Monday 9 February 2015

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!
அக்குப்பிரஷர்
நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக்கொள்கிறோம்.
அப்படி செய்தால், வலி குறைகிறது.
இது எப்படி ஏற்படுகிறது?
நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர்புள்ளிகள் உள்ளன.
நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன.
அதனால் வலி குறைகிறது.
உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன.
நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன.
சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம்.
தலைவலி :
நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’ என்று கூறி தப்பித்து கொள்கிறோம்.
ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்?
வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம்.
அவை கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம்.
அடிக்கடி மாத்திரைகள்எடுத்து கொள்வதால், அசிடிட்டியால்துன்பப்படுகிறோம்.
மருந்தில்லாமல் தலைவலியை எப்படி போக்குவது?
நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு புள்ளிகள்,
நம் உள்ளங்கைகளில் உள்ளன.
படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும்.
கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ளகட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
14 முறைஅழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும்.
அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே
இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை
வெளியே விடவும்,
14 முறை முடிப்பதற்கு முன்பே
தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன்
நிறுத்தி விடலாம்.
வலி இன்னும் தொடர்ந்தால், மற்றொரு கை
கட்டைவிரலில் 14 முறை அழுத்தம்
கொடுக்கவும்.
அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள்
தலைவலி போயே போச்சு!
அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் :
ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ்
புள்ளிகள் உள்ளன.
விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்து
தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ், தும்மல்,
இருமல் இவை வெகுவாக
குறைக்கப்படுகின்றன.
விரலின் முதல் கோடு வரை, மேலும்,
கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14
முறைகளும் அழுத்தம் கொடுக்க
வேண்டும்.
10 விரல்களிலும் இவ்வாறு தினமும்
இருமுறைகள் காலையிலும், மாலையிலும்
செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை
மறைகின்றன.
மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன.
ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக
குறைகிறது.
மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி,
வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு:
ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும்
நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில்
ஒரு கோடு தெரியும்.
அந்த கோடு முடியும் இடத்தில், ஆள்காட்டி
விரல் எலும்பின் கடைசியில் எல்.ஐ.4 என்ற
புள்ளி உள்ளது.
மேற்கூறிய அனைத்து தொந்தரவுகளையும் நீக்க
இப்புள்ளி உதவுகிறது.
இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம்
கொடுத்து தளர்த்த வேண்டும். (Press & Release)
தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது
அழுத்தம் கொடுக்க வேண்டாம்.
பாதிப்பு உள்ளவர்களுக்கு,இப்புள்ளியில்
அழுத்தும் போது வலிதெரியும்.
இரு கைகளிலும் அழுத்தம்
கொடுக்கலாம்.
அசிடிட்டி
அசிடிட்டிக்கு, “ஆன்டாசிட்’ மருந்து
தேவையில்லை.
இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது,
அதிகமான வாயு வெளியேறுகிறது.
மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு, இப்புள்ளி
உடனடி நிவாரணம் அளிக்கிறது.
மலச்சிக்கல் :
மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது.
மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை
உண்டாக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ளமுகவாயில் உள்ள
CV24 என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க
பெரிதும் உதவுகிறது.
LI4 என்ற புள்ளியை இரு கைகளிலும்
அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளியில் 14
முறைகள் அழுத்தம் கொடுத்தால்,
மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம்.
கழுத்து வலி :
கணினியில் வேலை செய்வதால், கழுத்தில்
உள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை
உண்டாக்குகின்றன.
எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம்.
கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை
விரலின் அடிப்பகுதி கழுத்தை குறிக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ளஇப்பகுதியில்
உள்ள இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின்
இரு விரல்களினால், 14 முறைகள் அழுத்தம்
கொடுக்க வேண்டும்.
பின், கட்டை விரலை கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும்,
எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும்.
இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது,
கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம்
வெகுவாக குறைகிறது.
கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம்
கிடைக்கிறது.
உயர் ரத்த அழுத்தம் :
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வாழ்நாள்
முழுவதும் மாத்திரை எடுத்துக் கொள்ள
வேண்டியிருக்கும்.
அக்குப்பிரஷர் முறையில் கீழ்க்கண்ட
புள்ளிகளில் தினமும் அழுத்தம் கொடுக்கும்
போது, சிறிது, சிறிதாக மாத்திரையின்
அளவை குறைத்து, கடைசியில்
முழுவதுமாக நிறுத்தவும் முடியும்.
நம் கையில் சிறுவிரலின் நகத்திற்கு கீழே
உட்புறமாக H9 என்ற புள்ளி உள்ளது.
இது, இதய மெரிடியனின் காற்று சக்திப்புள்ளி.
இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது,
காற்று சக்தி அதிகரித்து, ரத்தக் குழாய்கள்
விரிவடைந்து, ரத்த அழுத்தம்
குறைகிறது.
தலை உச்சியில்GV20 என்ற புள்ளி உள்ளது.
காதுகளிலுருந்துதலைக்கு செல்லும்
நேர்கோடும், மூக்கிலிருந்து தலைக்கு
செல்லும் நேர்கோடும் சந்திக்கும் இடத்தில்
இப்புள்ளி உள்ளது.
இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம்
கொடுக்கும் போது, டென்ஷன், மன அழுத்தம்
இவை குறைவதால், ரத்த அழுத்தம்
சீராகிறது.
H9 , GV20 இப்புள்ளிகளில்,14 முறைகள்
காலையிலும், மாலையிலும் இருவேளைகள்
அழுத்தம் கொடுத்து வந்தால், உயர்ரத்த
அழுத்தம் சீரடைகிறது.
இதை தவிர காலில், பெருவிரல்,
இரண்டாவது விரல் இவற்றின் இடைவெளியிலிருந்து,
மூன்று விரல் தூரத்தில் LIV3 என்ற புள்ளி
உள்ளது.
இப்புள்ளியில் 7 முறைகள் அழுத்தம்
கொடுக்கும் போது, ரத்த அழுத்தம் சீராகிறது.
இப்புள்ளியில் ஒரு நாளில் ஒரு முறை
மட்டுமே, 7 முறைகள் மட்டுமே அழுத்தம்
கொடுக்க வேண்டும்.
அதிக முறைகள் அழுத்தம் கொடுத்தால், ரத்த
அழுத்தம் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது.
இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!
மனிதநேய விதைகளாய் மாறுவோம்..

No comments:

Post a Comment