Monday 20 April 2015

கல்லை வணங்குவதால் கிடைக்கும் பயன்தான் என்ன .......??????
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பதெல்லாம் உண்மைதானா..?
A9 வீதியின் மேற்குப் பக்கத்தில் பசுமையான வயல் வெளியின் மத்தியில் வீரபாகு பிள்ளையார் கோயில் அருகில் இந்த லிங்கம் காணப்படுகின்றது.
பல்லவர் காலத்திற்கு சற்று முற்பட்ட காலத்திற்குரிய இந்த லிங்கம் எட்டுப் பட்டை வடிவமைப்பைக் கொண்ட அபூர்வ லிங்கமாகும்.
இது சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இது போன்று அமைக்கப்பட்ட 12 பட்டை, 16 பட்டை லிங்கங்கள் தென் இந்தியாவில் மாமல்லபுரம், கூந்தலூர் போன்ற இடங்களில் காணப்படுகின்றன.
இது போன்ற மேலும் சில அபூர்வமான லிங்கங்கள் இலங்கையில் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் காணப்படுகின்றன.
"6500 ஆண்டுகளுக்கு மேலாக சிந்துவெளி நாகரிகம் தொடக்கம் மாயன்கள் , இராவணன் என்று இன்றுவரை சிவலிங்கம் என்கிற பெயரில் ஒரு கல்லை நட்டு அதைக் கடவுளாகப் பாவித்து வழிபடுகிறார்களே ! இவ்வாறு கல்லை வழிபடுவதன்மூலம் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமா ? "
என்பதுதான் பெரும்பாலனோர்களின் கேள்வியாக இருக்கிறது.
ஆம் முடியும் என்கிறது இன்றைய விஞ்ஞானம் !!!!!!!
நீங்கள் எந்தக் கடவுளை வணங்குபவர்களாக இருந்தாலும் சரி . கடவுள் நம்பிக்கை அற்றவராக இருந்தாலும் சரி கொஞ்சம் நேரம் ஒதுக்கி இந்தப் பதிவை தயவு செய்து படியுங்கள் .அத்தோடு இங்கே நான் இணைத்திருக்கும் அனைத்துப் படங்களையும் கொஞ்சம் பொறுமையாகக் கூர்ந்து கவனியுங்கள்.
எகிப்திய பிரமிடுகளை ஆராய்ந்த ஆய்வாளர்கள் ஒரு விசயத்தைக் கவனித்தார்கள் . அதாவது எகிப்திய பிரமிடுகளில் வரையப்பட்ட ஓவியங்களில் பினியல் சுரப்பி முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. அப்படி என்ன முக்கியத்துவத்தை இந்த எகிப்தியர்கள் பினியல் சுரப்பியில் கண்டார்கள் என்று தொடர்ந்தும் ஆராய்ந்தார்கள்.
பினியல் சுரப்பியைப் பற்றிய ஆய்வுகளின்போது மேலும் பல நாகரீகங்களைச் சேர்ந்த மக்கள் இந்த பினியல் சுரப்பியை முதன்மை படுத்தியிருந்தமை தெரியவந்தது.
அதாவது பண்டைய மாயனகள் , எகிப்தியர்கள் , ரோமானியர்கள் , கிரேக்கர்கள் , கிறிஸ்தவர்கள் , பௌத்தர்கள் (புத்தர் ) , சைவர்கள் , இஸ்லாமியர்கள் என்று அனைவருமே இந்த பினியல் சுரப்பியை கடவுளுக்கு நிகரான இடத்தில வைத்திருந்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இந்த பினியல் சுரப்பியைத்தான் ஆரம்பத்தில் கடவுளாகவே பாவித்திருக்கிறார்கள். சைவர்கள் வழிபாடும் இந்த இலிங்கம்(கல் ) ஆண் பிறப்பு உறுப்பைக் குறிப்பதாகவும் இருக்கலாம் . அதே நேரத்தில் pineal gland என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற பினியல் சுரப்பியைக் குறிப்பதாகவும் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள் ஆய்வாளர்கள் . சிவனின் நெற்றியில் காணப்படும் நெற்றிக்கண் இந்த மூன்றாவது கண் என்றழைக்கப்படும் பினியல் சுரப்பியின் தன்மையினைக் குறிப்பதே என்று அடித்துக் கூறுகிறார்கள்.
