Thursday 19 December 2013

பெண்களுக்கான சிவாங்கா சாதனா

"பைரவியின் அருளைப் பெற்றவர்கள் வாழ்வு, மரணம், ஏழ்மை, தோல்வி குறித்து அக்கறையோ அச்சமோ கொள்ளத் தேவையில்லை. பைரவியின் அருளைப் பெற்றால், எவையெல்லாம் நல்வாழ்வு என ஒரு மனிதர் கருதுகிறாரோ, அத்தனையும் அவருக்குக் கிடைக்கும்." - சத்குரு

பூமியின் வடக்கு பாகத்தில், சூரியன் பயணிக்கும் 6 மாத காலகட்டத்தை உத்தராயணம் என்று குறிப்பிடுகிறோம். அருளையும் ஞானத்தையும் உள்வாங்கிக் கொள்வதற்கு இது மிகச் சரியான நேரம். அதிலும் குறிப்பாக உத்தராயணத்தின் முதல் பாதி அதாவது மார்ச் மாதம் முடியும் வரை அதிகபட்சமான அருளைப் பெறுவதற்கு மிகச் சிறப்பான நேரம். இந்தக் காலகட்டத்தை ஒருவர் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதற்காக, சத்குருவின் வழிகாட்டுதலில் பெண்களுக்கான சிவாங்கா சாதனா லிங்கபைரவியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

27 டிசம்பர் 2013ல் துவங்கி 17 ஜனவரி 2014 வரை, 21 நாட்கள் பக்தர்கள் விரதமிருந்து, தைப்பூச தினத்தன்று தேவி லிங்கபைரவியை தரிசித்து, விரதத்தை பூர்த்தி செய்யலாம்.

தேவியின் அருள் நம் இல்லத்தில் நிறைய, இது ஓர் அற்புதமான வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறது.
விவரங்களுக்கு

தொலைபேசி: 83000 30666

No comments:

Post a Comment