Friday 6 June 2014


தாம்பிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது. ஏன்?

தாம்பிரம் என்னும் செம்பு, பஞ்ச பூதத்திலே ஒன்றான தீக்கூறு உலோகமாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் கண் தீக்கூறாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

தாம்பிர பாத்திரத்தில் ஊறிய நீரில் கண்கள் கழுவி வரும் பழக்கம் சங்ககால முதல் தமிழகத்தில் வழக்கில் உள்ளது. சித்த மருத்துவத்தில் கண் நோய்களுக்கு செய்யப்படும் அனைத்து மருந்து வகைகளில் செம்பு ஒரு பொருளாக சேர்க்கப்படுவதும், பழக்கிராம்பு பக்குவ எண்ணெய் போன்ற கண் மருந்துகளும்,செப்பு பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதும் உண்மை.

தாம்பிர பாத்திரத்தில் ஊறிய நீரில் கண்கள் கழுவி வரும் போது,கண் பகுதியில் கிருமிகள் அழிக்கப்பட்டு,கண்ணுக்கு பலனளிப்பதாக நவீன ஆராய்ச்சிகள் உரைக்கின்றன.

கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்யும் காலமிது. ஆனால், வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும் அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாதம் நூற்றுக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்! தமிழ்ச்சித்தர்கள் நமக்குத் தந்த அறிவியல், பகுத்தறிவு, மருத்துவமென பரந்து கிடக்கும் கட்டில்லா அறிவியலை மீட்டெடுத்தால் தமிழும் தமிழர்களும் உலகம் போற்றும் வண்ணம் வாழக் காலமது கனிந்து கைகூடும். சித்தரியலைப் போற்றிப் பாதுகாப்போம். நன்றி

No comments:

Post a Comment