக இரத்தஓட்டம் செல்லுமாறு செய்து, போதிய பிராணவாயுவைப் பெற்றுக் கொண்டு நலம்பெறவும் முடியும். தூய இரத்தமும், உடம்பின் எல்லாப் பாகங்களுக்கும் குறைவில்லாமல் செலுத்தப்படும் இரத்தஓட்டமும், போதியளவு பிராணவாயுவும் மானிட நலனுக்குப் பிரதானமானவை என்பது நாமெல்லாம் அறிந்த உண்மை. இவை மூன்றும் யோகப் பயிற்சியால் நமக்குக் கிட்டுகின்றன. நமது உடம்பிலுள்ள பஞ்சபூதங்களின் சமநிலை காக்கப்படுவதோடு, நமது உடம்பின் உள்ளுறுப்புக்கள் அனைத்தும் நல்ல பயிற்சி கிட்டி அவை சீராகவும் நிலை மாறாமலும் தமது பணியைச்செய்ய யோகாசனங்கள் துணைபுரிகின்றன. ஆகவே யோகப்பயிற்சி செய்யும் ஒருவருக்கு உடல்நலம் கெடுவதற்கான வாய்ப்பு இல்லை. ஏதேனும் கோளாறுகள் இருந்தாலும் அவை யோகப்பயிற்சியால் மிகத் துரிதமாக அகன்று ப+ரணநலம் கிட்டுகிறது.
யோகாசனங்கள் பற்றிய தவறான கருத்து:-
யோகாசனங்கள் என்றால் அவை பழகுவதற்கு மிக்க சிரமமானவை. எல்லோராலும் அவற்றைச் செய்ய முடியாது. அதற்கான தனி உடல்வாகு வேண்டும். அவர் இப்படித்தான் யோகாசனம் பழகி துன்பத்துக்கு ஆளானார்இ யோகாசனங்களை இல்லறத்தில் இருப்பவர்கள் செய்யக்கூடாது, தாம்பத்திய சுகம் கெட்டுப்போகும், வாழ்க்கையில் பற்றற்ற விரக்திநிலை உண்டாகிவிடும் என்றும் சிலர் புழுகுவார்கள். இன்னும் சிலர் ஆசனப்பயிற்சிகளைப் பற்றி ரொம்பத் தெரிந்தது போல், யோகாசனங்களைப் பொழுது விடிவதற்குள் செய்துவிட வேண்டும், அதற்கென்று தனியான உணவு முறைகளைப் பழகிக்கொள்ள வேண்டும்இ அசைவ உணவு அடியோடு ஆகாது, கணவன் மனைவி உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது, அப்படியே இருந்தாலும் உடலுறவு நாட்களில் ஆசனப்பயிற்சிகளைத் தவிர்த்துவிட வேண்டும், மொத்தத்தில் இல்லறத்தில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் ஒத்துவராது, இவற்றையெல்லாம் சன்னியாசிகள் தான் செய்யவேண்டும் என்றெல்லாம் கதைவிடுவார்கள். இவையனைத்தும் பொய்களே. அனுபவமின்மையாலும், அறியாமையாலும் சொல்லப்படும் கதைகளேயாகும்.
யோகாசனங்களைக் காலை, மாலை இரண்டு வேளையும் செய்யலாம். வயிறு காலியாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். ஏந்த உணவும் சாப்பிடலாம். தாம்பத்திய உறவுக்கும் இதற்கும் எந்தவித சம்மந்தமும் கிடையாது. தாம்பத்தியக் குறைபாடுகள் இருந்தாலும் அவை யோகப்பயிற்சிகளால் தீர்ந்து நல்ல மனநிறைவு உண்டாகும். ஆகவே பொய்யான வதந்திகளுக்கு இடம்தராமல் நீங்கள் யோகப்பயிற்சிகளைத் தொடங்கலாம். அனுபவத்தில் அந்த அற்புத நலத்தைத் தெரிந்து கொள்வீர்கள்.
