Wednesday 11 December 2013

ஆறு வகைக் காலங்களில் தற்போது கார்காலத்தில் இருத்து முன்பனிக்காலத்திற்கு [ கார்த்திகை to மார்கழி ] மாறிக் கொண்டிருக்கிறோம் . தம் வரிகளில், "காலங்களில் அவள் வசந்தம் "
மாதங்களில் அவள் மார்கழி ! எனப் பாடியது ஏனோ
அதிகாலைப் பனியில் குளித்து முடித்து பல வண்ண மாக்கோலம் இடுவதும் ,இறை நாமம் சொல்வதும் ,மாலை வேளைகளில் சங்கீதம் ,நாட்டியம் என லயிப்பதும் ரசனையாய் நகரும் மார்கழிப்பொழுதுகளின்
செயல்முறைகளை உற்று நோக்கினால், பரந்த ஆன்மீக அறிவியலின்
பின்புலத்தை அறியலாம் .
தட்சிணாயனத்திலிருந்து உத்தராயணத்திற்கு காலம் பெயர்ச்சி செய்யும்
வேளையில் பக்தி எனும் விதையை நம் மனதில் தீவிரமாக மார்கழியில் விதைத்து விட்டால் , தையில் அதன் பலன்களை அறுவடை செய்யலாம் என்கிற ஒரு மென்மையான ஆன்மீக செயல்முறைதான் மார்கழியோ
நவீன மார்கழி !
வண்ணக் கோலங்கள் இட எங்கே ? ஐ-போன் கால மாணவிகளுக்கும்
சாஃப்ட்வேர் யுவதிகளுக்கும், ஆண்களுகோ அதிகாலைக் குளிரில் போர்வையை இழுத்துப் போர்த்தி தூங்குவதில்தான் எத்தனை இன்பம் .
அடியேன் உட்பட !..
இவ்வாறு மார்கழிக் கால ஆன்மீக அடிப்படையிலிருந்து நாம் சற்று தொலைவில் வந்தாலும் கூட , நம் ஆரோக்கிய அடிப்படையும் அல்லவா
குளிரில் ஆட்டம் காண்கிறது ! ஆம் - காது, முக்கு , தொண்டையில் Infection , சைனஸ் , தும்மல் , ஆஸ்துமா , வீசிங் போன்றவைக்கு வயதானோர் , குழந்தைகள் , நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தோர் எளிதாக சிக்குகின்றனர்
நோய் தடுக்கும் உபாயங்கள் உடல் வெப்பத்தைத் தக்க வைத்து , நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கக் கூடிய உணவு முறைகளை அறிந்து கொள்வது அவசியம் . " 10 மிளகு இருத்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் " சுவாசக் கோளாறுகளை தடுக்கவும்
முறை : 35 மிளகுகளை இரவு வேளையில் தேனில் ஊற வைத்து (8-10 மணி நேரம் ) பின் அவற்றை வெறும் வயிற்றில் மென்று உண்டால் சிறந்த பலன்களை அடையலாம் .

No comments:

Post a Comment