அதாவது நமது உடல் இயக்கம் முழுவதையும் கட்டுப்படுத்துவது மூளை என்பது எல்லோருக்கும் தெரியும் . அந்த மூளையையே கட்டுப்படுத்தும் பிரதான அரசன்தான் இந்த பினியல் சுரப்பி என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்த ஓன்று.
ஆம் பினியல் சுரப்பியானது மூளையின் நடுப்பகுதியில் நெற்றிக்குப் பின்னால் அமைந்திருக்கும் ஒரு சிறிய கூம்பு வடிவிலான, ஒருவகை திரவகதினால் நிரப்பப்பட்ட அவையம் ஆகும் .
இந்தச் சின்னஞ் சிறிய சுரப்பிதான் மூளையையும் , அதனூடாக ஏனைய சுரப்பிகளையும் , முழு உடலையும் கட்டுப்படுத்துகிறது.
இந்த பினியல் சுரப்பியானது குழந்தை ஓன்று பிறக்கும் போது சுறுசுறுப்பாக இருப்பதாகவும் பின்னர் குழந்தை வளர வளர மந்த நிலைக்கும் போய்விடுவதாகவும் சொல்கிறார்கள் . சாதாரண மனிதர்களுக்கு பினியல் சுரப்பி உறங்கு நிலையிலேயே காணப்படுமாம்.
இந்த பினியல் சுரப்பியை தட்டி எழுப்பி சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் போது மனிதன் அளவுகடந்த அறிவாற்றலைப் பெற்றுக்கொள்ள முடியுமாம்.
இந்த பினியல் சுரப்பியின் சூட்சுமத்தை அறிந்துகொண்ட காரணத்தால்தான் எகிப்தியர்களால் இன்றய விஞ்ஞானத்தால் கூட அமைக்க முடியாத அளவுக்கு அற்புதங்களைக் கொண்டுள்ள பிரமிடுகளை அமைக்க முடிந்திருக்கிறதாம்.
அதுபோல மாயன்கள் அமைத்துள்ள பிரமிடுகள் மற்றும் நக்ஸா இறங்குதளம் , கம்போடியாவில் காணப்படும் அங்கோர்வாட் ஆலயம் போன்ற பல உலக அதிசயங்கள் உருவாக்கப்பட்டனவாம்.
இராவணன் மற்றும் நம் சித்தர்கள் , யோகிகள், புத்தர் , இயேசு , நபிகள் ஆகியோரும் இந்தப் பினியல் சுரப்பியையும் அதனை எவ்வாறு தட்டி எழுப்பி அளவில்லா சக்திகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிந்து வைத்திருந்தனராம் .
அதனை நாமும் அறிந்து நலமாக வாழவே அதற்கான வழிமுறைகளை வகுத்துக் கொடுத்துவிட்டுப் போய் உள்ளனராம்.
அவற்றைத் தந்திரமாகப் புரிந்துகொண்ட இலுமனாட்டிகள் அந்த இரகசியங்களைத் தாங்கள் திருடிக்கொண்டு உலக மக்களை திசை திருப்பும் வேலையை வெற்றிகரமாகச் செயல்படுத்தி இன்று உலகை தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்து விட்டார்கள் .