யோகாசனங்கள் என்ன செய்கின்றன:
யோகாசனங்கள் பழகுவதற்கு மிகவும் எளிமையானவை. ஆண், பெண் பேதமில்லாமல் இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் ஆசனங்களை எவரும் பயிலலாம். ஒரு குழந்தையைத் தட்டிக் கொடுப்பதுபோல இவை மனித உள்ளுறுப்புக்களிலும் வெளிஉறுப்புக்களிலும் இயங்கி நமது நலத்தை காக்கக்கூடியவை. யோகாசனங்கள் உடம்பின் எல்லாப் பாகங்களுக்கும் வேண்டிய இரத்த ஓட்டத்தையும் பிராணவாயவையும் எடுத்துச் செல்ல உதவுகின்றன. நமது உடம்புக்குள்ளே அமைந்துள்ள ஜீவாதாரமான சுரப்பிகள் சீராக இயங்கவும், அவை நீண்டநாட்கள் ஆரோக்கியத்தோடு உழைக்கவும் ஆசனப்பயிற்சி வகைசெய்கின்றது. தேவையில்லாத ஊளைச்சதைகள் கரைந்து உடம்பு அளவான தோற்றப் பொலிவோடு விளங்கும். நீடித்த இளமையைத் தரும். இதனால் முதுமை தடுக்கப்படுகிறது. உடல்காந்தம், உடல்மின்சாரம் ஆகிய இரண்டையும் பேணிக்காப்பதோடு அவற்றை மேம்படுத்துகிறது. மூளைக்கு வேண்டியளவு இரத்த ஓட்டமும், பிராணவாயுவும் கிட்டுவதால் மனப்பதட்டம், எதிர்வினை நினைவுகள், தீயபழக்கங்கள், கோபம், பொறாமை, துர்சிந்தனை ஆகியன தொலைந்து நல்ல எண்ணங்கள், உயர்ந்த சிந்தனைகள், நல்லபண்புகள் ஆகியவற்றோடு அசைக்கமுடியாத சுயகட்டுப்பாட்டையும் தருகிறது. அமைதியும் நிம்மதியும் மனதில் நிலைத்துpருக்கச் செய்கிறது. இதற்குமேல் மனிதனுக்கு என்ன வேண்டும்?
இதற்காக நாம் தினசரி இருபது நிமிடமோ, அரைமணி நேரமோ ஒதுக்கிக் கொண்டு பயிற்சிகளை ஒழுங்காக செய்துவிட்டால் போதும். நமக்கு வேண்டிய நலத்தை அவை பார்த்துக்கொள்ளும். போகாசனங்களைக் காலை ஐந்துமணி முதல் எட்டுமணிக்குள்ளாகவும், அதேபோல் மாலை ஐந்துமணி முதல் இரவு எட்டுமணிக்குள்ளாகவும் இரண்டு வேளையும் வயிறு காலியாக இருக்கும்போது செய்யவேண்டும். இரண்டு வேளையும் செய்ய முடியாதவர்கள் ஏதேனும் ஒருவேளை செய்தாலும்போதும். இதற்காக உணவுக்கட்டுப்பாடுகளோ, தாம்பத்திய உறவுக்கட்டுப்பாடுகளோ இல்லை. அதிகளவு சர்க்கரை உள்ள சர்க்கரை நோயாளிகள் மட்டும் பயிற்சிகள் முழுவதும் கைவருகின்றவரை கொஞ்சம் உணவுக் கட்டுப்பாட்டோடு இருப்பது நல்லது. சர்க்கரை நோய்க்காக மாத்திரைகள் சாப்பிடுபவர்கள் அல்லது இன்சுலின் போட்டுக் கொள்ளுபவர்களும் கொஞ்சக்காலம் முழுப்பயிற்சி முறையையும் பின்பற்றிச் செய்கின்றவரை சிகிச்சையைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம் பிறகு மருந்து மாத்திரைகளைக் கைவிட்டுவிடலாமா அல்லது அவற்றைக் குறைத்துக் கொள்ளலாமா என்பதை சிறுநீரிலோ இரத்தத்திலோ சர்க்கரையின் அளவு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைச் சோதித்து அறிந்த கொள்ளலாம். ஆகையால் பயிற்சியாளருக்கு இதைப்பற்றிய துன்பம் இல்லை.
