Tuesday 4 September 2012

முகவரியை தொலைத்த முகில் கூட்டதை போல 
நல்லதொரு நாளிலே ஓவியமாய் நான் நிற்க

என் கவிதை நாயகனே என் பக்கத்தில் 
ஒய்யாரமாய் நீ விற்றுருக !!!!!

பசும் மஞ்சள் பூசிய என் வதனம்
உன் பாதம் பார்த்து தளர்ந்து இருக்க

என் கார்மேகம் போன்ற கூந்தலில்
உன் அன்னை அவள் மல்லிகை பூச்சுட்ட!!!

பிறை போன்ற என் நெற்றியிலே
பெருமையோடு நீ பொட்டு வைக்க !!!

விண்மீன்கள் பூத்துவ
பனித்துளிகள் புது பாட்டு இசைக்க
பூங்காற்றும் புது தென்றலும் சேர்ந்து ராகம் இசைக்க !!!!!

மஞ்சள் வேர்தனிலே புது தாலி ஊஞ்சல் ஆடிடுமே
குங்குமமும் என் கன்னத்தில் அழகாக சிவந்திடுமே

என் வீணை போன்ற கழுத்தினிலே
நீ தாலி என்னும் நரம்பினை மீட்ட
அது நாதஸ்வரமாக ஒலிக்கிறது!!!!!

மருதாணி பூசிய பட்டு போன்ற என் பாதத்தில்
தங்க மெட்டி போட்டு என்னை நிமிர்ந்து பார்த்தவனே
மகையவள் காத்து இருந்த மணநாள் இது தான்!!!!

No comments:

Post a Comment