Wednesday 20 February 2013


ஐந்து முக ருத்ராட்சம் :
--------------------------------
                     ஐந்து முக ருத்ராட்சம் பஞ்சமுகனான சிவபெருமான் அம்சமான காலாக்னி ருத்ரர் அருள் நிறைந்தது. இதை ருத்ர காலாக்னி என்றும் அழைப்பர்.இதை அணிபவர்கள் சகல தேவர்களாலும் வணங்கபடுகிறார்கள் என்று பத்மபுராணம் தெரிவிக்கிறது.
 
                    ஐந்து முக ருத்ராட்சம் குரு ஆதிக்கம் பெற்றது .
 
                    அகோரம்,தத்புருஷம் ,வாமதேவம்,சத்யோஜாதம்,ஈசானம் என்னும் சிவனின் ஐந்து முகங்களும் இதன் அதி தேவதையாகும்.
 
                    உணவிலும்,பாலுறவிலும் செய்த பாவங்கள் அனைத்தும் ஐந்து முக ருத்ராட்சத்தை அணிவதால் விலகும் என்று ஸ்ரீமத் தேவிபாகவதம் கூறுகிறது.
 
                   ஐந்து முக ருத்ராட்சம் அணிபவர்க்கு விபத்துக்களால் அகால மரணம் உண்டாகாது.
 
                   இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்றே இறைவன் ஐந்து முக மணிகளை ஏராளமாக படைத்துள்ளான் .மலிவான விலையில் இம்மணிகள் கிடைக்கும்.அனைத்து முக ருத்ராட்சங்களின் எண்ணிக்கையில் 70 சதவீதம் ஐந்து முக ருத்ராட்சங்களே காணக் கிடைக்கின்றன.
 
                   சிவபெருமானின் ஐந்து அம்சங்களான அகோரம்,தத்புருஷம் ,வாமதேவம்,சத்யோஜாதம்,ஈசானம்  என்ற பண்ட்ச அம்சங்களும் நிறைந்தது இம்மணியாகும் .
 
 
யார் அணியலாம்:
 
                 புகழையும் ,மன அமைதியையும் விரும்புபவர்கள் ஐந்து முக ருத்ராட்சத்தை அணியலாம்.
யோகம்,தியானம் செய்பவர்களுக்கு இது பெருமளவில் கைகொடுக்கும்.
 
                27+1,54+1,108+1 மணிகளாகக் கோர்த்து ஜப மாலைகளுக்கும் ,உடலில் அணிந்து கொள்ளவும் பயன்படுத்தலாம். குறைந்தது மூன்று மணிகள் ஒற்றைப் படையாக இருக்கும்படி அணியலாம்.அதிகபட்சம்
எத்தனை மணிகள் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம்.பூஜை அறையில் வைத்து பூஜிக்கலாம் . பீரோவில் பூட்டி வைக்கக்கூடாது.
 
மருத்துவப் பயன்கள்:
 
               இதன் ஆதிக்க கிரகம் வியாழன்.
 
               இது கல்லீரல் நோய் ,பிஸ்டுலா,அசிடிட்டி,மார்புக் கோளாறு , ரத்த அழுத்த நோய்,நீரிழிவு நோய்,காது சம்பந்தப்பட்ட நோய்,தொடை, சிறுநீரக நோய்கள் ,இருதயக் கோளாறு ,தொடைகளில் ஏற்படும் நோய்கள்,ஞாபகசக்தி குறைபாடுகள் , வெர்டெப்ரல்  காலுமன்  கோளாறுகள் ,இன்ப்லம்மபிளிட்டி நோய்க;லை குணமாக்குகிறது .
 
            ஒரு செம்பு பாத்திரத்தில் நீர் எடுத்து அதில் ஐந்து முக ருத்ராட்ச மணிகளை போட்டு குறைந்தது 12 மணிநேரம் ஊறவைத்து ,காலை வேறும் வயிற்றில் பருகி வந்தால் ரத்த அழுத்த நோய் ,நீரழிவு நோய் , வயிற்றுக் கோளாறுகளுக்குச் சிறந்த நிவாரணம் கிடைக்கும் .நோய் எதிர்ப்பு சக்தி வளரும் .இதை காயவைத்து மீண்டும் பயன்படுத்தலாம்.
 
ஐந்து முக ருத்ராட்சமும் ஜோதிடமும் :
 
           இது குரு (வியாழன்) ஆதிக்கம் பெற்றது .ஜாதகத்தில் குருவின் ஆதிக்க குறைவால் ஏற்படும் கொழுப்பு 
சம்மந்தப்பட்ட நோய்கள்,தொடை,காது,சிறுநீரக நோய்,நீரழிவு நோய்கள் இதை அணிவதால் குணமாகும்.
 