குளித்துவிட்டுத்தான் ஆசனங்கள் செய்யவேண்டும் என்பதில்லை. வசதிப்படி செய்யலாம். குளித்தபின்பு ஆசனங்கள் செய்வதானால் பத்தநிமிடமும், ஆசனங்கள் செய்தபின்னர் குளிக்க நேருமானால் இருபது நிமிடமும் இடைவெளி தரவும். யோகாசனங்களைச் செய்துமுடித்த உடனே அப்படியே போய்ச் சு+டாகவோ குளிர்ச்சியாகவோ சாப்பிட வேண்டாம். ஆசனப்பயிற்சிகளை முடித்துக் கொண்டு ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் இடைவெளி கொடுத்து அதன்பின்னர் தண்ணீரோ, காப்பி, தேநீர் போன்ற திரவ உணவுகளோ அல்லது சாப்பாடோ சாப்பிடலாம். பெண்கள் மாதவிலக்கின்போதும் கருவுற்றுள்ளபோதும் ஆசனங்கள் செய்யக்கூடாது. நீங்கள் கவனிக்க வேண்டிய விதிமுறைகள் இவ்வளவுதான். இனி ஆசனப்பயிற்சிகளைத் தொடங்கலாம். உங்களுக்கு மங்களம் உண்டாக வாழ்த்துக்கள்.
சர்க்கரைநோய் தீர்க்கும் சரியான
ஆசனங்கள் (பாகம் 2)

பத்மாசனம்:
அனைத்து ஆசனங்களுக்கும் அரியாசனம். எண்பத்து நாலாயிரம் ஆசனங்களின் தலையாசனம். தவத்துக்கோர் தனியாசனம். ஆன்மாவை ஈடேற்றவந்த அமராசனம். கர்மவினைகளைப் போக்கும் கமலாசனம். இதனைப் பத்மாசனம், பதுமாசனம், பங்கயவாசனம், பங்கஜவாசனம், தாமரையாசனம் என்றெல்லாம் யோகிகள் சிறப்பித்துச் சொல்லுவார்கள்.
அதுமட்டுமன்றி மனிதனை மானிடத் தன்மைகளோடு வாழ்வித்து, மானுடத் தன்மைகளிலிருந்தும் மேம்படுத்தி அவனைத் தேவனாக்கி வைக்கின்ற தேவாசனம் என்றும் இதன் புகழை ஞானிகள் போற்றுவார்கள்.
பத்மாசனம் செய்யும்முறை:-
தரையில் ஒரு நல்ல போர்வையை மடித்துப் போடவேண்டும். அல்லது ஒரு பாயைப் போட்டுக்கொண்டு அதன்மேல் போர்வையை உறுத்தாமல் மெத்தென்று இருக்கம்படியாகப் போட்டுக் கொள்ளலாம். போர்வையில் படிய அமர்ந்து கொண்டு வலது பாதம் இடது தொடையின்மேலும், இடதுபாதம் வலது தொடையின்மேலும் பொருந்தும்படியாக அமைத்துக் கொள்ளவேண்டும். பாதங்கள் மலர்ந்து தாமரை மலர்போலத் தோற்றம் தருவதால், இதனைப் பத்மாசனம், கமலாசனம், தாமரை ஆசனம் என்று அழைப்பார்கள். அமரும்போது எத்திசையை நோக்கி வேண்டுமானாலும் அமரலாம். ஆனாலும் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்வது உத்தமம். வளையாமல் நிமிர்ந்து அமரவேண்டும். அதேசமயம் உடம்புக்குத் தேவையற்ற விறைப்பைத் தரவேண்டாம்.
சின்முத்திரை:-
பத்மாசனத்தில் அமர்ந்து கையின் கட்டைவிரலின் முதல் அங்குலாஸ்தியை ஆள்காட்டி விரலின் நுனி தொடுமாறு அமைத்துக் கொள்வதை சின்முத்திரை என்று சொல்லுவார்கள். இவ்வாறு இரண்டு கைகளையும் சின்முத்திரையிட்டு முழங்கால் முட்டிகளின்மேல் கைகளை நீட்டிப் பொருத்திக் கொள்ள வேண்டும். நமது கையினுடைய கட்டை விரலில் அமைந்துள்ள நரம்புத் தொகுதிக்கும், மூளைக்கும் தொடர்பு இருக்கின்றது. சிந்தனையின் சலனங்களைக் கட்டுப்படுத்துவதால் இதற்குச் சின்முத்திரை என்று பெயரிட்டார்கள்.
