Saturday 9 April 2016

இன்று சனிக்கிழமை
சனி கிழமை சனிபகவானுக்கு உகந்த தினமாகும். கருப்பு நிற உடை சனிபகவானுக்கு உகந்தது. இந்த நாளில் கோவிலுக்கு சென்று சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சனி தோஷம், ஏழரை சனி நடப்பவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் சனியின் தாக்கம் குறையும்.
சனிபகவான் மந்திரங்களும் அந்த மந்திரங்களால் ஏற்படும் நன்மைகள்
சனீஸ்வர காயத்ரி மந்திரம்
ஓம் சனைச்சராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தந்நோ: மந்தப்ரசோதயாத்
ஓம் காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்
ஸ்லோகம்
நீலாம்பரோ, நீலவபு: கிரீடி
க்ருத்ரஸ்தித: சத்ராஸக ரோ தநுஷ்மான்
சதுர்புஜ: ஸுர்யஸு: ப்ரசாந்த:
ஸதாஸ்து மஹ்யம் வரத: ப்ரஸன்ன:
இந்த மந்திரங்களால் ஏற்படும் பயன்கள்
மிகவும் சாந்தமானவரும், வரத்தை அளிப்பவருமான சனி பகவானைத் தியானம் செய்தால் ஆயுள் விருத்தியாகும்,
விவசாயத்தில் மேன்மை,
எருமை விருத்தி,
இரும்புத் தொழில்கள், செங்கல் காளாவாயினால் லாபம் ஏற்படும்,
உத்தியோகம் செய்யும் இடத்தில் மனநிம்மதி ஏற்படும்.
வேலைக்காரர்களால் நன்மை பெறலாம்.
எலும்பு, பற்கள், கணை சம்பந்தமான நோய்கள் வராமல் இருக்கும்.
சளி, நெஞ்சுக் கட்டு, வாத நோய்கள் தடுக்கும்
சட்டபூர்வமான தண்டனை, சிறைவாசம், கட்டுப்படுதல், சில சமயங்களில் விபத்துக்கள், மனோதைரியம் இழந்து தடுமாறுதல், சித்தப்பிரமை, மேகநீர் உபத்திரவம் ஏற்படாமல் இருக்க போன்றவை நெருங்காமல் தடைபடும்.
சனி ஸ்தோத்திரம்
ஸூர்யபுத்ரோ தீர்க்கதேஹோ விசாலாக்ஷ: ஸிவப்ரிய:
தீர்க்கசார: ப்ரஸந்நாத்மா பீடாம்ஹரதுமே ஸனி:
சூர்யபுத்திரனும், நீண்டதேஹமுள்ளவனும், சிவப்ரியனும் தெளிந்த மனம் உள்ளவனுமான சனீஸ்வரபகவான் என்னுடைய தோஷத்தை எல்லாம் போக்க வேண்டும்
மேலும் விசேடமாக சனீஸ்வரனின் கிருபா கடாட்சத்தை பெறுவதற்காக அவரது கவசம் ஒன்றினை இங்கே தருகின்றேன்.
ஓம் அஸ்ய ஸ்ரீ சனைச்வர கவச
மஹா மந்தரஸ்ய – காஸ்யப ரிஷி
அனுஸ்டுப் சந்த சனைச்சரோ தேவதா
சம் பீஜம் நம் சக்தி மம கீலகம்
மம சனைச்சர கிரஹப்ரசாத
ஸித்தியர்த்தே ஜபே விநியோக!
இதனை தினசரி ஒருமுறை தியானிப்பின் சனி பகவானால் ஏற்பட்ட சங்கடம் விலகி மங்களம் உண்டாகுமாம். என சனிபகவானைப் பற்றிய விபரங்கள் அடங்கிய பல நூல்கள் மூலம் அறிய முடிகின்றது.
சனிக்கான உடல் கட்டு மந்திரம்..
"போடுவாய் சனிபகவான் கட்டுக்கேளு
புகழான ஸ்ரீம் றூம் றூம் என்று சொல்லி
தேடுவாய் லட்சமுருப் போடு போடே"
- அகத்தியர் -
சனி பகவானின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "ஸ்ரீம் றூம் றூம்" என்று லட்சம் உரு செபித்தால் சனி பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.
Like
Comment

No comments:

Post a Comment