Friday 20 December 2013

கேள்வி மதமாற்றம் பற்றி உங்கள் கருத்து? சத்குரு: மனிதன் தனக்குள் இருக்கும் இறைத்தன்மையை உணர்வதற்கான வாய்ப்பளிக்க, அவன் உள்நோக்கி அடியெடுத்து வைப்பதற்காகவே மதங்கள் உருவாக்கப்பட்டன. தெருவில் கூவி விற்பதற்காக அல்ல. எண்ணிக்கையைக் கூட்டிக் காட்ட வேண்டும் என்பதற்காக எதையும் செய்யத் துணியும் மூர்க்கத்தனத்திற்குப் பெயர் மதம் அல்ல! ‘நான் நம்பும் கடவுளை நீயும் நம்பு… இல்லையென்றால், கொன்று விடுவேன்’ என்று கத்தி முனையில் திணிப்பது மதமல்ல. அதேபோல, பசியும், ஏழ்மையுமாக இருப்பவர்களுக்கு உணவும், கல்வியும் கொடுப்பது உன்னதமான செயல்தான். ஆனால், சாப்பாட்டைக் காட்டித் தன் பக்கம் வரச் சொல்வது எப்பேர்ப்பட்ட ஆபாசம்? பசித்தவனுக்கு உணவுதான் கடவுள். அதை நம்பித்தான் அவன் மதம் மாறுவானே ஒழிய, அவனுக்குப் புதிய கடவுள் மேல் விசுவாசம் வந்துவிடப் போவதில்லை. தங்கள் கடவுள் மேல் உண்மையான நம்பிக்கை இருப்பவர்களுக்கு, பல்லாயிரக்கணக்கான வருடங்கள் வளர்ந்த பாரம்பரியம் மிக்க ஒரு கலாச்சாரத்தைத் தகர்த்துத் தன் பக்கம் கூட்டம் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. எந்த ஒரு மதத்துடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதைவிட, ஒரு கலாச்சாரத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதே மனிதனுக்கு மேன்மையானது

No comments:

Post a Comment