பிரார்த்தனை:-
இப்படிப் பத்மாசனத்தில் கைகளைச் சின்முத்திரையிட்டு அமர்ந்து கொண்டு, கண்களை மூடி யோகாசனங்களை நமக்குக் கற்றுக் கொடுத்த குருவை தியானித்து நமஸ்கரிக்க வேண்டும். பொதுவாக யோகாசனங்களைப் பயிலுகின்றபோது அனுசரிக்கப்படும் பொதுவிதி இது. இதற்காக அதிகபட்சமாக ஒரு நிமிடநேரம் போதுமானதாகும். தெய்வநம்பிக்கை உடையவர்கள் தங்கள் இஷ்டதெய்வத்தை வணங்கிக் கொள்ளலாம். ஆக, யோகாசனங்களைப் பயிலத் தொடங்குவதற்கு முன்னால் முதலாவது ஆசனமாகப் பத்மாசனம் போட்டு, குருவணக்கமோ, கடவுள் வணக்கமோ முடித்துக் கொள்ள வேண்டும்.
சில மாற்றங்கள்
சிலருக்கு பத்மாசனம் போட்ட உடனேயே ஒரு சுகமான பரவசம் வந்துவிடும். இவர்கள் ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ இப்படியே பத்மாசனத்தில் இருந்தபடி கடவுளைத் தியானத்தால் சுகமாக இருக்கும்போல் தெரிகிறதே, இன்னும் சிறிது நேரம் இதில் நீடித்து இருந்தாலென்ன என்று எண்ணுவார்கள். இப்படி நினைப்பவர்கள் ஆசனப்பயிற்சி முழுவதையும் முடித்துக்கொண்டு கடைசியாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், கால வரையறையின்றி பத்மாசனத்தில் அமர்ந்தபடி தியானம் செய்துகொண்டு இருக்கலாம். கால்கள் வலிப்பெடுக்க ஆரம்பிக்கின்றபொழுது பிரித்துக்கொள்ளலாம்.
இங்கே முதல் ஆசனமாகப் பத்மாசனத்தை விளக்கியிருக்கின்றேன். இதைப் பின்பற்றி ஆசனங்கள் செய்யத் தொடங்குபவர்களுக்குக் கற்பிக்கப்படும் முதல் ஆசனம் இதுதான். ஆகவே ஒரு நிமிடம் முதல் அரைமணிநேரம் வரையில்கூடப் பத்மாசனத்தில் இருந்து பழகலாம் என்றாலும் ஆசனப்பயிற்சிகளின் தொடக்கத்தில் பத்மாசனமிட்டு ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்தால் போதும். அதற்காக முரட்டுத்தனமாகக் கால்கள் வலிக்க வலிக்க வலியைப் பொறுத்துக்கொண்டு பத்மாசனம் பயிலக்கூடாது. பத்மாசனம் மடடுமல்ல எந்த ஒரு யோகாசனத்தையும் கடினமாக உடலை வருத்திக்கொண்டு பயிலக்கூடாது. ஆகவே பத்மாசனம் போட்டுக் கொஞ்சநேரத்திலோ, அதிக நேரத்திலோ கால்கள் வலிக்கும்போது பிரித்துவிட வேண்டும்-
சிலருக்கு முதலில் வலது காலைத்தூக்கி இடது தொடைமேல் அமைத்துக்கொண்டு அதன் பின்னர் இடது காலைத்தூக்கி வலது தொடைமேல் பொருத்தமுடியாது சிரமப்படுவார்கள். அவர்கள் முதலில் இடது பாதத்தைத் தூக்கி வலது தொடைமேல் பொருத்திக் கொண்டு அதன்பின்னர் வலது பாதத்தைத் தூக்கி இடது தொடையின்மேல் பொருத்திக் கொள்ளலாம். இதில் பிழையேதுமில்லை. இருப்பினும் முதலில் வலது பாதத்தை எடுத்துச் செய்வது சுபமானது.
