Thursday 11 June 2015

தினமும் ஒரு கப் இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
சமையலில் உணவின் சுவையை அதிகரிக்க உதவும் ஒரு உணவுப் பொருள் தான் இஞ்சி. இத்தகைய இஞ்சியில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. அதிலும் இதனை டீ போட்டு குடிப்பது இன்னும் நல்லது. இதனால் அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருந்து, அதன் மூலம் முதுமைத் தோற்றம் தள்ளிப் போகும். அதிலும் இதனை பாலுடன் சேர்த்து குடிப்பதை விட, கொதிக்கும் நீரில் தட்டிப் போட்டு, கொதிக்க விட்டு தேன், புதினா சேர்த்து கலந்து குடித்தால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். எனவே தினமும் மறக்காமல் ஒரு கப் இஞ்சி டீ குடித்து வாருங்கள்
வயிற்று பிரச்சனைகள் :-
நீங்கும் வயிறு உப்புசமாகவும், உணவு செரிமானமாகாலும் இருந்தால், அப்போது ஒரு கப் இஞ்சி டீ குடித்தால், அதில் உள்ள மருத்துவ குணங்களால் செரிமானம் சீராக நடைபெற்று, உப்புசம், வயிற்று வலி, செரிமான பிரச்சனைகள் எல்லாம் நீங்கும்.
சுவாச பிரச்சனைகள் :-
பருவ காலம் மாறும் போது சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளாகக்கூடும். அப்போது ஒரு கப் இஞ்சி டீ குடித்து வந்தால், சுவாச குழாய்களில் ஏதேனும் கிருமிகள் இருந்தால், அவை வெளியேறி சுவாச பிரச்சனைகள் நீங்கும். அதிலும் ஆஸ்துமா உள்ளவர்கள், இஞ்சி டீ குடிப்பது நல்லது.
மூட்டு பிரச்சனைகள் :-
மூட்டு வலி மற்றும் மூட்டுகளின் உள்ளே காயங்கள் இருப்பவர்கள், இஞ்சி டீ குடித்து வந்தால் அதில் உள்ள மருத்து குணங்களால் அனைத்து மூட்டு பிரச்சனைகளும் நீங்கும்.
மாதவிடாய் பிரச்சனைகள் :-
மாதவிடாய் காலத்தில் வயிற்று வலியால் கஷ்டப்படுபவர்கள், இஞ்சி டீயை குடித்து வந்தால், வயிற்று வலி மற்றும் வயிற்று பிடிப்பு ஏற்படுவது குறையும்.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் :-
இஞ்சி டீயில் வைட்டமின் சி, மக்னீசியம், கனிமச்சத்துக்கள், அமினோ ஆசிட்டுகள் போன்றவை அதிகம் இருப்பதால், அவை இரத்தம் உறைவதைத் தடுத்து, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதய நோய்கள் வரும் வாய்ப்பைத் தடுக்கும்.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் :-
இஞ்சி டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். மேலும் இஞ்சி தமனிகளில் கொழுப்புக்கள் படிவதைத் தடுத்து, பக்கவாதம் வருவதைத் தடுக்கும்.
மன அழுத்தத்தைக் குறைக்கும் :-
மன அழுத்தத்தில் இருக்கும் போது, ஒரு கப் இஞ்சி டீ குடித்து பாருங்கள். இதனால் மன அழுத்தம் குறைந்து, உடனடி புத்துணர்ச்சி கிடைக்கும்

No comments:

Post a Comment