அதாவது காலையில் எழுந்ததும் நாம் பல் துலக்கப் பாவிக்கும் புளோரைட் கலந்த பற்பசை முதல் குடிக்கப் பயன்படுத்தும் குளோரின் கலந்த தண்ணீர் உற்பட அன்றாடம் நம் வாழ்வில் பாவிக்கும் அனைத்துப் பொருற்களிலும் இந்த பினியல் சுரப்பியைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் இரசாயணக் கலப்படங்களைச் செய்து மனிதர்களை கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக, புத்திக் கூர்மை அற்றவர்களாக , சிந்திக்கும் திறன் அற்றவர்களாக மாற்றி, மனிதர்களை யோகிகள் போல் சக்தி பெற்றவர்களாக ஆகிவிடாமல் பார்த்துக் கொள்கிறார்களாம்.(இலுமனாட்டிகளின் கொள்கை பற்றி அறிந்தவர்களுக்குப் புரியும் )
சரி பினியல் சுரப்பியை எவ்வாறு வழிக்குக் கொண்டுவரலாம் ?
சாதாரணமாக மூலையில் அல்லது மனதில் இலட்சக் கணக்கான எண்ணங்கள் தோன்றுவது இயல்பு . அந்த எண்ணங்களின் வெள்ளத்தில் பினியல் சுரப்பி அமிழ்ந்து செயலிழந்து விடுகிறது . ஆகவே அந்த எண்ணங்களைக் கட்டுப்படுத்தி நிறுத்தி வைப்பதன்மூலமும் , பினியல் சுரப்பிக்கு தேவையான அதிர்வுகளைக் கொடுப்பதன் மூலமும் , பினியல் சுரப்பியை உற்சாகப் படுத்தக்கூடிய சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்பதன் மூலமும் , பினியல் சுரப்பியை முடக்கும் உணவுகளை , பழக்க வழக்கங்களை நிறுத்துவதன் மூலமும் , யோகா ,சிரசாசனம் செய்வதன் மூலமும் பினியல் சுரப்பியை இயங்கு நிலைக்குக் கொண்டு வரலாம்.
ஆழ்ந்த தியானம் , வழிபாடு , இசை , மந்திர ஒலிகள், வாசனைகள் மூலமாக மனதை ஒருநிலைப்படுத்தி அதன்மூலம் பினியல் சுரபியை இயங்கு நிலைக்குக் கொண்டு வரலாம்.
மனதைச் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளக்கூடிய செயல்களான சேவை செய்தல் , பிறருக்கு உதவுதல் , தருமம் செய்தல் , சுற்றுலாக்கள் செல்தல் , காடுகள் மலைகள் ஏறுதல் , விளையாடுதல் போன்ற மனதிற்க்குப் பிடித்தமான காரியங்களை குற்ற உணர்வின்றிச் செய்வதன் மூலமும் பீனல் சுரப்பியை ஓரளவுக்கு இயங்கச் செய்யலாம்.
அந்த அடிப்படையில்தான், கிறிஸ்தவர்கள் செபமாலையைச் சுழற்றுவது , மெழுகுவர்த்தியைக் கூர்ந்து கவனிப்பது , இசையை இசைத்து பாடல்கள் பாடுவது , ஆழ்ந்த நம்பிக்கையில் வழிபாடு செய்வது போன்ற செயல்களால் மனதை ஒருநிலைப் படுத்தி இந்த சுரப்பியை தூண்ட முனைகிறார்கள்.
இஸ்லாமியர்கள் ஒருவித மாலையைச் சுழற்றுவது , இறைதுதியை ஓதுவது , ஆழ்ந்த நம்பிக்கையோடு வழிபாடு செய்வது , சிலவகை வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்வது , சில மாமிசங்களைத் தவிர்ப்பது , மதுவை தவிர்ப்பது , நெற்றியை நிலத்தில் மோதி வழிபாடு செய்வது போன்ற செயல்பாடுகளால் பினியல் சுரப்பியை தூண்ட முனைகிறார்கள்.