இன்னும் சிலர் ஒரு பாதத்தைத் தூக்கிப் பொருத்தி விடுவார்கள். மற்றப் பாதத்தைத் தூக்கிப் பொருத்த முடியாமல் போய்விடும். பொருத்த முயன்றால் முதலில் போட்ட கால் விசுக்கென்று கீழேநழுவி இறங்கிவிடும். எவ்வளவு முயன்றாலும் வராது. அப்படிப் பட்டவர்கள் ஒரு காலைமட்டும் தூக்கிப் போட்டுக்கொண்டு வணக்கத்தைத் தொடங்கலாம். பின்னர் படிப்படியாக மற்றக் காலையும் தூக்கி அமைத்துக்கொண்டு பழகிக்கொள்ளலாம். சிலநாட்கள் பயிற்சிக்குப் பின்னர் இரண்டு கால்களும் சரியான இணக்கத்துக்கு வந்து பத்மாசனம் சரியாக அமைந்துவிடும். இப்படி ஒருகாலை மட்டும் போட்டுச் செய்வதால் அதற்கு அர்தத பத்மாசனம் என்று பெயர்.
இவ்வாசனத்தை ஆண், பெண் இருபாலரும் வயது பேதமில்லாமல் செய்யலாம். கருவுற்ற தாய்மார்கள்கூட இப்படிப் பத்மாசனத்திலோ அல்லது அர்த்த பத்மாசனத்திலோ இருந்து பழகுவதும்இ தியானம் செய்வதும் மிகவும் நல்லது.
பயன்கள்:-
பத்மாசனத்தில் இருக்கின்றபோது மனிதநரம்பு மண்டலம் முழுவதும் சுறுசுறுப்படைந்து புத்துணர்ச்சியைப் பெறுகிறது. நமது உட்சுவாசமும் வெளிச்சுவாசமும் ஒழுங்குபட்டு நடப்பதால் சுவாசம் சீரான இயக்கத்துக்கு வருகிறது. நுரையீரல்களுக்குச் செல்லும் காற்றிலுள்ள பிராணவாயு இரத்தத்தோடு பூரணமாக் கலக்கிறது. கரியமிலவாயு செம்மையாக வெளியேறுகிறது. இவ்வாறு சுவாசமும் இரத்த ஓட்டமும் சீரானகதிக்கு வருவதால் இரத்த அழுத்தமும் இயல்புநிலைக்கு வருகிறது. மன அமைதியின்மையும் மனச்சஞ்சலங்களும் மறைகின்றன. மனத்தின் இறுக்கநிலை தளர்ந்து மனம் அமைதியைப் பெறுகி;றது. மனோபலம் வருகிறது. முதுகெலும்பு, இடுப்பு எலும்புகள், கால் எலும்புகள் ஆகியன வலிமை பெறுகின்றன. கூனல் விழுவது தடுக்கப்படுகிறது.
மானிடநரம்பு மண்டலமும் பத்மாசனமும்:-
பண்டைக்காலத்தில் ஞானிகள் மனித உடம்பின் இயக்கங்களை மிகத் துல்லியமாக அறிந்திருந்ததைப் போன்று தற்காலத்து அறிஞர்கள் மனித உடம்பின் இயக்கங்களை அறியமுடியவில்லை. அல்லது அறிந்து முடிக்கவில்லை. மானுட தேகம் ஒரு அதிஅற்புதமான இயந்திரமாகும். மனித உடம்பில் 72,000 நரம்புகள் பின்னிப் பிணைந்துள்ளன. இத்தனை நரம்புகளுக்கும் ஜீவ ஆதாரமாக இடை, பிங்கலை, சுஷூம்ணா (தண்டுவடம்) ஆகிய மூன்று நரம்பு இயக்கங்களும் இயங்கி மனிதனைச் செயல்பட வைத்துக் கொண்டுள்ளன. மனித முதுகெலும்பும் பல எலுமபுகளால் அமைந்த ஒரு எலும்புத்தொடராகும். இதன் இடையேயுள்ள துளை வழியேதான் தண்டுவடம் மூளைக்குச் செல்கிறது. இதனை சுஷூம்ணாநாடி என்று யோகிகள் குறிப்பிடுகிறார்கள். இந்தத் தண்டுவடம்தான் நமது உடம்பைப்பற்றிய எல்லாச் செய்திகளையும் மூளைக்கு அறிவிக்கிறது. மனித உடம்பில் வலதுகால் பெருவிரலில் இருந்து ஒரு நரம்பு ஆரம்பித்து, முழங்கால் தொடை வழியே சென்று தண்டுவடத்தைச் சுற்றியபடியே மேலேறிப் பின்பக்கமூளையில் இணைகிறது. இந்த நரம்பை யோகிகள் பிங்கலை நரம்பு (Right Nerve) என்று குறிப்பிடுகிறார்கள். இதைப்போலவே இடதுகால் பெருவிரலில் இருந்து தொடங்கி ஒரு நரம்பு முழங்கால், தொடை வழியே சென்று தண்டுவடத்தைச் சுற்றியபடியே மேலேறிப் பின்பக்க மூளையில் இணைகிறது. இந்த நரம்பை இடைநரம்பு (Left Nerve) என்று யோகிகள் குறிப்பிடுவார்கள்.
