Sunday 22 April 2012

ஒரு காட்டில் தவம் செய்த முனிவர்கள் எல்லாரும்
ஒன்று கூடினர். அவர்களுக்குள் இறைவனடியை யார்
முதலில் அடைவது என்பதைப் பற்றி வாக்குவாதம்
ஏற்பட்டது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைக் கூறி,
“அதனால் என்னால் முடியும், என்னால் முடியும்”
என்றனர். ஓர் இளம் துறவி மட்டும் அமைதியாக
அனைவரையும் பார்த்துக் கொண்டும், கேட்டுக்
கொண்டும் இருந்தார்.

எல்லாரும் அவரை நோக்கி, “”நீங்கள் மட்டும் ஏன்
ஒன்றும் பேசாமல் இருக்கிறீர்கள்? நீங்கள் மீண்டும்
பிறக்காத தன்மையை அடைய விரும்பவில்லையா?
அல்லது இன்னும் நீண்ட காலம் இவ்வுலகில் வாழ
ஆசையா?” என்று கேட்டனர்.

அதைக் கேட்ட துறவி அமைதியாக, “”நான் செத்தால்
போவேன்” என்றார். அனைவருக்கும் அதிர்ச்சியாக
இருந்தது. “எங்களைவிட வயதில் இளையவர், தவ
ஆற்றல் குறைவானவர், இவ்வளவு உறுதியாக
எப்படிக் கூற முடிந்தது?” என்று வியப்புடன் கேட்டனர்.

அதற்கு இளம் துறைவி, “”நான், எனது என்ற ஆணவம்
உடையவர்களால் ஆண்டவனை அடைய முடியாது.
என்னிடம் அது இல்லை. ஆகவே “நான்’ இறந்தால்
போக முடியும் என்று சொன்னேன்” என்றார்.

No comments:

Post a Comment