         மனரீதியாக மன அமைதி ,வறுமை துன்பம்,பிற மனிதர்களோடு இணைந்து வாழ இயலாமை போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
 
 ஐந்து முக ருத்ராட்ச மந்திரம் :
 
         ஓம் ஹ்ரீம் நமஹ:

நன்றி: ருத்திராட்சம் நூல் ஆசிரியர் கீர்த்தி
ஐந்து முக ருத்ராட்சம் :
--------------------------------
ஐந்து முக ருத்ராட்சம் பஞ்சமுகனான சிவபெருமான் அம்சமான காலாக்னி ருத்ரர் அருள் நிறைந்தது. இதை ருத்ர காலாக்னி என்றும் அழைப்பர்.இதை அணிபவர்கள் சகல தேவர்களாலும் வணங்கபடுகிறார்கள் என்று பத்மபுராணம் தெரிவிக்கிறது.

ஐந்து முக ருத்ராட்சம் குரு ஆதிக்கம் பெற்றது .

அகோரம்,தத்புருஷம் ,வாமதேவம்,சத்யோஜாதம்,ஈசானம் என்னும் சிவனின் ஐந்து முகங்களும் இதன் அதி தேவதையாகும்.

உணவிலும்,பாலுறவிலும் செய்த பாவங்கள் அனைத்தும் ஐந்து முக ருத்ராட்சத்தை அணிவதால் விலகும் என்று ஸ்ரீமத் தேவிபாகவதம் கூறுகிறது.

ஐந்து முக ருத்ராட்சம் அணிபவர்க்கு விபத்துக்களால் அகால மரணம் உண்டாகாது.

இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்றே இறைவன் ஐந்து முக மணிகளை ஏராளமாக படைத்துள்ளான் .மலிவான விலையில் இம்மணிகள் கிடைக்கும்.அனைத்து முக ருத்ராட்சங்களின் எண்ணிக்கையில் 70 சதவீதம் ஐந்து முக ருத்ராட்சங்களே காணக் கிடைக்கின்றன.

சிவபெருமானின் ஐந்து அம்சங்களான அகோரம்,தத்புருஷம் ,வாமதேவம்,சத்யோஜாதம்,ஈசானம் என்ற பண்ட்ச அம்சங்களும் நிறைந்தது இம்மணியாகும் .


யார் அணியலாம்:

புகழையும் ,மன அமைதியையும் விரும்புபவர்கள் ஐந்து முக ருத்ராட்சத்தை அணியலாம்.
யோகம்,தியானம் செய்பவர்களுக்கு இது பெருமளவில் கைகொடுக்கும்.

27+1,54+1,108+1 மணிகளாகக் கோர்த்து ஜப மாலைகளுக்கும் ,உடலில் அணிந்து கொள்ளவும் பயன்படுத்தலாம். குறைந்தது மூன்று மணிகள் ஒற்றைப் படையாக இருக்கும்படி அணியலாம்.அதிகபட்சம்
எத்தனை மணிகள் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம்.பூஜை அறையில் வைத்து பூஜிக்கலாம் . பீரோவில் பூட்டி வைக்கக்கூடாது.

மருத்துவப் பயன்கள்:

இதன் ஆதிக்க கிரகம் வியாழன்.

இது கல்லீரல் நோய் ,பிஸ்டுலா,அசிடிட்டி,மார்புக் கோளாறு , ரத்த அழுத்த நோய்,நீரிழிவு நோய்,காது சம்பந்தப்பட்ட நோய்,தொடை, சிறுநீரக நோய்கள் ,இருதயக் கோளாறு ,தொடைகளில் ஏற்படும் நோய்கள்,ஞாபகசக்தி குறைபாடுகள் , வெர்டெப்ரல் காலுமன் கோளாறுகள் ,இன்ப்லம்மபிளிட்டி நோய்க;லை குணமாக்குகிறது .

ஒரு செம்பு பாத்திரத்தில் நீர் எடுத்து அதில் ஐந்து முக ருத்ராட்ச மணிகளை போட்டு குறைந்தது 12 மணிநேரம் ஊறவைத்து ,காலை வேறும் வயிற்றில் பருகி வந்தால் ரத்த அழுத்த நோய் ,நீரழிவு நோய் , வயிற்றுக் கோளாறுகளுக்குச் சிறந்த நிவாரணம் கிடைக்கும் .நோய் எதிர்ப்பு சக்தி வளரும் .இதை காயவைத்து மீண்டும் பயன்படுத்தலாம்.

ஐந்து முக ருத்ராட்சமும் ஜோதிடமும் :

இது குரு (வியாழன்) ஆதிக்கம் பெற்றது .ஜாதகத்தில் குருவின் ஆதிக்க குறைவால் ஏற்படும் கொழுப்பு
சம்மந்தப்பட்ட நோய்கள்,தொடை,காது,சிறுநீரக நோய்,நீரழிவு நோய்கள் இதை அணிவதால் குணமாகும்.

மனரீதியாக மன அமைதி ,வறுமை துன்பம்,பிற மனிதர்களோடு இணைந்து வாழ இயலாமை போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

ஐந்து முக ருத்ராட்ச மந்திரம் :

ஓம் ஹ்ரீம் நமஹ:

நன்றி: ருத்திராட்சம் நூல் ஆசிரியர் கீர்த்

No comments:

Post a Comment