Saturday 16 June 2012

கோடையை குளுமையாக்க...

1/2 லிட்டர் மோருடன் கடுகு, பெருங்காய கரைசல், உப்பு, கருவேப்பிலை கரைத்து இத்துடன் வறுத்த வெந்தயப் பொடி, சிறிது எலுமிச்சை பழச் சாறு கலந்து அருந்தினால் உடல் சூடு தணியும்.

வெள்ளரிக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி உப்பு மிளகுத்தூள் சேர்த்து எலுமிச்சை பிழிந்து சாப்பிட குளிர்ச்சியைக் கொடுக்கும்.

பயத்தம் பருப்பை தால் செய்து சாப்பிட உஷ்ணம் குறையும்.

நிறைய இடங்களில் மண்பானை கிடைக்கும். அதை வாங்கி தண்ணீரில் ஊறப்போட்டு, அதில் குடிநீர் ஊற்றி குடியுங்கள். குளிர்சாதனப் பெட்டியில் வைத்து நீர் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள்.

இரவு படுக்கும் முன்பு உள்ளங்கால்களில் விளக்கெண்ணெய் தடவினால் சூடு குறையும்.

சிறிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி மோர் சாதத்துடன் கலந்து காலையில் சாப்பிடலாம்.

அதிக எண்ணெய், காரம், சூடான பானங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

குளிர்பானம், ஐஸ்கிரீம் என அதிகம் செலவு செய்யாமல் வீட்டிலேயே பானங்களை தயாரித்தால் உடலுக்கும் நல்லது.

No comments:

Post a Comment