பௌத்தர்கள் சிலவகை மந்திர ஒலிகளை தொடர்ந்து எழுப்புவதன்மூலமும் ,நிலத்தில் நெற்றியை மோதுவதன் மூலமும் , மாமிசங்களை தவிர்ப்பது மூலமாகவும் , வாசனை மலர்களை படைப்பது மூலமும் பினியல் சுரப்பியைத் தூண்ட முனைகிறார்கள்.
இந்துக்களைப் பற்றி நான் சொல்லவே தேவியில்லை . மேற்கண்ட அனைத்தையும் செய்கிறார்கள் . தவிர சிலைகளை மட்டுமின்றி கல்லைக்கூட கடவுளாக பாவித்து மனதை ஒருநிலைப் படுத்தி அதன்மூலம் பினில் சுரப்பியை தூண்ட முனைகிறார்கள் .
நெற்றியில் நீறுபூசுவதன் மூலமும் , திலகம் இட்டுக்கொள்வதன் மூலமும் , நிலத்தில் நெற்றி உரசும்படி வழிபாடு செய்வதன்மூலமும் மேலும் தியானம் , தவம் , மந்திர உச்சரிப்புக்கள் , மணியோசைகள் , சங்கு , மேளம் போன்றவற்றின் ஓசைகள் ,பக்திப் பாடல்கள் , ஊதுவர்த்தி , வாசனை மலர்கள் போற்றவற்றின் நறுமணங்கள் , கற்பூர ஒளி , விளக்கொளி போற்றவைஎல்லாம் பாவித்து இந்த பினியல் சுரப்பியை தூண்டுவதாலேயே இந்துக்கள் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முனைகிறார்கள்.
இதை அன்று கொஞ்சம் கடுமையாக அல்லது சிரத்தையாக நம்பிக்கையோடு செய்த காரணத்தால் இராவணன் போன்றவர்கள் அதிகமான சக்தியைப் பெற்றுக்கொண்டார்கள்.
இன்றைய உலகில் வாழும் மனிதர்களின் பினியல் சுரப்பி பெருமளவுக்குச் சேதம் அடைந்திருப்பதே அவர்கள் தனக்கு மேலான சக்தியைப் பெற முடியாமல் அல்லது அது பற்றி சிந்திக்க முடியாமல் , நம்பிக்கையற்று காணப்படுகிறார்கள் . இதுவே நாம் இன்று சந்திக்கும் பிரச்சினைகளுக்கும் பிணிகளுக்குமான காரணம் .
நம் முன்னோர்கள் அனைத்தையும் அறிந்திருந்தபோதும் அதை அனைவரும் புரிந்துகொள்ளும்படி கற்பிக்காமல் இறைவன் என்றொருவனை மகிழ்ச்சிப் படுத்தினால் எல்லா நன்மைகளும் கிடைத்துவிடும் . நினைப்பதெல்லாம் நடந்து விடும். அதனால் இறைவனை மகிழ்ச்சிப்படுத்த இப்படியெல்லாம் வழிபாடுகளைச் செய்யவேண்டுமென்று சொல்லிக்கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள்.
(உண்மையில் இறைவன் என்றொருவன் இருந்திருந்தால் அவன் புகழ்ச்சிகளையும் , போற்றுதல்களையும் எதிர்பார்த்தோ , அதனால் மகிச்சியடந்து அருள் புரிபவனாகவோ இருந்திருக்க முடியுமா ?)
ஒருவேளைஅந்தக்காலப் பகுதியில் வாழ்ந்திருந்த பாமர மக்கள் அனைவருக்கும் அனைத்தையும் புரிந்துகொள்ளும் அளவுக்கு அறிவாற்றல் இல்லாமல் இருந்திருக்கலாம் .
இந்த அடிப்படையில் நோக்கினால் கடவுளை வழிபட்டாலோ, கல்லை வழிபட்டாலோ அல்லது கழுதையை வழிபட்டாலோ எல்லாமே ஒன்றுதான் .