ஆறுவகை இணையங்கள: (six plexus)
இந்த இடைநரம்பும், பிங்கலை நரம்பும் கடைசி முதுகெலும்பு (இடுப்புப்பகுதி), அடிவயிறு, தொப்புள், இதயம், தொண்டை, புருவமத்தி ஆகிய ஆறு இடங்களுக்கு நேர்பின்பக்கமாக முதுகெலும்பிலுள்ள தண்டுவடத்தோடு ஆறு இடங்களில் எதிர்எதிராகச் சந்தித்துக் கொள்கின்றன. இந்தச் சந்திப்புக்களை ஆறு ஆதாரகமலங்கள் என்று யோகிகள் குறிப்பிடுகிறார்கள். அவை
1. மூலாதாரம் - Pelvic Plexus
2. சுவாதிஷ்டானம் -- Hypogastric Plexus
3. மணிப்பூரகம் - Solar Plexus
4. அநாதகம் - Cardiac Plexus
5. விசுக்தம் - Pharyngeal Plexus
6. ஆக்ஞை – Commanding Plexus
ஆகும். இவைகளை யேயோகிகள் ஆதாரகமலங்கள் என்றும், உடற்கூற்று விஞஞானிகள் (Plexus) என்றும் குறிப்பிடுகிறார்கள். உடம்பில் இவற்றின் இயக்கங்களை ஜீவனாடிகள் என்று சொல்லலலாம். இவைகளின் இயக்கத்தை முறையே கணுக்கால்கள் அல்லது பாதங்கள், பிறப்புறுப்புக்கும் தொடைக்கும் இடையேயுள்ள மடிப்புக்கள், தொப்புள், இதயம், தொண்டை, கன்னப்பொட்டுக்கள் இவற்றில் விரல்களைப் படியவைத்துப் பார்த்தால் இங்கெல்லாம் நாடிகள் துடிப்பதை எவரும் உணரலாம்.
பெரும்பாலும் இடை, பிங்கலை நரம்புகள் ஆதாரகமலங்களில் இணைகின்ற இணைப்புக்களில் பலவீனம் நேர்வதால்தான் முதுகுவலி, இடுப்புவலி, கழுத்துப்பிடரி வலி, நரம்புத்தளர்ச்சி ஆகிய தொல்லைகள் ஏற்படுகின்றன. இதுமட்டுமன்றி புருவமத்தியில் (Commanding Plexus) நேருகின்ற கோளாறும் உண்டு. இதனால் பக்கவாதம், மாறுகால் மாறுகைவாதம், முகவாதம் ஆகிய வாதநோய்கள் தோன்றுகின்றன.
ஆறுவகை இணையத்தில் ஆடுகின்ற நாடிகள்.

1. ஆக்ஞை
2. விசுத்தம்
3. அநாதகம்
4. மணிப்பூரகம்
5. சுவாதிஷ்டானம்
6. மூலாதாரம்
7. முதுகெலும்புத்தொடர்
8. தண்டுவடம்
9. குண்டலினிசக்தி
10. இடைநரம்பு
11. பிங்கலைநரம்பு
பத்மாசனம் இந்தத் தொல்லைகளுக்கெல்லாம் ஒரு நல்ல தடுப்பானாகப் பயன்படுகிறது. புத்மாசனப் படத்தைப் பாருங்கள். வலதுகாலும், இடதுகாலும் எதிர் எதிராக அமையக் கால்களில் நாம் இன்னொரு புதிய இணையத்தை (Plexus) உருவாக்கி விடுகிறோம். இதனால் முதுகெலும்பிலுள்ள ஆறு ஆதாரஸ்தானங்களும் பரவசமும், சுறுசுறுப்பும் எய்தி நமது உடம்பின் நரம்பு மண்டலத்தை வலிமை பெறச்செய்கின்றன

No comments:

Post a Comment