Tuesday 29 May 2012


முக்கியத்துவம்!

ஒரு கிளாஸ்ல ஒரு புரொபசர் மாணவர்கள் முன்னாடி ஒரு பெரிய ஜாரை வைத்தார். “இது காலியா இருக்கானு கேட்டார்.” “ஆமா”ன்னு மாணவர்கள் சொன்னாங்க.

முதல்ல பெரிய கற்களா அதில் போட்டார். இப்ப கேட்டார் “ஜார் நிரம்பிடுச்சா?” மாணவர்கள் “ஆமா”னு சொன்னாங்க.

புரொஃபசர் புன்னகைச்சுட்டு ஜாரில் கொஞ்சம் கூழாங்கற்களை போட்டார்.. அந்த கற்களுக்கு இடையில் இருந்த இடைவெளியில் கூழாங்கல் எல்லாம் போனது. இப்ப கேட்டார் “ஜார் நிரம்பிடுச்சா?” மாணவர்கள் “ஆமா”னு சொன்னாங்க.

புரொபசர் இப்ப மணலை ஜாரில் கொட்டினார். கற்களுக்கு இடையில் இருந்த இடைவெளியில் மணல் போனது. இப்ப கேட்டார் “ஜார் நிரம்பிடுச்சா?” மாணவர்கள் “ஆமா”னு சொன்னாங்க.

புரொஃபசர் பேச ஆரம்பிச்சார் “இந்த ஜார் நம்ம வாழ்க்கையை குறிக்குது. இந்த பெரிய கற்கள்தான் நம்ம வாழ்க்கையின் முக்கியமான விசயங்கள் - குடும்பம், நண்பர்கள், வேலை, உடல்நலம் போன்றவை. கூழாங்கற்கள் நம்ம வேலை நம்ம வாகனம் நம்ம வீடு போன்றவை. மணல் நம்மளோட மற்ற சின்ன சின்ன விருப்பங்களை குறிக்குது”

“நாம முதலியேயே மணலை கொட்டிட்டா அப்புறம் கற்களுக்கும் கூழாங்கற்களும் இடமே இருக்காது. ஆனா வாழ்க்கையில் நாம பல பேர் சின்ன விசயங்களுக்குதான் முக்கியத்துவம் தரோம் பெரிய விசயங்களை சரியா கவனிக்கிறதில்ல...”

“நாம எப்பவுமே நம்மளோட சந்தோசத்துக்கு அவசியமானவர்கள்கிட்ட கவனம் செலுத்தனும். உங்க குடும்பத்தோட நேரம் செலவிடுங்க. நண்பர்களிடம் பேசுங்க... வேலையில் உண்மையா இருங்க..”

எப்பவுமே பெரிய கற்களை முதலில் கவனிக்கனும்... எதுக்கு அதிக முக்கியத்துவம் தரணும்னு கவனமா முடிவெடுங்க.

No comments:

Post a Comment