எதை நினைத்தாவது மனதை ஒருமுகப்படுத்தினால் போதும் அதன்மூலம் பினியல் சுரப்பி தூண்டப்படும் ., எவ்வளவு தூண்டப் படுகிறதோ அவ்வளவு தெளிவு கிடைக்கும் . தெளிவு பிறக்கும் போது தீர்வுகளும் பிறக்கும் .
இதை ஆங்கில வல்லுனர்கள் மூன்றாவது கண் என்கிறார்கள்.
நாம் ஏழாவது அறிவு என்கிறோம் . அல்லது நெற்றிக்கண் என்கிறோம் .
சரி நான் சொல்வது எந்த அளவுக்கு உண்மை என்று நீங்கள் சிந்திக்கலாம் . என்னைப்பொருத்தவரை கடவுள் எனப்படுவதே இந்தபினியல் சுரப்பியாகதான் இருக்கவேண்டும் .அல்லது கடவுள் எனப்படுகின்ற பிரபஞ்ச சக்தியோடு மனிதனை இணைக்கும் பாலமாக இந்தச் சுரப்பிதான் இருக்கிறது .இந்த பினியல் சுரப்பியைப் பற்றி அதன் அபார ஆற்றலைப்பற்றி அனைவருக்கும் புரியும்படியாக அனைவரும் நம்பும் படியாக தெளிவாக எழுதுவதென்றால் அது 500 பக்கக் கட்டுரையாக அமைந்து விடும் . எனவே அதை முடிந்த அளவுக்கு சுருக்கமாக எழுத முனைந்துள்ளேன் .
அதனால் படங்களைக் கூர்ந்து கவனியுங்கள் .
// எகிப்திய பிரமிடுகளில் காணப்படும் சிலைகளின் ஓவியங்களில் காணப்படும் பினியல் சுரப்பியின் வடிவமுள்ள படங்கள் //
//எகிப்தியர்களின் மற்றும் மாயன்களின் கூம்புவடிவ பிரமிடுகள் //
//வத்திகான் நீதிமன்றின் வாயிலில் காணப்படும் பினியல் சுரப்பியின் வடிவம் //
// பாபரசரின் கையில் உள்ள கோலில் காணப்படும் வடிவம் //
//கிறிஸ்துமஸ் மரம் //
//கூம்பு வடிவையொத்த தேவாலயங்கள் //
//ரோமானியர்களின் கலைகளில் காணப்படும் வடிவம் //
//கூம்பு வடிவில் அமைக்கப்படும் பௌத்த விகாரைகள் //
//புத்தரின் தலையில் காணப்படும் வடிவம் //
//சிவனின் நெற்றிக்கண் அல்லது சிவலிங்கம் //
//கோயில்களின் கோபுரங்கள் //
//இந்துக்கள் தலையில் எண்ணெய் தேய்த்து நீராடுவது . சந்தானம் பூசுவது ,சந்தனத்தால் திலகம் இட்டுக்கொள்வது போன்ற செயல்கள் இந்த பினியல் சுரப்பியை குளிர்மை படுத்துவதற்கே//
//அங்கோர்வாட் கோவிலின் கோபுரங்கள் //
//இந்துக் கடவுள்களின் தலையில் உள்ள கவசங்கள் //
//கூம்பு வடிவான பள்ளிவாசல்கள் //
//இஸ்லாமியர்கள் தொழுகைக்கு முன்னர் ஒழு செய்வார்கள் . அதாவது நீரால் காதுக்குள் சுத்தம் செய்வார்கள் . இன் நிகழ்வு இந்த பினியல் சுரப்பியை குளிர்மை படுத்துவதற்க்காகவே செய்யப்பட்டிருக்க வேண்டும்.//
கூம்பு வடிவில் அமைந்த இவை அனைத்தும் இந்த பினியல் சுரப்பியைக் குறிப்பதாகவே இருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்கள் முன் வைக்கும் வாதம் . இதில் ஒன்றிரண்டு தவறு இருக்கலாம். ஆனால் பெரும்பாலானவை சரியானவையே

No comments:

Post a Comment