Saturday 9 April 2016

நன்மை தரும் அனுமன் மந்திரம் ......




     இறைதன்மை கொண்டுள்ள யாரும் வயது வித்தியாசம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் உச்சரிக்கலம். 1008 தடவை உச்சரித்தால் போதும், அதன் வரிகள் உங்கள் மனதில் பதிந்து விடும். ஆஞ்சநேயரை பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்களை பற்றி அறிந்து கொண்டு தொடர்ந்து மந்திரத்தை உச்சரிக்கவும். ஆஞ்சநேயர் மந்திரஙததை 108 தடவை உச்சரித்து விட்டு எங்கு சென்றலும் அது நன்மையாக இருக்கும் நினைத்தது நடக்கும்.


   இலங்கைக்கு பாலம் அமைக்கும் திருவேலையில் அனுமன் தீவிரமாக இருந்த போது வந்தார் சனி பகவான்.

        "ஆஞ்சநேயா உன்னை இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும். உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல் அங்கு இரண்டரை மணி நேரம் இருந்துவிட்டு போய்விடுகிறேன்" என்றார்.

         "கடமையைச் செய்து கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்தல் தவறு. அதனால், தலையில் உட்கார்ந்து கொள்" என்றார். சனி பகவானும் ஏறி அமர்ந்தார். கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றினார் அனுமன். பாரம்தாங்காமல் சனிபகவான் அலறினார். "சொன்ன சொல் தவறக்கூடாது. இரண்டரை மணி நேரம் கழித்து தான் இறங்க வேண்டும்" என்றார் அனுமன்.

        அதன் பிறகே இறக்கிவிட்டார். "ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை" என்று கூறிவிட்டு அகன்றார் சனீஸ்வரன்.

          அனுமனுக்கு துளசி சாத்தி வழிபட்டால், சனிஸ்வரனின் பாதிப்புக்களில் இருற்து விடுபடலாம்..

          செல்வ வளம் தரும் மந்திரங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் ராமபிரானின் உதவியாளராகிய அனுமனும் மந்திரம் மிகவும் சிறப்பு.

மூலமந்திரத்தை இலட்சத்தெட்டு உரு ஜெபித்துக் கொண்டு வந்தால் அனுமன்
அருள் கிடைக்கும்

"ஓம் ஹ்ரீம் உத்தரமுகே, ஆதிவராஹாய, பஞ்சமுகி ஹனுமதே, லம் லம் லம் லம் கைல ஸம்பத் கராய ஸ்வாஹா"

No comments:

Post a Comment