Thursday 29 September 2016

1-முதன்முதலில் உருவாக்கப்பட்ட கேமிராவில் போட்டோ எடுக்க எட்டுமணி நேரம் உட்கார்ந்தே இருக்கணுமாம்.
(அம்மாடியோவ்)
2-வெங்காயம் நறுக்கும் போது சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது.
(Try பண்ணிப் பாருங்களேன்)
3-உங்களுடைய உதட்டின் நீளமும் ஆள்காட்டி விரலின் நீளமும் கிட்டதட்ட ஒரே அளவு தான்.
(அளந்து பாருங்கள்)
4-ட்விட்டர் லோகோவில் இருக்கும் பறவையின் பெயர். #லேரி!!
ட்விட்டரின் டிபால்ட் புரோபைல் பிக்சராக முட்டை இருக்கக் காரணம் நாமெல்லாம் ட்விட்டர் பறவையின் குஞ்சுகளாம்.
நம்ம ஹோம் பேஜ் ஒரு குருவிக்கூடு.!!!
( Check பண்ணி பாருங்க)
5-அமெரிக்காவில் வெளியாகும் கோகோ கோலாவின் சுவையும் சர்வதேச சந்தையில் வெளியாகும் கோகோ கோலாவின் சுவையும் வேறு..வேறு..!!!
(Taste பண்ணியிருக்கீங்களோ?)
6- பின்லாந்தில் நம்ம ஊரில் இருப்பது போல் மலிவு விலை இட்லிகடைகள் இல்லை.மாறாக
மலிவு விலை காலேஜ்கள் உண்டு.
கல்விகளுக்கான கல்விக் கட்டணம் முற்றிலும் இலவசம்.
(அங்கேயே போய் படிக்கலாம்)
7-அடிக்கடி லைப்ரரி புத்தகங்கள் திருடு போவது வழக்கமான ஒன்று தான்.
அப்படி திருடு போன புத்தகங்களில் அதிகமாக திருடப்பட்டு கின்னஸ் சாதனை புரிந்த புத்தகம்..
கின்னஸ் புத்தகம் தானாம்.
( அடப் பாவமே)
8- ஆண்களுக்கான சட்டையை கண்டுபிடித்த நாடு எகிப்து.
(அட...!!)
9-நோக்கியா கம்பெனி ஆரம்பகாலத்தில்.. 1865- ல் மரவேலை செய்யும் நிறுவனமாக செயல்பட்டது.
(மாத்தி யோசிச்சிருக்காங்க)
10-நத்தை அதனi் கண்ணை இழந்து விட்டால் கொஞ்ச நாளில் புது கண் உருவாகிவிடும்.
( அற்புதம்)

No comments:

Post a Comment