Monday 3 September 2012

ஏகாந்தமான நேரத்திலே ஈரா முகிலுக்காய்
காத்திருக்கும் மயிலை போல என் ஏக்கங்கள் 
எல்லாம் சேர்த்துவைத்து காத்திருக்கிறேன் உனக்காக !!!

உன் காதலை என்னுள் மழையாக நீ தூவ
அதை நான் மட்டும் வாங்கும் நிலமாக ஆசைப்படுகிறேன் !!!!
பால் நிலவை தங்கும் மேகத்தை போல
என் பருவத்தை உன்னுள் புதைக்கவே
உயிர் உருகி பார்த்திருக்கிறேன் !!!!!

என் வதனத்தில் பூத்திருக்கும்
செண்பக பூவை போன்ற இதழில் வண்டாக மாறி
நீ தேன் அருந்தவே பூத்திருக்கிறேன் !!!!!

உன் தழுவலில் நான் சிவக்கிறேனோ
இல்லையோ ஒவ்வொரு முறையும்
உனக்காக கவிதை எழுதும் பொழுது
சிவந்து விடுகிறேன் எனை அறியாமல் !!!!!

நாணமெனும் ஆடை உடுத்தி
உன்னோடு கலந்திடவே இமை
துஞ்சாமல் காத்திருக்கிறேன் !!!!!!
வெட்கத்துடன் பூங்குழலி !

No comments:

Post a Comment