Tuesday 4 September 2012

தன் வாயிற்றில் தன் உ யிரை தங்கும் 
தாயை போல எனக்குள்ளேயே 
உன் காதலை சுமக்கிறேனடா !!!!
நான் குள்ளம் என்று கவலை படும்
என் அன்னைக்கு நான் எப்படி சொல்வேன் 
உன் நெஞ்சில் என் இதழ் பதியும்
உயரம் தான் நான் விரும்புவது என்று!!!!!
அன்று ஆற்றங்கரையின் ஓரத்தில்
நீ முத்தம் இட்டு எனக்கு பரிசளித்த
கொலுசும் கூட உன்னால் ஏக்கப்படு
சப்தம் எழுப்புவது இல்லையடா !!!!
என்னை கொண்டு செல்ல
வெண் புரவி தேவை இல்லையாட
உன் ஆண்மை கொண்ட கைகள் போதும்
இளவரசியாய் இங்கு இருப்பதை விட
உன் இதழ் இளவரசியாய் இருக்கத்தான்
என் மனம் ஏங்குதடா !!!!!
உனக்காக நான் அனுப்பிய கடிதம்
எல்லாம் என்னை போலவே
கண்ணீர் விட்டு கதறுதடா!!!!
காதலை தந்துவிட்டு
உறக்கத்தை கொள்ளையிட்டுப்
போய்விட்டாய் கனவுகளுக்குகூட
வழியில்லாமல் கண்ணீராகிறது என்இரவு!!!!
அந்தபுரத்தில் பூக்கள் கூட ஜீவன்
இல்லாமல் பூத்து இருக்கிறது

No comments:

Post a Comment