Saturday 9 April 2016

உங்கள் கடன்பிரச்சினை தீர பொருளாதார முன்னற்றம் அடைய ஒரு இரகசிய வாழிபாட்டு முறை
முருகனின் வாகனம் மயில் கிருஷ்ணரின் தலையிருப்பது மயிலிறகு என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் ஆனால் அந்த மயிலுக்கும் மயிலிறகுக்கும் தெய்வீக சக்தி இருப்பது பலருக்கு தெரியாது பல சித்தர்களும் சாமியார்களும் பூசாரிகளும் மயிலிறகை பயன்படுத்தியிருப்பதை நீங்கள் பாரத்திருக்கிறீர்களா
அப்படிப்பட்ட மயிலின் சக்தியை பயன்படுத்தி நமது பிரச்சினைகளை நாமே தீர்த்து கொள்ளலாம்
நீங்கள் எங்காவது கோயிலுக்கு சென்றாலோ சுற்றுலா தளத்திற்கு சென்றாலோ அந்த சமயத்தில் மயில் உங்கள் கண்களில் தென்பட்டால் உடனே அங்கு சென்று மயிலின் காலடித்தடம் மண்ணில் தெரிகிறதா என்று பாருங்கள் காலடித்தடம் தெரிந்தால் அந்த மண்ணை அள்ளி எடுத்துக்கொன்டு வீட்டிற்கு வந்து அந்த மண்ணில் கொஞ்சம் நீர் ஊற்றி பிசைந்து பிள்ளையார் பிடிப்பது போல் கொழுக்கட்டை மாதிரி பிடித்து வைத்துக்கொள்ளுங்கள் பிடிமானம் சரியாக இல்லாமல் உதிரும்படி இருந்தால் கொஞ்சம் களிமன் அல்லது பசுஞ்சாணம் சேர்த்து பிடித்து வைத்துக்கொள்ளவும் இதை சிலையாக செய்ய முடிந்தால் அது உங்கள் திறமை இந்த சிலையை நடுவீட்டில் அதாவது பூஜையறையில் வைத்து தினமும் ஒரு ஊதுபத்தி கற்பூரம் காட்டி வரவும் இதனால் உங்கள் கையிலும் பையிலும் பணப்புழக்கம் அதிகரிக்கும் உங்கள் பொருளாதார நிலை முன்னேற்றமடையும் கடன்கள் EMI LOAN தீர்க்க கூடிய வழிவகை உண்டாகும் வீட்டில் தீய சக்தி மற்றும் வாஸ்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வீட்டில் உள்ள குழப்பங்கள் நீங்கி நிம்மதியும் அமைதியும் கிடைக்கும் பணம் மற்றும் நகைகள் சேர்ந்து பொருளாதார முன்னேற்றத்தை கொடுக்கும்
ஒருவேளை மயில் உங்கள் கண்களுக்கு அகப்படவில்லையென்றால் தெருவில் அல்லது நாட்டுமருந்து கடையில் கிடைக்கும் மயிலிறகை வாங்கி வந்து வீட்டின் தெற்கு பகுதி சுவற்றில் வடக்கு திசை பார்த்தவாறு ஒட்டி வைத்து கொள்ளுங்கள் (குபேரன் வடக்கு திசையில் குடியிருக்கிறார்)
இதற்கு தினமும் ஊதுபத்தி ஒரு நிமிடம் வரை கட்டாயம் சுற்றுங்கள் இதற்கும் மேற்சொன்ன பலன்கள் பொருந்தும் இந்த வழிபாட்டில் எந்த மந்திர உச்சாடனமும் கிடையாது
பலன் கிடைக்க 3 மாதம் முதல் 6 மாதம் கூட ஆகலாம் அது உங்களது தீவிர வழிபாட்டையும் விடாமுயற்சியையும் நம்பிக்கையையும் பொறுத்தது இதை மயூரிகா தந்த்ரம் என்று தாந்த்ரீகள் கூறுகிறார்கள் இது போன்ற இரகசிய தந்த்ரா முறையிலான வழிபாடு மற்றும் பரிகாரங்கள் மூலம் சேட்டுகளும் மார்வாடிகளும் செல்வந்தர்கள் ஆனார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா

No comments:

Post a Comment